சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

தனித்தொகுதி எம்,எல்,ஏக்கள் எம்,பி க்கள் பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லையே ஏன்? பா.
Updated on : 07 December 2018

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பாராட்டுவிழா சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. 



நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் , இந்தியகுடியரசு கட்சியின் தலைவர் சே,கு தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித்  



இன்றும் நாம் கூட்டம் போட்டு சமத்துவம், சகோதரத்துவம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் ஊரில் பட்டியலின மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் வேலைகளையும் , சாதிவெறியையும் தூண்டிவிடும் வேலைகளையும் மிகச்சிறப்பாக செய்துவருகிறார்கள். 



சமீபத்தில் நடைபெற்ற பட்டியலின மக்களின் படுகொலைகளைப்பற்றி பேசுவதற்க்கு கூட இங்கு தலித் கட்சிகளும் , கம்யூனிச தோழர்கள் மட்டுமே வருகிறார்கள். ஆனால் தனித்தொகுதிகளில் பட்டியலின மக்களால் வாக்குகள் பெற்று இன்று எம்,எல்,ஏக்களாக எம்,பி க்களாக இருப்பவர்கள் ஒரு சின்ன கண்டன அறிக்கைக்கூட விடுவதில்லை.  எந்த மக்கள் ஓட்டுகளை வாங்கி அதிகாரத்திற்கு வந்தார்களோ அந்த மக்களை கண்டுகொள்வதுமில்லை . நம்மை கண்டுகொள்ளாத இவர்களுக்கு நாம் ஏன் நமது வாக்குகளை செலுத்தவேண்டும்.



நமக்காக களத்தில் நிற்க்கும் விசிக, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட  கட்சிகளுக்கு நமது வாக்குகளை வரும் தேர்தல்களில் செலுத்துவோம்.



ஓட்டுரிமை மட்டும் இல்லையென்றால் நம்மை மனித இனமே இல்லை என்கிற நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். அம்பேத்கர் நமக்கு அளித்த வாக்குரிமை யை வரும் தேர்தலில் சரியாக பயன்படுத்துவோம். 



என்னை நாலு சினிமா படத்தை எடுத்துவிட்டு ரொம்ப பேசுகிறான் என்கிறார்கள். நான் சினிமாவே எடுக்காவிட்டாலும் பேசுவேன். ஏனென்றால் சாதி என்னோடு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதை நான் வெட்டிவிட நினைக்கிறேன். என்னை தொடர்ந்துவரும் சாதிக்கு எதிராக நான் தொடர்ந்துபேசுவேன் என்றார். 



முன்னதாக நிகழ்ச்சியில்  யாக்கன் எழுதிய "கழுவப்படும் பெயரழுக்கு" என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. அம்பேத்கர் என்கிற பெயர் பார்ப்பனருடையதா? என்கிற கேள்விக்கு அந்த பெயர் பார்ப்பனருடையது அல்ல என்பதற்கு  சரியான ஆதாரத்தோடு விளக்கும் இந்த புத்தகத்தை ஆம்ஸ்ட்ராங் வெளியிட பா.இரஞ்சித்தும், மாரிசெல்வராஜும் பெற்றுக்கொண்டார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா