சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் போட்டி
Updated on : 10 December 2018

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  பயன்பெறும்  வகையில் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாபெரும் மாரத்தான் சென்னையில் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள உடல் ஆரோக்கியம் மற்றும் செல்போன் பழுது நீக்கும் பயிற்சி மையம் மூலமாக RCC அறக்கட்டளை ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்க உள்ளது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியில் முதல்கட்டமாக 500 பேர் பயனடைய இருக்கிறார்கள்.



500 இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான மாரத்தான் போட்டியில்  5000 பேர் பங்கேற்று ஓடினர். பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டிக்காக திட்ட இயக்குனர் மிதேஷ் பண்டாரி, தலைவர் மகேந்திர சங்வி ஆகியோர் முக்கிய பங்காற்றினர். பிக் லாண்டரி திரு குமரகுரு, ஜெயின் பஜார் திரு நீலேஷ் லோதா இருவரும் மாரத்தான் போட்டிக்காக பங்களிப்பு செய்திருக்கிறார்கள். 21 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 1.5 கிலோ மீட்டர் தூரம்  என்று 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. 1.5 கிலோ மீட்டர் தூரத்திலான போட்டியில் 1000 குழந்தைகள் பெற்றோர்களோடு பங்கேற்று ஓடினர். 



இந்த போட்டியில் ரயில்வே பாதுகாப்புப்  படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று போலீசாருடன் இணைந்து ஓடினார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இருந்து பங்கேற்ற 1000 மாணவிகளின் ஓட்டத்தை அந்த கல்லுரித் தலைவர் வி.எம்.முரளிதரன் துவக்கி வைத்தார்.



மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னை பெசன்ட் நகர் தொடங்கி போட்டி நடைபெறும் சாலைகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.



பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  பயன்பெற உதவ  முன்வருவோர்www.magnathon.com என்ற வலைத்தளத்துக்கு சென்று பங்களிப்புச் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு rccmagnum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா