சற்று முன்

15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் போட்டி
Updated on : 10 December 2018

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  பயன்பெறும்  வகையில் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாபெரும் மாரத்தான் சென்னையில் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள உடல் ஆரோக்கியம் மற்றும் செல்போன் பழுது நீக்கும் பயிற்சி மையம் மூலமாக RCC அறக்கட்டளை ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்க உள்ளது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியில் முதல்கட்டமாக 500 பேர் பயனடைய இருக்கிறார்கள்.



500 இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான மாரத்தான் போட்டியில்  5000 பேர் பங்கேற்று ஓடினர். பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டிக்காக திட்ட இயக்குனர் மிதேஷ் பண்டாரி, தலைவர் மகேந்திர சங்வி ஆகியோர் முக்கிய பங்காற்றினர். பிக் லாண்டரி திரு குமரகுரு, ஜெயின் பஜார் திரு நீலேஷ் லோதா இருவரும் மாரத்தான் போட்டிக்காக பங்களிப்பு செய்திருக்கிறார்கள். 21 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 1.5 கிலோ மீட்டர் தூரம்  என்று 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. 1.5 கிலோ மீட்டர் தூரத்திலான போட்டியில் 1000 குழந்தைகள் பெற்றோர்களோடு பங்கேற்று ஓடினர். 



இந்த போட்டியில் ரயில்வே பாதுகாப்புப்  படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று போலீசாருடன் இணைந்து ஓடினார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இருந்து பங்கேற்ற 1000 மாணவிகளின் ஓட்டத்தை அந்த கல்லுரித் தலைவர் வி.எம்.முரளிதரன் துவக்கி வைத்தார்.



மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னை பெசன்ட் நகர் தொடங்கி போட்டி நடைபெறும் சாலைகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.



பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  பயன்பெற உதவ  முன்வருவோர்www.magnathon.com என்ற வலைத்தளத்துக்கு சென்று பங்களிப்புச் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு rccmagnum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா