சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி இல்லை
Updated on : 21 April 2016

விஜய் நடித்த தெறி திரைப்படம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பல்வேறு  திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும்  திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.



 



இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில், தெறி திரைப்படத்தினைத் திரையிட்ட திரையரங்குகளைத் தவிர மற்ற எந்தத் திரையரங்குகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



 



இதுகுறித்து, திரையரங்க உரிமையாளர் சங்க பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி படத்தை தரமாட்டோம் என தாணு கூறுகிறார். செங்கல்பட்டு ஏரியாவுக்கு கபாலி படத்தை தரவில்லை என்றால், தமிழகம் முழுவதும் அப்படத்தை திரையிட மாட்டோம். மேலும், இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் தலையிடவேண்டும். மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை திரையிட மாட்டோம். சதவீத அடிப்படையில் படத்தை திரையிட வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்.



 



திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையிலான பிரச்சனை தொடர்ந்துக்கொண்டிருப்பதால், இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா