சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

சினிமா செய்திகள்

தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி இல்லை
Updated on : 21 April 2016

விஜய் நடித்த தெறி திரைப்படம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பல்வேறு  திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும்  திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.



 



இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில், தெறி திரைப்படத்தினைத் திரையிட்ட திரையரங்குகளைத் தவிர மற்ற எந்தத் திரையரங்குகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



 



இதுகுறித்து, திரையரங்க உரிமையாளர் சங்க பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி படத்தை தரமாட்டோம் என தாணு கூறுகிறார். செங்கல்பட்டு ஏரியாவுக்கு கபாலி படத்தை தரவில்லை என்றால், தமிழகம் முழுவதும் அப்படத்தை திரையிட மாட்டோம். மேலும், இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் தலையிடவேண்டும். மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை திரையிட மாட்டோம். சதவீத அடிப்படையில் படத்தை திரையிட வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்.



 



திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையிலான பிரச்சனை தொடர்ந்துக்கொண்டிருப்பதால், இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா