சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

நாங்கள் செய்யத் தவறியதை விஷால் குழு செய்துவிட்டது; கமல்ஹாசன் பாராட்டு
Updated on : 02 May 2016

உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்(பெப்ஸி) சார்பில் சிறப்பு மே தின விழா கொண்டாடப்பட்டது.



 



மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா  சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய உலகநாயகன் கமல்ஹாசன், "இது வாழ்த்து மேடை இல்லை என்றாலும்  இதைச் சொல்ல வேண்டும். நாங்கள் நாற்பது ஆண்டுகளாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால்  நாங்கள் செய்யத் தவறியதை விஷால்  குழுவினர் செய்து காட்டினார்கள்.



 



நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால் தவறில்லை. நாங்கள் செய்யவில்லை. நீங்கள் செய்தீர்கள்.எங்களுக்கு சட்டை அழுக்காகி விடுமோ என்கிற பயம் இருந்தது, ஆனால் சட்டையே இல்லாமல் போய்விடுமோ எனவிஷால்  குழுவினர்  இறங்கினார்கள். செய்து காட்டினார்கள்" என்று விஷாலை பாராட்டினார்.



 



இதனை தொடர்ந்து பேசிய விஷால், தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதும்   பெப்ஸிக்கு துணைநிற்கும் என்று  உறுதியளித்தார்.



 



மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயகுமார், தமிழக பா,ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்  சங்கத் தலைவர் எஸ்.தாணு,இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



இவ்விழாவில், பெப்ஸி குடும்பத்தினருக்கு நல நிதியும் வழங்கப் பட்டது. மேலும்,  23 சங்கங்களிலிருந்து தலா ஒருவர்  எனத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இவ்விழாவில் நிமாய் கோஷ் விருதுகள் வழங்கப்பட்டன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா