சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

சினிமா செய்திகள்

நாங்கள் செய்யத் தவறியதை விஷால் குழு செய்துவிட்டது; கமல்ஹாசன் பாராட்டு
Updated on : 02 May 2016

உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்(பெப்ஸி) சார்பில் சிறப்பு மே தின விழா கொண்டாடப்பட்டது.



 



மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா  சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய உலகநாயகன் கமல்ஹாசன், "இது வாழ்த்து மேடை இல்லை என்றாலும்  இதைச் சொல்ல வேண்டும். நாங்கள் நாற்பது ஆண்டுகளாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால்  நாங்கள் செய்யத் தவறியதை விஷால்  குழுவினர் செய்து காட்டினார்கள்.



 



நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால் தவறில்லை. நாங்கள் செய்யவில்லை. நீங்கள் செய்தீர்கள்.எங்களுக்கு சட்டை அழுக்காகி விடுமோ என்கிற பயம் இருந்தது, ஆனால் சட்டையே இல்லாமல் போய்விடுமோ எனவிஷால்  குழுவினர்  இறங்கினார்கள். செய்து காட்டினார்கள்" என்று விஷாலை பாராட்டினார்.



 



இதனை தொடர்ந்து பேசிய விஷால், தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதும்   பெப்ஸிக்கு துணைநிற்கும் என்று  உறுதியளித்தார்.



 



மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயகுமார், தமிழக பா,ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்  சங்கத் தலைவர் எஸ்.தாணு,இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



இவ்விழாவில், பெப்ஸி குடும்பத்தினருக்கு நல நிதியும் வழங்கப் பட்டது. மேலும்,  23 சங்கங்களிலிருந்து தலா ஒருவர்  எனத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இவ்விழாவில் நிமாய் கோஷ் விருதுகள் வழங்கப்பட்டன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா