சற்று முன்

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |   

சினிமா செய்திகள்

இவன் வேற மாதிரி கன்னட ரீமேக்கில் அருண் விஜய்!
Updated on : 02 May 2016

விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் "இவன்  வேற மாதிரி". எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இதனை இயக்கினார்.



 



இப்போது, இவன்  வேற மாதிரி திரைப்படத்தை 'சக்ரவ்யுஹா' என்ற பெயரில் புனித்  ராஜ்குமாரை வைத்து ரீமேக் செய்கிறார் சரவணன்.



 



இந்த படத்தின் மற்றொரு முதன்மை பாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் ,அஜித்  குமார் கதாநாயகனாக  நடித்த  'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து, அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களின் கரகோஷத்தையும் பெற்ற அருண் விஜய் தற்போது கன்னட சினிமாவில் 'சக்ரவ்யுஹா'  திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார்.



 



இதுகுறித்து கருத்து தெரிவித்த அருண் விஜய், "கன்னட சினிமா மீது எனக்கொரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. எனக்கு சில வாய்புகள் நடிக்க வந்திருந்தாலும், சரியான கதாப்பாத்திரத்திற்காக நான் காத்து கொண்டிருந்தேன். அதன் பலனாக எனக்கு கிடைத்த திரைப்படம் தான் 'சக்ரவ்யுஹா' என்றார்.



 



ஈரம், வல்லினம், ஆறாது சினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் தற்போது நடிக்கும் அருண் விஜய், அந்த படத்திற்காக 36 மணி நேர தொடர் சண்டை காட்சியில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா