சற்று முன்

டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |   

சினிமா செய்திகள்

காமெடி கலக்கல் - விந்தை
Updated on : 23 April 2015

காமெடி கலக்கல் படம், மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும்    “ விந்தை “    லாரா இயக்குகிறார்   


அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர்.


இந்தப்படத்தில்  மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன்,  ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.


ஒளிப்பதிவு     -    ரத்தீஷ்கண்ணா /    இசை    -   வில்லியம்ஸ்                                           


பாடல்கள்    -  பாரதி, பொன்முத்துவேல்   /   கலை   -  பத்து  /   எடிட்டிங்    -   நதிபுயல்                      நடனம்   -  தினா /   தயாரிப்பு மேற்பார்வை  -  கார்த்திக் ரெட்டி                                                   


நிர்வாக தயாரிப்பு   -  பொன்ராஜ்


இணைதயாரிப்பு   -  R.Y.ஆல்வின், R.Y.கெவின்


தயாரிப்பு   -  R.L.யேசுதாஸ்


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  -  லாரா.   இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர்.   படம் பற்றி இயக்குனர் லாராவிடம் கேட்டபோது .....                          


இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கப் பட்டுள்ளது. 


மனித வாழ்கையில் தொலைந்து போன ஒரு விஷயத்தை தேடி போகிற இடமாக காவல்நிலையம் இருக்கிறது. அப்படி இருக்கும் காவல் நிலையத்தை அனைவரும் ஒரு வித வெறுப்புடனும், அருவருப்புடனும் தான் பார்பார்கள். அந்த இடத்திற்கு சென்றுவிட்டால் நாம் அனைவரும் சிரிப்பை  மறந்துவிடுவோம். ஆனால் இதில் ஊரில் இருந்து ஓடி வந்த  நாயகன், நாயகி இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப் படுகிறார்கள் இரவு 1 மணி முதல் மறுநாள் இரவு 1 மணிவரை அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகள் தான் காமெடி தான் இந்த படத்தின் திரைக்கதை.


படம் வெளியான பிறகு ரசிகர்கள் இது போன்று ஒரு காவல் நிலையம் நம்ம ஊரில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அந்த அளவிற்கு காமெடி காவல் நிலையமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.


ஒரு சில காட்சிகளை தவிர மற்ற அணைத்து காட்சிகளும் காவல் நிலையத்திலேயே படமாக்கப்பட்டது.  படத்தின் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்து விட்டது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.


 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா