சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

கோ-2 தான் பாபி சிம்ஹாவின் மிகப் பெரிய திருப்பம்
Updated on : 11 May 2016

கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படம் 2011-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்தது. தற்போது கோ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்(கோ-2) 13-ஆம் தேதி வெளியாகிறது.



 



பில்லா மற்றும் பில்லா-2 ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சரத் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.



 



இந்நிலையில் கோ-2 திரைப்படம்  தனக்கு பெரிய திருப்பமாக இருக்குமென நடிகர் பாபி சிம்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



 



இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்தப் படத்தில் நான் ஒரு துடிப்பு உள்ள, உணர்சிகரமான பத்திரிகையாளன் வேடத்தில் நடிக்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த  ஒருவருடன்  என் சுயநலம் அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில்  நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டு உள்ளது.



 



தப்பென்றுப் பட்டால் யாரென்று பாராமல் போராடும் இந்தக் கதாப் பாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டி இருப்பது எனக்கு பெருமைதான். 'கோ 2' படத்தில்  என்னுடைய இந்தக் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெள்ள தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.



 



எனக்கும்  நடிப்பு ராட்சஷன் பிரகாஷ் ராஜ் சாருக்கும் உள்ளக் காட்சிகள், திரை அரங்கில் தீப்பொறி தெறிக்க வைக்கும் காட்சிகள் ஆகும். இந்த வருடம் முழுவதும் வெளிவர இருக்கும் என்னுடையப் படங்கள்  திரை உலகில் என் நிலையை இன்னமும் உயர்த்தும், அதற்கு முன்னோடியாக 'கோ 2' படத்தின் வெற்றி இருக்கும்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா