சற்று முன்

கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |    மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது!   |    இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |   

சினிமா செய்திகள்

கோ-2 தான் பாபி சிம்ஹாவின் மிகப் பெரிய திருப்பம்
Updated on : 11 May 2016

கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படம் 2011-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்தது. தற்போது கோ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்(கோ-2) 13-ஆம் தேதி வெளியாகிறது.



 



பில்லா மற்றும் பில்லா-2 ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சரத் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.



 



இந்நிலையில் கோ-2 திரைப்படம்  தனக்கு பெரிய திருப்பமாக இருக்குமென நடிகர் பாபி சிம்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



 



இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்தப் படத்தில் நான் ஒரு துடிப்பு உள்ள, உணர்சிகரமான பத்திரிகையாளன் வேடத்தில் நடிக்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த  ஒருவருடன்  என் சுயநலம் அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில்  நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டு உள்ளது.



 



தப்பென்றுப் பட்டால் யாரென்று பாராமல் போராடும் இந்தக் கதாப் பாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டி இருப்பது எனக்கு பெருமைதான். 'கோ 2' படத்தில்  என்னுடைய இந்தக் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெள்ள தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.



 



எனக்கும்  நடிப்பு ராட்சஷன் பிரகாஷ் ராஜ் சாருக்கும் உள்ளக் காட்சிகள், திரை அரங்கில் தீப்பொறி தெறிக்க வைக்கும் காட்சிகள் ஆகும். இந்த வருடம் முழுவதும் வெளிவர இருக்கும் என்னுடையப் படங்கள்  திரை உலகில் என் நிலையை இன்னமும் உயர்த்தும், அதற்கு முன்னோடியாக 'கோ 2' படத்தின் வெற்றி இருக்கும்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா