சற்று முன்

'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |   

சினிமா செய்திகள்

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!
Updated on : 02 January 2026

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து துல்லியமாக விவாதிக்கும் ‘நித்திலன் வாக்குமூலம்’ என்ற நாவல் இன்று வெளியானது. எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து இதனை எழுதியுள்ளார்.



 



முதல் இரண்டு பாகங்களை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா, நிறைவு பாகத்தையும் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா நூலை வெளியிடும் காட்சி, ஒரு சில தினங்களுக்கு முன் அவரது இல்லத்தில் படமாக்கப்பட்டது.



 



பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்தை மையமாகக் கொண்ட கபிலன்வைரமுத்துவின் ஆகோள் என்ற நாவல் 2022ஆம் ஆண்டு வெளியானது.



 



அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் 2024ஆம் ஆண்டு வெளியானது. ஆகோள் தொடரின் மூன்றாவது மற்றும் நிறைவு பாகமான நித்திலன் வாக்குமூலம் இன்று வெளியானது.



 



ஆகோள் முதல் பாகம், பிரிட்டிஷ் அரசின் கை ரேகை சட்டத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்த மதுரை பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியது. மாக்கியவெல்லி காப்பியம் என்ற இரண்டாம் பாகம் மாநில சுயாட்சி குறித்த அறிவியல் பார்வையைப் பதிவு செய்தது. நித்திலன் வாக்குமூலம் என்ற இந்த மூன்றாம் பாகம், குற்ற இனச் சட்டம் தோன்றிய வரலாறையும், எதிர்கால செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் செயல்பாடு குறித்தும் ஆழமாக விவாதிக்கிறது.



 



ஆகோள் தொடரின் மூன்று நாவல்களையும் டிஸ்கவரி பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது. வருகிற ஜனவரி 04ஆம் நாள் நித்திலன் வாக்குமூலத்திற்கான ‘ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி’, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா