சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

சினிமா செய்திகள்

வணக்come to வாக்குச்சாவடி ! பார்த்திபனின் புதிய முயற்சி
Updated on : 14 May 2016

 



தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.



 



இதுதொடர்பில், வணக்come to வாக்குச்சாவடி! என்ற விழிப்புணர்வு அறிக்கையை அவர் விடுத்துள்ளார்.



 



இராதாகிருஷ்ணன் பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கை:



 



நம் வாக்கு  சாவு'அடியாகவும், சவுக்கடியாகவும், இருக்க/வலிக்க வேண்டும்....



யாருக்கு?



வாக்காளர்களுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு நம்முடைய ஆயுளில் ஐந்தாண்டை சவக்குழிக்குள் புதைத்து அதையே அஸ்திவாரமாக்கி அதன் மீது எழுப்பப்படும் ஆஸ்தி நிறைந்த அரண்மனையில்



ராஜாங்கம் நடத்தத் திட்டமிடும் பொய்மை அரசியல்பேதிகளுக்கு!!!!!



 



கட்சிகள் யாவும் கர்ண கொடூரமாய் இரவு பகலாய் உழைக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக நம்



கண்களில் சிறு'நீரை வரவழைக்கிறது.



பாவம்!



அவர்கள் குடும்பத்திற்கு வேறு யார் உழைப்பார்கள்?



 



கட்சிகளுக்கப்பால் மக்களுக்கு (தப்பித்தவறி) நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையிருந்தால்



(அப்படி யாரேனும் இருந்தால்) அவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவசியம் அந்த நல்லோரை(?) ஆதரியுங்கள். அப்படி நீங்கள் விரல் நீட்ட ஆளில்லையெனில், நம் விரல் நீட்டி மை பெறும் பெருமையில், தூய்மை/நேர்மை/ஆளுமை உள்ளவன் பெயர் இவ்வோட்டுச் சீட்டில்



"இல்லை"



என்ற அவல நிலைமையையாவது



'குத்தி'க்  காட்டுவோம்.



 



நோட்டே  ஜெயிக்கும் என்பவர்களுக்கு



NOTA-வால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவர்களை செல்லா நோட்டாக்கி,



அவர்கள் Indian டாய்லெட் செல்ல,



டாட்டா காட்டுவோம் கடுங்காட்டமாய் !



 



8% பேர் கரன்ஸிக்காரர்களாக, நாட்டின்



92% வளத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள். மீதமுள்ள 92% மக்கள் 8% வறு'மை'யை  நக்க,



விரல் (நீட்டி) சூப்பிக் கொண்டிருக்கப் போகும் நிலையினி



மாறவேண்டும்.



மாற்ற வேண்டும்.



மாற்றம் வேண்டும் அதை நாம் இம்முறை



அரங்கேற்ற வேண்டும்.எப்படி?



ஒரு மௌனப் புரட்சி மூலம்!



நாளை இரவோடு திருவோடு ஏந்தும் 



(பர)பரப்புரை முடியும்.



அடுத்த விடியல் நம் கைகளில்!



 



மக்களால் தேர்ந்தெடுக்கப்படுமாட்சியே மாட்சிமைமிகு மக்களாட்சி.



 



Ok!!!!!!!!!!!!!!!!



 



மக்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது ?



கட்சித் தலைமை கை காட்டும் அத்தொகுதியின் அடி'யாட்களையா?  கருவிலேயே கரை வேட்டி கட்டிக் கொண்டு அக்கட்சியின் கொடிக் கம்பங்களாக வளர்ந்து நிற்கும் திரு.தண்டங்களையா?



முதலில் அதற்கே நாம் NOta காட்ட வேண்டும்.



இந்திய அரசியல் அரங்கில் முதன்முறையாக வாக்குரிமை மூலம்  ஒரு சு'தந்திரப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.



யாருக்கும் பெரும்பான்மை கிட்டாமல்,



ஊழல் அரசியல்வாதிகள் குழம்பித் தவித்து  உணரவேண்டும் ... மக்களே MAJORITY என்று.



அடுத்தடுத்து தேர்தல் வந்தால் எங்கிருந்து எடுத்தெடுத்துக் கொடுப்பார்கள் பணத்தை?



கொடுத்து...



அரசு கஜானாவைப் போல



அவர்களின் கஜானாவும் காலியாகட்டும்.



அரசியல் என்பது மக்களுக்கான சேவை மையம் என்பதை உணர்ந்த நல்லோர்கள் வரட்டும் நம் தேசம் காக்க!



காக்க காக்க - நம்



வாக்குரிமை காக்க!



 



 



இப்படிக்கு,



இராதாகிருஷ்ணன் பார்த்திபன்



(திரைக்கலைஞனை மீறி



விலை போகாத



இந்தியக் குடிமகன் !)

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா