சற்று முன்

'டெஸ்ட்' படத்தில் குமுதாவாக அறிமுகமாகும் நடிகை நயன்தாரா!   |    நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம்!   |    அசத்தலான காமெடி சீரிஸாக 'செருப்புகள் ஜாக்கிரதை' மார்ச் 28 முதல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது   |    சினிமா எடுப்பதும், சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம் - நடிகர் ராதாரவி   |    நாயகியாக 'பிக் பாஸ்' புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கும் புதிய படம்!   |    சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகும் 'அந்தோனி'   |    54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |   

சினிமா செய்திகள்

வணக்come to வாக்குச்சாவடி ! பார்த்திபனின் புதிய முயற்சி
Updated on : 14 May 2016

 



தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.



 



இதுதொடர்பில், வணக்come to வாக்குச்சாவடி! என்ற விழிப்புணர்வு அறிக்கையை அவர் விடுத்துள்ளார்.



 



இராதாகிருஷ்ணன் பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கை:



 



நம் வாக்கு  சாவு'அடியாகவும், சவுக்கடியாகவும், இருக்க/வலிக்க வேண்டும்....



யாருக்கு?



வாக்காளர்களுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு நம்முடைய ஆயுளில் ஐந்தாண்டை சவக்குழிக்குள் புதைத்து அதையே அஸ்திவாரமாக்கி அதன் மீது எழுப்பப்படும் ஆஸ்தி நிறைந்த அரண்மனையில்



ராஜாங்கம் நடத்தத் திட்டமிடும் பொய்மை அரசியல்பேதிகளுக்கு!!!!!



 



கட்சிகள் யாவும் கர்ண கொடூரமாய் இரவு பகலாய் உழைக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக நம்



கண்களில் சிறு'நீரை வரவழைக்கிறது.



பாவம்!



அவர்கள் குடும்பத்திற்கு வேறு யார் உழைப்பார்கள்?



 



கட்சிகளுக்கப்பால் மக்களுக்கு (தப்பித்தவறி) நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையிருந்தால்



(அப்படி யாரேனும் இருந்தால்) அவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவசியம் அந்த நல்லோரை(?) ஆதரியுங்கள். அப்படி நீங்கள் விரல் நீட்ட ஆளில்லையெனில், நம் விரல் நீட்டி மை பெறும் பெருமையில், தூய்மை/நேர்மை/ஆளுமை உள்ளவன் பெயர் இவ்வோட்டுச் சீட்டில்



"இல்லை"



என்ற அவல நிலைமையையாவது



'குத்தி'க்  காட்டுவோம்.



 



நோட்டே  ஜெயிக்கும் என்பவர்களுக்கு



NOTA-வால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவர்களை செல்லா நோட்டாக்கி,



அவர்கள் Indian டாய்லெட் செல்ல,



டாட்டா காட்டுவோம் கடுங்காட்டமாய் !



 



8% பேர் கரன்ஸிக்காரர்களாக, நாட்டின்



92% வளத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள். மீதமுள்ள 92% மக்கள் 8% வறு'மை'யை  நக்க,



விரல் (நீட்டி) சூப்பிக் கொண்டிருக்கப் போகும் நிலையினி



மாறவேண்டும்.



மாற்ற வேண்டும்.



மாற்றம் வேண்டும் அதை நாம் இம்முறை



அரங்கேற்ற வேண்டும்.எப்படி?



ஒரு மௌனப் புரட்சி மூலம்!



நாளை இரவோடு திருவோடு ஏந்தும் 



(பர)பரப்புரை முடியும்.



அடுத்த விடியல் நம் கைகளில்!



 



மக்களால் தேர்ந்தெடுக்கப்படுமாட்சியே மாட்சிமைமிகு மக்களாட்சி.



 



Ok!!!!!!!!!!!!!!!!



 



மக்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது ?



கட்சித் தலைமை கை காட்டும் அத்தொகுதியின் அடி'யாட்களையா?  கருவிலேயே கரை வேட்டி கட்டிக் கொண்டு அக்கட்சியின் கொடிக் கம்பங்களாக வளர்ந்து நிற்கும் திரு.தண்டங்களையா?



முதலில் அதற்கே நாம் NOta காட்ட வேண்டும்.



இந்திய அரசியல் அரங்கில் முதன்முறையாக வாக்குரிமை மூலம்  ஒரு சு'தந்திரப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.



யாருக்கும் பெரும்பான்மை கிட்டாமல்,



ஊழல் அரசியல்வாதிகள் குழம்பித் தவித்து  உணரவேண்டும் ... மக்களே MAJORITY என்று.



அடுத்தடுத்து தேர்தல் வந்தால் எங்கிருந்து எடுத்தெடுத்துக் கொடுப்பார்கள் பணத்தை?



கொடுத்து...



அரசு கஜானாவைப் போல



அவர்களின் கஜானாவும் காலியாகட்டும்.



அரசியல் என்பது மக்களுக்கான சேவை மையம் என்பதை உணர்ந்த நல்லோர்கள் வரட்டும் நம் தேசம் காக்க!



காக்க காக்க - நம்



வாக்குரிமை காக்க!



 



 



இப்படிக்கு,



இராதாகிருஷ்ணன் பார்த்திபன்



(திரைக்கலைஞனை மீறி



விலை போகாத



இந்தியக் குடிமகன் !)

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா