சற்று முன்

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

வணக்come to வாக்குச்சாவடி ! பார்த்திபனின் புதிய முயற்சி
Updated on : 14 May 2016

 



தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.



 



இதுதொடர்பில், வணக்come to வாக்குச்சாவடி! என்ற விழிப்புணர்வு அறிக்கையை அவர் விடுத்துள்ளார்.



 



இராதாகிருஷ்ணன் பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கை:



 



நம் வாக்கு  சாவு'அடியாகவும், சவுக்கடியாகவும், இருக்க/வலிக்க வேண்டும்....



யாருக்கு?



வாக்காளர்களுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு நம்முடைய ஆயுளில் ஐந்தாண்டை சவக்குழிக்குள் புதைத்து அதையே அஸ்திவாரமாக்கி அதன் மீது எழுப்பப்படும் ஆஸ்தி நிறைந்த அரண்மனையில்



ராஜாங்கம் நடத்தத் திட்டமிடும் பொய்மை அரசியல்பேதிகளுக்கு!!!!!



 



கட்சிகள் யாவும் கர்ண கொடூரமாய் இரவு பகலாய் உழைக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக நம்



கண்களில் சிறு'நீரை வரவழைக்கிறது.



பாவம்!



அவர்கள் குடும்பத்திற்கு வேறு யார் உழைப்பார்கள்?



 



கட்சிகளுக்கப்பால் மக்களுக்கு (தப்பித்தவறி) நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையிருந்தால்



(அப்படி யாரேனும் இருந்தால்) அவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவசியம் அந்த நல்லோரை(?) ஆதரியுங்கள். அப்படி நீங்கள் விரல் நீட்ட ஆளில்லையெனில், நம் விரல் நீட்டி மை பெறும் பெருமையில், தூய்மை/நேர்மை/ஆளுமை உள்ளவன் பெயர் இவ்வோட்டுச் சீட்டில்



"இல்லை"



என்ற அவல நிலைமையையாவது



'குத்தி'க்  காட்டுவோம்.



 



நோட்டே  ஜெயிக்கும் என்பவர்களுக்கு



NOTA-வால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவர்களை செல்லா நோட்டாக்கி,



அவர்கள் Indian டாய்லெட் செல்ல,



டாட்டா காட்டுவோம் கடுங்காட்டமாய் !



 



8% பேர் கரன்ஸிக்காரர்களாக, நாட்டின்



92% வளத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள். மீதமுள்ள 92% மக்கள் 8% வறு'மை'யை  நக்க,



விரல் (நீட்டி) சூப்பிக் கொண்டிருக்கப் போகும் நிலையினி



மாறவேண்டும்.



மாற்ற வேண்டும்.



மாற்றம் வேண்டும் அதை நாம் இம்முறை



அரங்கேற்ற வேண்டும்.எப்படி?



ஒரு மௌனப் புரட்சி மூலம்!



நாளை இரவோடு திருவோடு ஏந்தும் 



(பர)பரப்புரை முடியும்.



அடுத்த விடியல் நம் கைகளில்!



 



மக்களால் தேர்ந்தெடுக்கப்படுமாட்சியே மாட்சிமைமிகு மக்களாட்சி.



 



Ok!!!!!!!!!!!!!!!!



 



மக்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது ?



கட்சித் தலைமை கை காட்டும் அத்தொகுதியின் அடி'யாட்களையா?  கருவிலேயே கரை வேட்டி கட்டிக் கொண்டு அக்கட்சியின் கொடிக் கம்பங்களாக வளர்ந்து நிற்கும் திரு.தண்டங்களையா?



முதலில் அதற்கே நாம் NOta காட்ட வேண்டும்.



இந்திய அரசியல் அரங்கில் முதன்முறையாக வாக்குரிமை மூலம்  ஒரு சு'தந்திரப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.



யாருக்கும் பெரும்பான்மை கிட்டாமல்,



ஊழல் அரசியல்வாதிகள் குழம்பித் தவித்து  உணரவேண்டும் ... மக்களே MAJORITY என்று.



அடுத்தடுத்து தேர்தல் வந்தால் எங்கிருந்து எடுத்தெடுத்துக் கொடுப்பார்கள் பணத்தை?



கொடுத்து...



அரசு கஜானாவைப் போல



அவர்களின் கஜானாவும் காலியாகட்டும்.



அரசியல் என்பது மக்களுக்கான சேவை மையம் என்பதை உணர்ந்த நல்லோர்கள் வரட்டும் நம் தேசம் காக்க!



காக்க காக்க - நம்



வாக்குரிமை காக்க!



 



 



இப்படிக்கு,



இராதாகிருஷ்ணன் பார்த்திபன்



(திரைக்கலைஞனை மீறி



விலை போகாத



இந்தியக் குடிமகன் !)

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா