சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

”இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” 'சாணி காயிதம்’
Updated on : 19 May 2022

அருண் மாதேஸ்வரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’சாணி காயிதம்’ படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் மே 6 அன்று வெளியிடப்பட்டது,

பழிவாங்கும் அதிரடி ஆக்‌ஷன் படமான அது ஒவ்வொரு சினிமா ரசிகரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடினமான கதையாகவும், புத்திசாலித்தனமான மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் சினிமாவாகவும் இருப்பது போக, அனைவருக்கும் பிடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோரின் வித்தியாசமான நடிப்புக்காகவும் படம் மிகவும் சிலாகிக்கப்பட்டது.



 



’சாணிகாயிதம்’படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்களும் சமூக வலைதளவாசிகளும் செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சர்யமான நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சங்கையாவாக வாழ்ந்த இயக்குநர் செல்வராகவனின் பாத்திரச் சித்தரிப்பை பலரும் வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது..இன்னொரு பக்கம் பொன்னி பாத்திரத்தில் மிகச்சரியாகப் பொருந்திய கீர்த்தி சுரேஷ் இன்னொரு முறை தேசிய விருது வாங்கும் அளவுக்கான நடிப்பை வழங்கியிருக்கிறார் என்பதையும் நிச்சயமாகச் சொல்லலாம்.



 



இப்படத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளித்த நடிகர் செல்வராகவன், “சாணி காயிதம் மூலம் நடிகராக எனது பயணத்தை தொடங்கியதில் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். நான் நடித்த பாத்திரம் ஒரு ஆற்றல் வாய்ந்தது மற்றும் என்றென்றும் என்னுடன் இருக்கும். இந்தப் புத்திசாலித்தனமான படத்திற்காக என்னைப் பெற வலியுறுத்திய என் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கும், இந்த தலைசிறந்த படைப்பை உருவாக்கிய அபாரமான குழுவுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து வரும் அன்பு மற்றும் பாராட்டுக்காக நான் பெருமைப்படுகிறேன்.” என்கிறார்.



 



படத்தின் வெற்றி குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள் மற்றும் சகாக்களால் ’சாணி காயிதம்’ விரும்பப்பட்டு ரசிக்கப்படுவதற்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன். ஒரு நடிகருக்கு பார்வையாளர்களின் பாராட்டுகளை விட மகிழ்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. இந்த பொன்னி பாத்திரத்துக்கு நான் பொருந்தி வருவேனா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என் மீது வைத்திருந்த நம்பிக்கையுடன் அந்தப் பாத்திரமாகவே என்னால் மாற முடிந்ததில் மகிழ்ச்சி.. என் இதயத்தை விட்டு எப்போதும் நீங்காத  இப்படத்தின்  ஒரு பகுதியாக இருந்ததற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது சக நடிகர் செல்வா சாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்கிறார்.



 



ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டு, எழுத்தாளர்-இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவாளராக, சாம் சிஎஸ் இசையமைப்பாளராக, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக, நாகூரன் ராமச்சந்திரன் எடிட்டராக  ஸ்டண்ட்ஸ் இயக்குநராக திலிப் சுப்பராயன் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக சித்தார்த் ராவிபட்டி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.



 



சாணி காயிதம் பிரைம் வீடியோவில் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இப்படம் தெலுங்கில் சின்னி என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணி காயிதம்  என்ற இதே பெயரிலும் காணக்கிடைக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா