சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

ஜெயின் மகளிர் கல்லூரியில் பத்ம விபூஷண் விருது பெற்ற திரு பீபி லால் குறித்த ஆவணப்படம்
Updated on : 02 June 2022

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஷங்கர் லால் சுந்தர் பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில்  தொல்லியல் நிபுணர் பத்ம விபூஷண் விருது பெற்ற திரு பீபி லால்  குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இப்படம் இராஜஸ்தானில் நடைபெற்ற தேசியத் திரைப்படவிழாவில் பங்கேற்று சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 



கல்லூரியில் சமஸ்கிருதத் துறைப் பேராசிரியர் முனைவர் ரமா தேவி அவர்களின் எண்ணத்தில் உதயமாகிக் காட்சி ஊடகவியல் துறைப்பேராசிரியர் திரு.எபினேசர் அன்னாதாஸ் அவர்களின் இயக்கத்தில்,முனைவர் எபிராஜ் அவர்களின் இசையில்  உருவான   ஆவணப்படம் , பலராலும் பாராட்டப்பட்டது. விழாவில்  முனைவர் சத்யமூர்த்தி   (Former Director, ASI), முனைவர் நந்திதா (Director, CPR Institute), திரு. பிரசன்ன வெங்கடேஷ் (Celebrity Photographer) பிரியா ராஜ்குமார்(Actress, Film Personality), திரு ராம் அருணாசலம்(Movie Critic, Actor), திரு கோபி (Actor, Voice over Artist) , கிரே இராமநாதன் அவர்கள் (Film Actor, Voice Artist) and திரு (Falutist). ஆகியோர் கலந்து கொண்டு ஆவணப்படத்தைப் புகழ்ந்துரைத்தனர். விழாவிற்கு வருகை புரிந்தவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி அவர்கள் வரவேற்றார். கல்லூரி யின் கௌரவச் செயலர் ஶ்ரீ அபயகுமார்  ஶ்ரீ ஶ்ரீ மால் ஜெயின் அவர்களும் இணைச் செயலர் திரு ஹரிஷ் எல் மேத்தா அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

 



மீடியா எண்டர்டெயின்மெண்ட் துறையில் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்த 36 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.  ஷசுன் கல்லூரி மாணவியரால்  உருவாக்கப்பட்ட "ஷசுன் நியுஸ்" என்ற  பெயரில் யூடியுப் நியூஸ் சேனல்  இன்று முதல் ஒலி (ஒளி) பரப்புத் தொடங்கப்பட்டது.



 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா