சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

மலையாள நடிகை, கன்னட நடிகை இணைந்து நடிக்கும் தமிழ்ப் படம் ‘ஓட்டம்’
Updated on : 18 July 2022

ரிக் கிரியேஷன் நிறுவனம் சார்பாக ஹேமாவதி ரவிஷங்கர் தயாரிக்கும் முதல் படம் ‘ஓட்டம்’. பல திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள திகில் படமான இதில் கதாநாயகனாக நடித்து இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் எஸ்.பிரதீப் வர்மா.  கதாநாயகிகளாக கர்நாடகவைச் சேர்ந்த ஐஸ்வர்யா சிந்தோஹியும், கேரளாவைச் சேர்ந்த அனுஸ்ரேயா ராஜனும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சாய்தீனா, அம்பானி சங்கர், நந்தகோபால், ரஜினி, நிக்ஸிதா உள்ளிட்ட பலர் நடிக்க, வித்தியாசமான வில்லன் கதாப்பாத்திரத்தின் மூலம்k நடிகராக ரவிஷங்கர் அறிமுகமாகி, வில்லத்தனமும், நகைச்சுவையும் கலந்த அதிரடி நடிப்பில் கலக்கியிருக்கிறார்.



 



இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ராம்தேவ் வடிவமைக்க, ஜோசப் ராய் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குநராக எம்.முருகன் அறிமுகமாகிறார். இவர் மறைந்த இயக்குநர் இராம நாராயணனிடம் ‘ராஜகாளி அம்மன்’, ‘பாளையத்து அம்மன்’, ‘அன்னை காளிகாம்பாள்’, ‘மண்ணின் மைந்தன்’ போன்ற படங்களில் முதன்மை உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா