சற்று முன்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |   

சினிமா செய்திகள்

அமிதாப் பச்சனின் பிறந்தநாளில் தனது தமிழ் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர்
Updated on : 11 October 2022

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்தநாளை நடிகர் ஜாவித் கான் விமரிசையாக கொண்டாடினார். அமிதாப் பச்சனுடனான தன்னுடைய நட்பை பற்றி பகிர்ந்துகொண்ட ஜாவித் கான் கூறுகையில்: 



 



அமிதாப் பச்சன் அவர்களை பற்றிய எனது ஆரம்பகால நினைவு 80களில் இருந்து துவங்கும். 'ஒன்லி விமல்' பிரச்சாரம் மூலம் நான் நாட்டின் தலைசிறந்த மாடலாக இருந்தபோதிலும், புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து எனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினேன்.



 



ஒரு நாள் அதிகாலையில் அப்ராதி கோன் இரவுப் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை ஃபிலிம்சிட்டியில் உள்ள மேக்கப் அறைக்கு வந்திருந்தேன். அப்போது அங்கே அமர்ந்திருந்தவரை பார்த்து நான் உறைந்து போனேன், ஏனென்றால் மேக்கப் ஏரியாவின் புல்வெளியில் அமர்ந்திருந்தது அமிதாப் பச்சன். 



 



அவரை கண்டதும் நான் பல்வேறு சிந்தனைகளில் தொலைந்து போனேன். ஆனால் அவரோ நாற்காலியில் இருந்து நின்று ஒரு அன்பான வணக்கம் சொல்லிவிட்டு கை குலுக்குவதற்காக அவரது கரம் நீட்டினார். 



 



அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை, ஆனால் அன்று முழுவதும் நான் மயக்கத்தில் இருந்தது மட்டும் தெரியும்.  



 



அப்பேற்பட்ட மாமனிதருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க நீங்கள் பல்லாயிரம் ஆண்டு. 



 



திரைத்துறையில் முன்னேறி, பேய் படங்களில் பிரபலம் ஆன பிறகு, புகழ்பெற்ற 'இந்தியா டுடே' இதழ் வழங்கிய 'திகில் படங்களின் அமிதாப் பச்சன்' என்கிற பட்டத்தை நான் மிக பெரிய கௌரவமாக கருதுகிறேன். 



 



நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்த நான், 'மஹால்' என்னும் தமிழ் மொழி திகில் படத்தில் இப்போது நடித்து வருகிறேன். 



 



'மஹால்' படத்தை விருது பெற்ற இயக்குநர் பொன்குமரன் இயக்கியுள்ளார் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரித்துள்ளார்.



 



வேதிகா, திகங்கா மற்றும் சிஎஸ் கிஷனுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் உள்ளது.  



 



தற்போது 'பான் இந்தியா' என்று ஆகிவிட்ட நிலையில், தென்னிந்திய தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா