சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிலம்பாட்டம் பயிற்சி மாணவர்களுக்கு இலவச சீருடை
Updated on : 12 October 2022

தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் முதன்முறையாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ் கலாச்சாரமான சிலம்பாட்டம் பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி நகர தலைமையினால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை 96 மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அனைவருக்கும் சீருடை  வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கும் சிலம்பாட்ட ஆசிரியர் திரு.அஜய் அவர்களுக்கு திமிரி நகர தலைமை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மாதந்தோறும் 20 ஆயிரம்  சம்பளமாக வழங்கப்படுகிறது. இன்று சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் முன்னிலையில் பயிற்சி பெறும் அனைவரும் சிலம்பாட்டத்தை செயல்படுத்தி காட்டினார்கள்.  



 



மேலும் தளபதி அவர்களின் உத்தரவின்படி ராணிப்பேட்டை மாவட்டம் தொண்டரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திரு. மணிகண்டன் அவர்கள் ஆட்டோ வழங்குவதற்கு ரூ. 1,20,000 முன்பணம் செலுத்தி, தொண்டரணி தலைவர் திரு. ரமேஷ் அவர்கள் முன்னிலையில் திரு. நாகராஜ் என்பவருக்கு பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் இலவச ஆட்டோவினை வழங்கினார். மேலும் ஆட்டோ தொழில் செய்து மாததவனை ரூ.7,500யை திரு. நாகராஜ் அவர்கள் செலுத்திக் கொள்வார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் திரு. மோகன் MC, மாவட்ட செயலாளர் திரு. காந்திராஜ் MC, இளைஞரணி தலைவர் திரு. வினோத், மாணவரணி தலைவர் திரு. தீனா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா