சற்று முன்
சினிமா செய்திகள்
Mythri Movie Makers Next Pan India Film Announced
Updated on : 28 November 2022
Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings, Pan India Film Announced
Mega Power Star Ram Charan who bagged a massive blockbuster with the Pan India film RRR is presently starring in another Pan India film under the direction of Shankar. Charan’s next film has been confirmed officially today. Young director Buchi Babu Sana who made a banging debut with the sensational blockbuster Uppena will be directing Ram Charan. The director readied a powerful script with an universal appeal to make it a Pan India entertainer.
Proudly presented by the leading production house Mythri Movie Makers, Venkata Satish Kilaru is venturing into film production grandly with the movie to be mounted on a huge scale with a high budget under the banners of Vriddhi Cinemas and Sukumar Writings.
The makers will disclose the details of the other cast and crew soon.
.jpg)
சமீபத்திய செய்திகள்
'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!
நடிகர் Suriya நடிக்கும் #சூர்யா46 திரைப்படம் தற்போது அதிகாரப்பூர்வமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரே சொல்வது போல, குடும்ப பாசம், உறவு நெகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி பூர்வமான தருணங்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சூர்யா ஒரு குழந்தையுடன் தோன்றும் காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த தோற்றம், அவரது முந்தைய குடும்ப கதாபாத்திரங்களை நினைவூட்டும் வகையில் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் கலந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெம்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார். உணர்ச்சிகளை இயல்பாக காட்சிப்படுத்துவதில் தனித்துவம் கொண்ட இவர், இந்த படத்திலும் மனதை தொடும் அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாயகியாக மமிதா பைஜு இணைந்துள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய வண்ணம் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது. டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை பங்களான் கையாண்டுள்ளார்.
Sitharசிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் மூலம் வெளியிடப்படுகிறது.
குடும்ப உணர்வுகள், நெகிழ்ச்சி மற்றும் வெகுஜன அம்சங்கள் இணையும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – இந்த ஜூலையில் திரையரங்குகளில் கொண்டாடத் தயாராகுங்கள்!
'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்
யாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையின் தனித்துவமான பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் கலாச்சார மோதல்களை கலகலப்பாக சொல்ல வருவதாக டீசர் சுட்டிக்காட்டுகிறது.
‘ஜமா’ மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். வடசென்னை மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு ஆங்கிலோ-இந்திய பெண் நுழையும் போது உருவாகும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதையின் மையமாக அமைகின்றன.
“வடசென்னையின் கெத்து வியாசர்படி… இல்லை இல்லை பெரம்பூர்!” என்ற வசனத்துடன் தொடங்கும் டீசர், சென்னையின் ஒரு வித்தியாசமான முகத்தை நகைச்சுவை கலந்த பரபரப்புடன் காட்டுகிறது. வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள், வெளியில் பக்கா லோக்கல் கெத்து – இந்த இரட்டை உலகத்தை சுறுசுறுப்பாக வெளிப்படுத்திய விதம் கவனம் ஈர்க்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னணி நடிகை ரோஜா முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டைட்டில் டீசர் மூலம் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ள ‘அன்பே டயானா’, வரும் கோடை காலத்தில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஜாலியான என்டர்டெய்னராக திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு
திரையரங்குகளில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட காந்தி தளக்ஸ் திரைப்படம், வரும் மார்ச் 6 முதல் ஜீ5 தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடாக வெளியாகிறது. இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் எழுதி இயக்கியுள்ள இந்த படம், உரையாடல்கள் இல்லாமல் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லும் அரிதான மௌனத் திரைப்படமாக திகழ்கிறது.
ஜீ ஸ்டுடியோஸ், மூவிமில் மற்றும் க்யூரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை உலகின் பிரபல இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் பின்னணி இசை, படத்தின் உணர்ச்சி வலிமையை மேலும் உயர்த்துகிறது.
‘காந்தி டாக்ஸ்’ தனிப்பட்ட இழப்புகள் மற்றும் பொருளாதார சிரமங்களில் சிக்கியுள்ள சிலரின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்து சொல்லுகிறது. எதிர்பாராத விதமாக அவர்கள் பாதைகள் சந்திக்கும் போது, அது உயிர்வாழ்வுக்கான போராட்டமாகவும், மனித உறவுகளின் தீவிரமான கதையாகவும் மாறுகிறது. உரையாடல்கள் இன்றி காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் மூலம் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த படம், பார்வையாளர்களுக்கு மனதை நெகிழ்விக்கும் அனுபவத்தை வழங்குகிறது.
நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:
“ஒரு சொல் கூட பேசாமல் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதால் ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். உணர்ச்சிகளை முழுக்க நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. இப்போது ZEE5 வழியாக மேலும் பலர் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் கருத்துடன் பார்வையாளர்கள் இணைந்து, தங்கள் சொந்த அனுபவமாக இந்த கதையை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.”
அதிதி ராவ் ஹைதரி கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அமைதியான காட்சிப் பதிவு முறை மூலம் ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கும் அதன் திறன். படத்தின் ஒவ்வொரு தருணமும் நெருக்கமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் மேலும் பரந்த பார்வையாளர்களை இந்த படம் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பார்வையாளர்களை கவனிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு, தங்கள் பார்வையில் வாழ்க்கையின் பொருளை கண்டுபிடிக்கவும் அழைக்கும் ஒரு கதை.”
இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சவாலான முயற்சி. உரையாடல்கள் இன்றி ஒரு கதையை சொல்ல வேண்டியிருந்ததால், காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் சக்தியை முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. திரையரங்குகளில் கிடைத்த அன்பும் பாராட்டும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இப்போது ZEE5 இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி.”
மனதை தொடும் மௌனக் கதை அனுபவிக்க, ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை மார்ச் 6 முதல் ZEE5-ல் தவறாமல் காணுங்கள்.
திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்
வேல்ஸ் யூனிவர்சிட்டியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ‘வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ கலாச்சார விழா மாணவர்களின் உற்சாகக் கொண்டாட்டமாக அமைந்தது. இந்த விழாவில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த விழாவில், மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
முதல் நாள் நிகழ்வில் இயக்குநர் பிரேம் குமார், ‘டூரிஸ்ட் ஃபேமலி’ திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந, நடிகர் கென் கருணாஸ், பிரபல யூடியூபர் VJ சித்து மற்றும் ஹர்ஷத் கான், இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், பாடகி ஷிவாங்கி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷ் உடன் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் பங்கேற்று விழாவை மேலும் சிறப்பித்தனர்.
நடிகர் தனுஷ் விழாவில் பேசுகையில் “நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன்.
எனக்கு வேல்ஸ் பல்கலைக்கழக்த்திற்கு தொடர்பு உண்டு என் முதல் படம் துள்ளுவதோ இளமை இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன்.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷ்ன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள்”
விழாவில் பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் “ என்னுடைய கனவு பிராஜக்ட் என்றால் அது நடிகர் தனுஷ் அவர்களை வைத்து எடுக்க இருக்கும் வட சென்னை 2 தான் என்றே கூறலாம் அதேபோல் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது” என தெரிவித்தார்.
டிஜே தீபிகாவின் மிரட்டலான இசை நிகழ்ச்சி விழாவிற்கு கூடுதல் உற்சாகத்தையும் ஆற்றலையும் வழங்கியது. மாணவர்கள் உற்சாகக் குரல்களுடன் இசையின் தாளத்திற்கு இணைந்து கொண்டாடினர். இறுதியாக வானில் வெடித்த வண்ணமயமான பட்டாசுகள் இரவுக் கோளத்தை ஒளிரச் செய்து, ‘வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ விழாவிற்கு கண்கவர் நிகழ்வாக அமைந்தது.
‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக மாற்றி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனர் ராகுல், அடுத்ததாக ஒரு நம்பிக்கைக்குரிய படைப்புடன் வருகிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்–விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.
‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது. ‘என் அன்பே’ என்ற அர்த்தம் கொண்ட இந்தத் தலைப்பு, படத்தின் மையக் கருத்தான அன்பும் மனிதத்தன்மையும் பிரதிபலிக்கிறது. உண்மையான உறவுகள், வாழ்வியலின் சிக்கல்கள் மற்றும் மனித நேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதற்கு முன்பு அவள் பெயர் தமிழரசி மற்றும் விழித்திரு போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கிய மீரா கதிரவன், ‘ஹபீபி’ படத்தில் மேலும் ஆழமான கதைக்களத்துடன் திரும்பியுள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்தக் கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தில் ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உள்ளே வந்ததும் நாங்கள் கற்பனை செய்ததைவிட படம் பெரிய அளவில் வளர்ந்தது” என்றார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில், “மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அர்த்தமுள்ள கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சின்சியராக எடுக்கப்பட்ட படம்தான் ‘ஹபீபி’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்த முக்கியமான படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஹபீபி’ அப்படியான ஒரு திரைப்படம். நிச்சயம் பார்வையாளர்களும் அதை உணர்வார்கள். படத்திற்கான வலுவான மார்க்கெட்டிங் திட்டங்கள் வைத்துள்ளோம். படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்..
இப்படம் வெளியீட்டுக்கு முன்பே கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ‘வல்லோனே’ பாடல், மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்களின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உயிர்ப்பித்து பாடவைத்திருப்பது பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
உணர்வும் உண்மையும் இணைந்த ‘ஹபீபி’ திரைப்படம் உலகத் திரையரங்குகளில் விரைவில் பார்வையாளர்களை சந்திக்கத் தயாராகிறது.
தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் ரா. கார்த்திக் எழுதி இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ என்ற புதிய தொடர், இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களின் உணர்வுபூர்வமான சங்கமமாக உருவாகியுள்ளது. இந்த தொடரில் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் வாழும் செண்பா என்ற இளம் பெண்ணின் கனவுகள் தான் இந்தக் கதையின் மையம். சிறுவயது முதலே கொரிய கலாச்சாரம் மீது ஈர்ப்பு கொண்ட செண்பா, ஒருநாள் தென் கொரியாவுக்கு சென்று அந்த வாழ்க்கையை நேரில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வளர்கிறாள்.
அந்த கனவு அவளை சியோலுக்கு அழைத்துச் செல்லும் போது, அவள் எதிர்பார்த்த உலகம் கற்பனையை விட முற்றிலும் மாறுபட்ட சவால்களை முன்வைக்கிறது. புதிய மொழி, புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை முறை—இவற்றை எதிர்கொண்டு செண்பா தனது அடையாளத்தையும், உள்ளார்ந்த வலிமையையும் கண்டுபிடிக்கும் உணர்ச்சிகரமான பயணமே ‘மேட் இன் கொரியா’.
படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, “கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையை சொல்ல தூண்டியது. மொழிகளைத் தாண்டி உலக கலாச்சாரங்களை இணைக்கும் கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியா கண்டெண்ட்டின் வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்தியாவில் நெட்ஃபிலிக்ஸை மேலும் வலுப்படும் இந்த சூழலில், உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய கதைகளை உலகளவில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கொரிய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவு உலகத்தை ‘மேட் இன் கொரியா’ காட்டும். ரா. கார்த்திக் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். பிரியங்கா மோகன் மற்றும் ’ஸ்க்விட் கேம்’ புகழ் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாக திகழ்கிறது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நெட்ஃபிலிக்ஸ் பெருமை கொள்கிறது” என்றார்.
தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களின் நுணுக்கங்களை இணைக்கும் இந்த தொடர், உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மேட் இன் கொரியா’ தொடர் Netflix தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியராகிறது.
'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு
Passion Studios மற்றும் Sivakarthikeyan Productions இணைந்து தயாரித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் Sivakumar Murugesan இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மூத்த நடிகை Radhika Sarathkumar மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நிகழ்வில் படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு படத்துக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பேசிய தயாரிப்பாளர்கள், “பெண் மையக் கதையை மையமாக கொண்டு, குடும்ப உறவுகளின் ஆழத்தை உணர்ச்சிப்பூர்வமாக பதிவு செய்துள்ள படம் இது. ராதிகா மேடம் நடித்த விதம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது” என்றனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 27 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் பேசியதாவது, “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்து கட்டிக்காப்பவரைதான் அப்படி கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண் தனியாக வாழும்போது சந்திக்கின்ற சோதனையும் வேதனையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக இயக்குநர் சிவா இதில் பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிப் படத்தை தர காத்திருக்கும் சுதன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், ”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.
எடிட்டர் சான் லோகேஷ், “இதுபோன்ற படம் கிடைப்பது அபூர்வம். சிறப்பாக வந்துள்ளது”.
கலை இயக்குநர் ராமு தங்கராஜ், “பெண்களை பற்றி அதிகமாக பேசியிருக்கும் ‘தாய் கிழவி’ மிக முக்கியமான படம். எங்களிடம் கதை சொன்னதை விட இயக்குநர் சிறப்பாகவே எடுத்திருக்கிறார். படத்தை தயாரித்திருக்கும் சுதன் மற்றும் சிவகார்த்திகேயன், திறமையாக நடித்திருக்கும் ராதிகா என அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
ஒப்பனைக் கலைஞர் வினீஷ், “என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”.
பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன், “’தாய் கிழவி’ படத்தில் என் மனைவியை நினைத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் நிவாஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் ஜெகன், “ஒரு கிழவி மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் சீக்கிரம் சாக வேண்டும் என்ற சூழலில் வரும் பாடல். இதுபோன்ற சூழ்நிலைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வந்திருக்காது என நினைக்கிறேன். இதற்கு நேரெதிராக இன்னொரு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு பாடல்களும் அருமையாக வந்திருக்கிறது”.
நடிகர் பாலசரவணன், “மகிழ்ச்சியான, எனக்கு தேவையான படம் இது. இயக்குநரை ‘என்னா மனுஷன்யா!’ என பாராட்டலாம். அந்தளவுக்கு மிகவும் பணிவானவர். இப்படி ஒரு சிறப்பான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. கதையை கேட்டு சிரித்தேன், அழுதேன். எனக்கு கிடைத்த செல்வம்தான் இந்த கதாபாத்திரம். ராதிகா மேம் நடிப்பை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தெளிவான அரசியல் பேசும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி”.
நடிகர் அருள்தாஸ், “இயக்குநர் சிவாவிடம் இருந்து கதை கேட்டபோது அவரிடம் இருந்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் இதில் உண்டு. முழுக்க முழுக்க திருப்தியான, பெருமையான படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு ஒத்துழைத்த ஊர்மக்கள், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் இந்தப் படத்திற்காக ராதிகா மேம் தேசிய விருது பெறுவார். எல்லா வயதினருக்கும் பிடித்த படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.
நடிகர் சிங்கம்புலி, “பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்த ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய ஹிட். அதுபோலவே, பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை. தீவிர ரஜினிகாந்த் ரசிகனான நான் இந்தப் படத்தில் கமல்ஹாசன் ரசிகனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் இளவரசு, “’தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையும் இதுபோன்ற படங்கள் எடுக்க முன்வரும். இதற்கு காலமும் சினிமாவும் துணை நிற்க வேண்டும். மிகச்சிறந்த நடிகை ராதிகா. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”.
நடிகர் முத்துக்குமார், “’கடைசி விவசாயி’ மணிகண்டனின் உதவி இயக்குநர்தான் சிவகுமார். ரொம்பவும் வலிமையானவர். நான் பிறந்த மண் சார்ந்து ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரமாக ‘தாய் கிழவி’ படத்தில் கிடைத்திருக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. தாய் கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கனா’, ‘கொட்டுக்காளி’ படங்களுக்கு பிறகு நிறைய விருதுகள் குவிக்கும் படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.
நடிகை ரேய்ச்சல், ”’கடைசி விவசாயி’ படத்தில் இருந்தே இயக்குநர் சிவாவை தெரியும். அவரின் வளர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் ஒரு பெண்ணை ஹீரோவாக பார்ப்பது மகிழ்ச்சி. ராதிகா மேம் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு. அவரது மகள் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் இந்த கதாபாத்திரத்தை என்னுடன் பொருத்தி பார்த்துக் கொள்ள முடிந்தது. நன்றி”.
இயக்குநர் இரா. சரவணன், “எளிதில் கணிக்க முடியாதவர்கள்தான் இந்த மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சினிமாவிலும் பத்திரிகையிலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னால் கணிக்க முடியாத ஒரு நபராக தம்பி சிவகார்த்திகேயன் இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திருஷ்டி சுற்றி போட்டாலும் பத்தாது. அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் நடிகை ராதிகா கொடுத்திருக்கிறார். ஹீரோக்கள் பின்னாடி ஓடும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் ஏன் தயாரிக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலடிதான் ‘தாய் கிழவி’ படம்” என்றார்.
தயாரிப்பாளர் ஏஜிஎஸ் ஐஸ்வர்யா கல்பாத்தி, “இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் இது. நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும். இயக்குநர் சிவா இப்படியான நல்ல படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. ராதிகா மேம் சிறப்பாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, “இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சிவா மற்றும் சுதன் இருவருக்கும் நன்றி. இயக்குநர் சிவா என் மனதுக்கு நெருக்கமானவர். நாங்கள் பேசுவதை விட படம் பார்த்துவிட்டு, வருகிற 27ஆம் தேதி நீங்கள் பேசுவீர்கள்” என்றார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ், “இந்தப் படத்தில் ராதிகா மேமை முதலில் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. பல காட்சிகள் உங்களை கலங்கடிக்கும். உங்களின் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கும். பெண்களை மையப்படுத்தி சொன்ன ‘கனா’ படத்தை விட 100 மடங்காக ’தாய் கிழவி’ படம் இருக்கும். சிறந்த படத்தில் நானும் பங்களித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “சின்ன ஊர்களில் இருந்து பெரிய கனவுகளோடு வரும் பலருக்கும் சிவா சார்தான் இன்ஸ்பிரேஷன். ரூரல் எண்டர்டெயினர் திரைப்படம் வந்து ரொம்ப நாள் ஆகிருச்சு. அதை ஸ்பேசை இயக்குநர் சிவா சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படம் பார்த்தபோது ராதிகா மேம் இன்னொரு லேடி கமல்ஹாசனாகதான் தெரிந்தார். நிச்சயம் படக்குழுவினருக்கு தேசிய விருது கிடைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இது அமைய வாழ்த்துக்கள்”.
இயக்குநர் சிவகுமார் முருகேசன், “என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. ராதிகா மேம் முதலில் தயங்கினாலும் கதை மீது நம்பிக்கை வைத்து சின்சியராக நடித்துக் கொடுத்தார். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த என் குழுவினருக்கு நன்றி. பசியும் பட்டினியும் ஒன்று போல தெரிந்தாலும் அதற்கு நடுவில் ஒரு கோடு இருக்கிறது. ’தாய் கிழவி’ எனும் ராஜ விருந்து கொடுத்ததோடு ‘சேயோன்’ எனும் நெல் கட்டையும் அடுத்து எனக்கு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிச்சயம் நல்ல விளைச்சல் காட்டுவேன். நன்றி”.
நடிகர் சூரி, “இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தையும் நாமும் எதிர்கொண்டிருப்போம். படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என பன்ச் டயலாக் பேசாமல் காட்சிகள் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது என் அம்மா நியாபகம் வந்தது. யாருமே தவற விடக்கூடாத படம் இது. பெரிய விஷயத்தை அசால்டாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சிவா. நாற்பது வருடங்களுக்கு மேலான தனது அனுபவத்தை இந்தப் படத்தில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார் ராதிகா மேம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ‘நான் நடிக்கிற படங்களில் எல்லாமும் திணிக்க முடியாது. ஆனால், நான் தயாரிக்கிற படங்கள் இந்த சமூகத்திற்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என தம்பி சிவகார்த்திகேயன் சொல்வார். அதைத்தான் எல்லா படங்களிலும் செய்து வருகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்”.
நடிகை ஸ்ரீபிரியா, “படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன். ஏனெனில், என் ராதிகாவை பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்க வேண்டும். இந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவை பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப் படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது. ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார். ராதிகாவுக்கு தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்தப் படம் அந்த குறையை நீக்கும் என நம்புகிறேன்”.

நடிகை ராதிகா, “எல்லோருடைய அன்பு, நம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆனால், நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம். என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி. உண்மையில் இந்த கதை ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால், இந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படிதான் நான் இதை பார்க்கிறேன். 4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ’உன்னை தாண்டி அந்த கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் சரியாக கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். எல்லா துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப் படத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. பெண் எம்.ஆர். ராதாவாக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன். நான் எம்.ஆர். ராதா மகள் என்று! வாய்ப்பிற்கு நன்றி”.
நடிகர் சிவகார்த்திகேயன், “’தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். அடுத்து தலைவர் படம் இயக்க இருக்கும் சிபிக்கும் வணக்கம். நாம் இருவரும் சேர்ந்து சுதனுடன் படம் செய்யவதாக இருந்தது. நீ மட்டும் இப்போது எஸ்கேப். சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை
‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால், படத்தின் மீதான நம்பிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
இந்த கட்டத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு ஆழம் சேர்த்துள்ளனர். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ‘ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார்.
இரு படைப்பாளர்களின் இணைப்பு, நுணுக்கமான உணர்வுகளும் யதார்த்தமும் கலந்த செழுமையான திரைக்கதையை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
முதல்கட்ட படப்பிடிப்பில் உருவான காட்சிகள் குறித்து படக்குழு மிகுந்த திருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் காட்சியமைப்பு, படத்தின் ஆன்மாவையும் உணர்வுகளையும் அழகாக பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஷன் சினிமா ஹவுஸ் பேனரில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். படக்குழுவின் அர்ப்பணிப்பும் தொழில்நுட்ப தரமும் சிறப்பாக அமைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னை நகரில் துவங்கவுள்ளது. முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன. ‘ஹைக்கூ’ திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பங்குதாரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, ‘ஹைக்கூ’ படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை விரைவில் பகிர உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!
தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், பான்-இந்தியா அளவில் வெற்றி பெற்ற ஹனுமேன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ஜெய் ஹனுமான் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக உருவாகும் இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான Mythri Movie Makers மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறது. T-Series நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது.
தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி, கடவுள் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற திறமையாளர்கள் இணையும் இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
சமகால நிகழ்வுகளை புராணக் கதைகளுடன் இணைத்து புதுமையாக கதை சொல்லும் தனிச்சிறப்புக்குப் பெயர் பெற்றவர் பிரசாந்த் வர்மா. அதேபோல், தொடர்ச்சியான வெற்றி படங்களை வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரிஷப் ஷெட்டி அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு பதிலாக ‘ஜெய் ஹனுமான்’ உருவாகி வருகிறது.
கடவுள் ஹனுமான் பிறந்த புனித தலமாக நம்பப்படும் Anjanadri Betta, ஹம்பி, Vijayanagara பகுதியில் இன்று பாரம்பரிய பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.
பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ‘ஹனுமேன்’ படத்தின் ஹீரோ தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து திரைக்கதையை இயக்குநரிடம் வழங்கினர்.
ஏற்கனவே வெளியான ரிஷப் ஷெட்டி ஹனுமானாக இடம்பெற்ற முதல் பார்வை போஸ்டர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சக்திவாய்ந்த மற்றும் ஆன்மிக ஆழமுள்ள இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
‘ஜெய் ஹனுமான்’ கலியுகத்தை பின்னணியாகக் கொண்ட அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. “ஹனுமானின் மௌனம் சரணாகதி அல்ல; அது எழுச்சி!” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, பக்தி, நம்பிக்கை மற்றும் சக்தியை பிரதிபலிக்கும் வகையில் படம் உருவாகிறது.
ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் வழக்கமான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜெய் ஹனுமான்’, பான்-இந்தியா அளவில் மற்றொரு சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா, தனக்கு வாக்களித்த உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையிலான அணியினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "நடந்து முடிந்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் எந்த அணியையும் சாராமல் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக நான் போட்டியிட்டேன். என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் தயாரிப்பாளராகவும் அங்கீகரித்து 230 வாக்குகளுக்கு மேல் அளித்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன்.
தயாரிப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் என்றும் நான் துணை நிற்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையிலான அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாகிகள் தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.
வெற்றி பெற்ற தமிழ்க்குமரன் அவர்கள், ராதாகிருஷ்ணன் அவர்கள், கதிரேசன் அவர்கள், சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஆர். கே. சுரேஷ் அவர்கள், கமலக்கண்ணன் அவர்கள், சுஜாதா விஜயகுமார் அவர்கள் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் காலத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிறைய நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













