சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

சூர்யா தான் காப்பாற்றினார்; அடையார் சம்பவ பெண் விளக்கம்
Updated on : 01 June 2016

சென்னை அடையாரில் காரில் சென்ற பெண்ணுடன் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது அங்கு வந்த நடிகர் சூர்யா அந்த இளைஞரை தாக்கியதாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



அதுமட்டுமின்றி அந்த இளைஞரை சூர்யா தாக்கியதாக கூறி, சூர்யா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.



 



இந்நிலையில், இதுகுறித்து சம்பவத்தில் தொடர்புடைய அந்த பெண் மனம் திறந்துள்ளார்.



 



"சம்பவத்தின்போது பைக்கில் வந்த அவர்கள் இருவரும் என்னுடைய கார் கண்ணாடியை உடைத்துவிடுவோம் என்று மிரட்டினர்.



 



என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர். பயமுறுத்திய இரு இளைஞர்களுக்கும், வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்துக்கும் மத்தியில் நான் தனியாக நின்றுகொண்டிருந்தேன். அவர்கள் யாருக்கோ போன் செய்து, எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் சொன்னார்கள்.



 



அந்த நேரத்தில் உங்களின் வண்டியை நிறுத்தினீர்கள். அவர்களிடம் பெண்ணைத் தொடக்கூடாது என்று அறிவுரை கூறினீர்கள். உங்களின் தலையீடு சரியான நேரத்துக்கு கிடைத்தது" என்று அந்த பெண் தனது ட்விட்டர் பதிவின் மூலம் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா