சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை
Updated on : 13 April 2023

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி வழக்கில் ஆறு மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கார்த்தி சமந்தா நடித்த ’எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தயாரிப்பதற்கு பிவிபி கேப்பிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து இயக்குனர் லிங்குசாமி ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் கடனாக பெற்று இருந்தார்.



 



இந்த கடனுக்காக அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டதால் பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திரும்ப செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.



 



சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லிங்குசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை அவர் உறுதி செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி, இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா