சற்று முன்

மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |   

சினிமா செய்திகள்

திருப்பூர் மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்
Updated on : 22 September 2023

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில்( 21.9.2023)இன்று லட்சகணக்கான மக்கள் கலந்துகொள்ள, 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு கோலாகலமாக  நடைபெற்றது. இவ்விழாவினில்  இந்து முன்னணி மாநில செயலாளர் M.சேவுகன் அவர்கள் தலைமையேற்று, கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் S.G.சூர்யா அவர்கள் மற்றும் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் J.S.கிஷோர்ஜி அவர்கள் கலந்து கொண்டார்கள்.



 





 





 



 





திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே  துவங்கி நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், திரூப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து லட்சக்கணக்கிலான மக்கள் வெகு உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் பல வண்ணங்களில், பல வித தோற்றங்களில், பல அளவுகளில்  அலங்கரிக்கப்பட்ட,  2000க்கும் மேற்பட்ட, விநாயகர் சிலைகள் கலந்து கொண்டன. கண்காட்சி போல,  பெரும் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பக்தியுடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 



 



 



 







இவ்விழாவினில் S. செந்தில்குமார் ஜி,  மாநிலச் செயலாளர் திருப்பூர் மாவட்டம்,  கோட்டைச்செயலாளர் மோகன்ஜி,  திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் சாமுண்டி ஜி,  திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.



 





 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா