சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் 'மார்க் ஆண்டனி' குறித்த சிபிஐ விசாரணை நிறைவு
Updated on : 20 October 2023

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்தியிலும் வெளியிட திட்டமிட்டு இருந்த படக்குழு சென்சார் சான்றிதழ் பெற மும்பையில் உள்ள சென்சார் போர்ட் அலுவலகத்தை அனுகியது ஆனால் படக்குழு எதிர்பார்த்தது போல் அவ்வளவு எளிதில் சென்சார் சான்றிதழ் கிடைக்க அங்கு வழி வகை இல்லாத சூழ்நிலையே நிலவியது.



 



அதுமட்டுமின்றி சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டு மெர்லின் மேனகா என்பவர் மூலம் படக்குழுவை சென்சார் போர்ட் நிர்வாகிகள்  அனுகியுள்ளனர், இதனை சற்றும் எதிர்பாராத படக்குழு அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்று அலோசனை செய்தபோது இனி தமிழ் சினிமா மட்டுமின்றி எந்த சினிமாவிற்கு இப்படி நிகழக்கூடாது என்றும் அதற்கு தக்க ஆதாரத்துடன் இந்த கும்பல் பற்றிய தகவல்களை பொதுவெளியில் தெரியபடுத்த வேண்டும் என்று முடிவு செய்து நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் மூலம் இடைத்தரகர் மெர்லின் மேனகாவிடம் தொலைப்பேசி வாயிலாக தொடர்புக்கொண்டு பணத்தையும் அவர்கள் குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு அனுப்பி ஆதாரங்களை சேகரித்த பின் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலமாக பகிரங்கப்படுத்தியது இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



 



 இதனைத்தொடர்ந்து மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களும் இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார், அதனைத் தொடர்ந்து சிபிஐ இவ்வழக்கை பதிவு செய்து விசாரிக்க நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் தொடர்பு கொண்டு மும்பைக்கு நேரில் வந்து புகார் கொடுத்து விளக்கம் தரும் படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கடந்த இரண்டு தினங்களாக ஹரி கிருஷ்ணன் முன்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்த பின் விளக்கமும் அளித்துள்ளார் இதனிடையே இடைத்தரகர் மேனகா மற்றும் இரண்டு மும்பை சென்சார் போர்ட் அதிகாரிகளையும் நேரில் ஆஜராக உத்தரவிட்ட சிபிஐ அவர்களிடமும் விசாரணையை தொடங்கியுள்ளது,விசாரணை நிறைவு செய்த ஹரி கிருஷ்ணன் நாளை சென்னை திரும்ப உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா