சற்று முன்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |   

சினிமா செய்திகள்

நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் 'மார்க் ஆண்டனி' குறித்த சிபிஐ விசாரணை நிறைவு
Updated on : 20 October 2023

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்தியிலும் வெளியிட திட்டமிட்டு இருந்த படக்குழு சென்சார் சான்றிதழ் பெற மும்பையில் உள்ள சென்சார் போர்ட் அலுவலகத்தை அனுகியது ஆனால் படக்குழு எதிர்பார்த்தது போல் அவ்வளவு எளிதில் சென்சார் சான்றிதழ் கிடைக்க அங்கு வழி வகை இல்லாத சூழ்நிலையே நிலவியது.



 



அதுமட்டுமின்றி சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டு மெர்லின் மேனகா என்பவர் மூலம் படக்குழுவை சென்சார் போர்ட் நிர்வாகிகள்  அனுகியுள்ளனர், இதனை சற்றும் எதிர்பாராத படக்குழு அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்று அலோசனை செய்தபோது இனி தமிழ் சினிமா மட்டுமின்றி எந்த சினிமாவிற்கு இப்படி நிகழக்கூடாது என்றும் அதற்கு தக்க ஆதாரத்துடன் இந்த கும்பல் பற்றிய தகவல்களை பொதுவெளியில் தெரியபடுத்த வேண்டும் என்று முடிவு செய்து நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் மூலம் இடைத்தரகர் மெர்லின் மேனகாவிடம் தொலைப்பேசி வாயிலாக தொடர்புக்கொண்டு பணத்தையும் அவர்கள் குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு அனுப்பி ஆதாரங்களை சேகரித்த பின் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலமாக பகிரங்கப்படுத்தியது இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



 



 இதனைத்தொடர்ந்து மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களும் இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார், அதனைத் தொடர்ந்து சிபிஐ இவ்வழக்கை பதிவு செய்து விசாரிக்க நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் தொடர்பு கொண்டு மும்பைக்கு நேரில் வந்து புகார் கொடுத்து விளக்கம் தரும் படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கடந்த இரண்டு தினங்களாக ஹரி கிருஷ்ணன் முன்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்த பின் விளக்கமும் அளித்துள்ளார் இதனிடையே இடைத்தரகர் மேனகா மற்றும் இரண்டு மும்பை சென்சார் போர்ட் அதிகாரிகளையும் நேரில் ஆஜராக உத்தரவிட்ட சிபிஐ அவர்களிடமும் விசாரணையை தொடங்கியுள்ளது,விசாரணை நிறைவு செய்த ஹரி கிருஷ்ணன் நாளை சென்னை திரும்ப உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா