சற்று முன்
சினிமா செய்திகள்
வால்வரின் வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்தபட்ட டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ
Updated on : 02 July 2024
![](https://tamilsaga.com/assets/news_images/croppedImg_671647740.jpeg)
டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது!
சமீபத்திய புரோமோ, இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்ஷன் அதிரடி சண்டையை ரசிகர்களுக்குக் காட்டியுள்ளது. சூப்பர் வில்லன் சப்ரெடூத் மீண்டும் வால்வரினை எதிர்கொள்ளும்படி இந்த ஆக்ஷன் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. டெட்பூல் கூறியது போல், நாங்களும் மிகப்பெரிய ரசிகர்கள்! புரோமோவை விட பல மடங்கு பிரம்மாண்டமாக நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மார்வெல் ஸ்டுடியோஸின் 'டெட்பூல் & வால்வரின்' ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
சமீபத்திய செய்திகள்
பிரைம் டே -2024ஐ முன்னிட்டு பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவிக்கிறது!
ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் வரவுள்ள பிரைம் டே 2024க்கு முன்னதாகவே, புதிய சேனல்கள், பிரைம் வீடியோ சேனல்களின் பார்ட்னர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாக்களில் சிறப்பான தள்ளுபடிகள் இவற்றிற்கு மேலாக, சமீபத்திய மற்றும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அனுபவிக்க முடியும்.
மும்பை—ஜூலை 3, 2024— இந்தியாவில் பெறும் ஆதரவுடன் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான ப்ரைம் வீடியோ, ஜூலை 20 மற்றும் 21 பிரைம் டே -2024ஐ முன்னிட்டு தனது பிரைம் உறுப்பினர்களுக்காக 5 மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 14 இந்திய மற்றும் சர்வதேச தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் அற்புதமான தேர்வை வெளியிடவுள்ளது. அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மெகா இந்தியன் ஒரிஜினல் தொடரான மிர்சாபூர் (இந்தி) சீசன்-3 மிர்சாபூரின் சிம்மாசனத்திற்காக மேலும் தீவிரமடைந்த போர்களத்துடன் ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. உலகளாவிய பிளாக்பஸ்டர் ஒரிஜினல் தொடரான தி பாய்ஸ் (ஆங்கிலம்) சீசன் 4-ன் புதிய எபிசோடுகள் பிரைம் டே வரை ஒவ்வொரு வாரமும் வெளிவரும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பிளாக்பஸ்டர் நிகழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டி இவ்விரண்டு தொடர்களும் பல இந்திய மொழிகளில் சப்டைட்டில் மற்றும் டப் செய்யப்பட்டு வெளிவருகின்றது.
ரோஜர் ஃபெடரரின் தொழில்முறை விளையாட்டு களத்தின் இறுதி பன்னிரண்டு நாட்களைப் பின்தொடரும் ஃபெடரர்: ட்வெல்வ் ஃபைனல் டேஸ் (ஆங்கிலம்) ஆவணப்படம், டிஸ்டோபியன் த்ரில்லர் சிவில் வார் (ஆங்கிலம்), சமூக நாடகம் PT சார் (தமிழ்), விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட நாச் கா குமா (மராத்தி), ஹீஸ்ட் காமெடியான கம் கம் கணேஷா (தெலுங்கு), வரலாற்று கதை ஒரிஜனல் தொடர் மை லேடி ஜேன் (ஆங்கிலம்), நகைச்சுவை களம் கொண்ட சர்மாஜி கி பேட்டி (இந்தி), மற்றும் அதிரடி நகைச்சுவை பொழுதுபோக்குச் சித்திரமான இங்க நான் தான் கிங்கு (தமிழ்) போன்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொடர்களுடன் பிரைம் வீடியோவில் பிரைம் டே கொண்டாட்டங்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. இந்த அற்புதமான திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் அனைத்தும் இப்போது பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கிறது.
கொண்டாட்டங்களை மேலும் தொடரும் வண்ணம் பிரைம் வீடியோ ஆக்ஷன் த்ரில்லர் படமான கருடன் (தமிழ்), ரொமான்ஸ்காமெடி ஸ்பேஸ் கேடட் (ஆங்கிலம்), மற்றும் துப்பறியும் காமெடி மை ஸ்பை: தி எடர்னல் சிட்டி (ஆங்கிலம்) ஆகியவையும் திரையிடப்படுகிறது.
மேலும் சிறப்புச் சேர்க்கும் நோக்கில், பிரைம் டேவை நோக்கிய பயணத்தின் பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த அனிம் உள்ளடக்கத்தை அனுபவிக்க வேண்டி பிரைம் வீடியோ சேனலில் க்ரஞ்சிரோல்-ஐயும் பிரைம் வீடியோ அறிமுகப்படுத்தியுள்ளது, கூடுதல் சந்தாவாக மாதத்திற்கு 79 ரூபாய் செலுத்தி இதனை ரசிக்கலாம். கூடுதலாக, MGM+, Lionsgate Play, Discovery+, Sony Pictures Stream, hoichoi, ManoramaMAX, Mubi, VROTT போன்ற பிற பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளின் ஆட்-ஆன் சந்தாக்களை வாங்கும் போது 50% வரை தள்ளுபடியை அனுபவிக்கும் வசதியும் பிரைம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரைம் வீடியோ சேனல்கள் மூலம், பிரைம் உறுப்பினர்கள் அதிக நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்கலாம், எவ்வித சிக்கலும் இன்றி உள்நுழைவு செய்யலாம் மற்றும் பில்லிங் வசதியை அனுபவிக்கலாம். அதோடு, எக்ஸ்-ரே, ஆஃப்லைனில் பார்ப்பதற்கான சிங்கிள் வாட்ச்லிஸ்ட் மற்றும் டவுன்லோட் லைப்ரரி போன்ற போன்ற அனைத்து பிரைம் வீடியோ அம்சங்களையும் பல்வேறு OTT தளங்களிலும் அனுபவிக்கலாம்.
வெளிவரும் தேதிகளுடன் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் வரிசை:
காட்சி/திரைப்படம் அசல் மொழி வெளிவரும் தேதி
தி பாய்ஸ் (சீசன் 4) ஆங்கிலம் ஜூன் 13, 2024 துவங்கி ஜூலை 18, 2024 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய அத்தியாயங்களுடன்
பெடரர்: டுவெல்வ் ஃபைனல் டேய்ஸ் ஆங்கிலம் 20 ஜூன் 2024
கம் கம் கணேஷா தெலுங்கு 20 ஜூன் 2024
PT சார் தமிழ் 21 ஜூன் 2024
நாச் கா குமா மராத்தி 21 ஜூன் 2024
மை லேடி ஜேன் ஆங்கிலம் 27 ஜூன் 2024
சிவில் வார் ஆங்கிலம் 28 ஜூன் 2024
ஷர்மாஜி கி பேட்டி ஹிந்தி 28 ஜூன் 2024
இங்க நான் தான் கிங்கு தமிழ் 28 ஜூன் 2024
சத்யபாமா தெலுங்கு 28 ஜூன் 2024
கருடன் தமிழ் 3 ஜூலை 2024
ஸ்பேஸ் கேடட் ஆங்கிலம் ஜூலை 4, 2024
மிர்சாபூர் (சீசன் 3) ஹிந்தி 5 ஜூலை 2024
மை ஸ்பை: தி எடெர்னல் சிட்டி ஆங்கிலம் 18 ஜூலை 2024
அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரைம்-டே நாட்களை அமேசன் இந்தியா ஜூலை 20 & 21, 2024 அன்று மீண்டும் கொணர்கிறது. அதிக அளவிலான சேமிப்புகள், சிறந்த டீல்கள், முன்னணி பிராண்டுகள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் வழங்கும் புதிய தயாரிப்புகள், பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு மற்றும் பலவற்றின் மூலம் மகிழ்ச்சியைக் கொண்டாட பிரைம் உறுப்பினர்கள் இங்கு தயாராகிறார்கள். பிரைம் டேயின் போது, ICICI வங்கி கிரெடிட்/டெபிட் கார்டுகள், SBI கிரெடிட் கார்டுகள் மூலம் மற்றும் ICICI வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளில் EMI பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தும்போது 10% அதிகம் சேமிக்க இயலும். அமேசான் பிரைம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அற்புதமான ஷாப்பிங், சேமிப்பு மற்றும் பொழுதுபோக்கு, இணை-பிராண்டான ICICI கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு வரம்பற்ற 5% கேஷ்பேக், பிரத்யேக டீல்களுக்கான அணுகல், பிரைம் டே உட்பட எங்களது ஷாப்பிங் நிகழ்வுகளுக்கான முன்கூட்டிய மற்றும் பிரத்தியேக அணுகல் இவை அனைத்தையும் ஒரே உறுப்பினர் சந்தாவில் பெறமுடியும். இன்னும் உறுப்பினராகவில்லையா? இலவச மற்றும் விரைவான டெலிவரி, விருது பெற்ற திரைப்படங்கள் & டிவி நிகழ்ச்சிகளுக்கு வரம்பற்ற அணுகல், 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களுக்கான வரம்பற்ற அணுகல், அமேசான் மியூசிக் மூலம் விளம்பரமில்லா மற்றும் போட்காஸ்ட் எபிசோடுகள், பிரைம் ரீடிங் மற்றும் அணுகலுடன், 3,000 க்கும் மேற்பட்ட மின் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் காமிக்ஸ்கள், பிரைம் கேமிங் உட்கின் பலன்களுடன் மாதாந்திர இலவச கேம் உள்ளடக்கம் போன்ற பிரைம் பலன்களைப் பெற ஆண்டுக்கு ₹1,499 செலுத்தி ப்ரைம் ஆனுவல், ஆண்டுக்கு ₹799-இல் பிரைம் லைட் மற்றும் ஆண்டுக்கு ₹399 இல் பிரைம் ஷாப்பிங் எடிஷன் போன்ற விருப்பமான சந்தாவைத் தேர்ந்தெடுக்க amazon.in/prime தளத்துக்கு விரையுங்கள்.,
'ககனச்சாரி' படத்திற்கு திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர் சுரேஷ் கோபி!
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில், கோகுல் சுரேஷ், அனார்கலி மரிக்கார், அஜு வர்க்கீசு மற்றும் KB கணேஷ்குமார் நடிப்பில், டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில், ஜுலை 5 வெளியாகயுள்ள மலையாளத் திரைப்படம் "ககனச்சாரி". இப்படத்தினை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளது.
"ககனச்சாரி" சென்னை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காகத் திரையிடப்பட்ட நிலையில், திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகர் சுரேஷ் கோபி.
பிரபல முன்னணி மலையாள நடிகர் சுரேஷ்கோபி அவர்களின் மகன் கோகுல் சுரேஷ், ககனச்சாரி படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். புதுமையான களத்தில், சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், நேற்று சென்னை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காகத் திரையிடப்பட்டது. இத்திரையிடலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர் சுரேஷ்கோபி, படக்குழுவினரைப் பாராட்டி , தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
கேரளாவில் இயற்கை பெருமளவு அழிந்து போன 2040 ஆம் ஆண்டில், மூன்று மனிதர்களிடம் ஒரு ஏலியன் பெண் அடைக்கலமாகிறாள். அதன் பிறகு நடக்கும் குளறுபடிகளைக் கலகலப்பான காமெடியுடன், புதுமையான திரைக்கதையில், புதுமையான களத்தில் சொல்லியிருக்கும் இப்படம், திரைவிழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது முன் திரையிடல்களில் விமர்சகர் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 21ஆம் தேதி கேரளாவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தினை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனம் இந்தியா முழுவதும் வெளியிடுகிறது.
லைக்கா நிறுவனம் 'இந்தியன் 2' படத்திற்காக நடுவானில் செய்த விளம்பரம்!
இந்தியன் இரண்டாம் பாகம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் .
மிகப்பெரிய பொருட்செலவில் 1996 இல் கமலஹாசன் வைத்து இந்தியன் என்ற பெயரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஷங்கர் இயக்கியிருக்கும் படம் தான் இந்தியன் 2 . லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும், கமலுடன் இணைந்து, ரகுல் ப்ரீத் சிங், விவேக், சித்தார்த், பிரியா பவானி சங்கர், மனோபாலா, எஸ்ஜே சூர்யா, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் மொழி மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை மூன்று பாடல்கள் படத்திலிருந்து வெளியாகி உள்ளன.
இதனிடையே இந்தியன் இரண்டாம் பாகத்தின் புரமோசன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மும்பை, சிங்கப்பூர், துபாய் என மாறி மாறி படக்குழு படத்திற்கான புரமோசன் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த அளவிற்கு பிரமோஷன் பண்ணுவதற்கு காரணம் என்ன என்று விசாரிக்கும் போது, இந்தியன் டு ஆரம்பித்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன என்றும், இடையில் இந்த படம் நின்றதால் மக்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்து விட்டது என்றும், அந்தக் குறைபாட்டை சரி செய்வதற்காகவே இந்த ப்ரோமோஷன் என்றும் பல குழுவினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, துபாய் நடுவானில் இந்தியன் 2 படத்திற்கான புரமோசன் செய்யப்பட்டது. ஸ்கை டைவிங் வீரர்கள் இந்தியன் 2 பட போஸ்டரை நடுவானில் பறக்கவிட்டு, அலங்கரித்தனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளனர். இது தற்சமயம் மிகவும் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.
Youtube அகில இந்திய இசை வரிசையில் முதல் இரண்டு இடத்தை பிடித்த கபிலன் வைரமுத்து எழுதிய பாடல்கள்
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்று இசை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய இசை வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு பாடலையும் எழுதியவர் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து.
இந்தியன் 2 திரைப்படத்தில் கபிலன்வைரமுத்து வசனமும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா நடிக்கும் 'சிங்காநல்லூர் சிக்னல்' இனிதே துவங்கியது !
முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர் AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி என்டர்டெயினராக உருவாகும் "சிங்காநல்லூர் சிக்னல்" படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது.
ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன் சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பிரபுதேவா நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறது.
கோலாகலமாக நடந்த படத்தின் பூஜையை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்...
முத்தமிழ் படைப்பகம் சார்பில் AJ பிரபாகரன் பேசியதாவது...
எங்களது லேபில் படைப்புக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கும், வரவேற்பிற்கும் நன்றி. லேபில் வெற்றியைத் தொடர்ந்து, ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்கும் நோக்கத்தில், இப்படத்தை உற்சாகமாகத் துவங்கியுள்ளோம். இப்படத்தில் நடனப்புயல் பிரபு தேவா அவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். அவர் ஆடினால் ரம்பா, ஊர்வசியே மயங்குவார்கள், நாமும் மயங்குவோம். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது எங்கள் கனவு. இயக்குநர் JM ராஜா இப்படத்தை இயக்கவுள்ளார். இசை ராஜா யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பவ்யா நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீமன் முக்கிய ரோலில் நடிக்கிறார். படம் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும். எல்லோருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது...
"சிங்காநல்லூர் சிக்னல்" படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் நல்ல தமிழில் அழகாகப் பேசினார். இந்தப்படத்தில் புதிய இயக்குநராக JM ராஜாவை அறிமுகப்படுத்துகிறார்கள். திரைத்துறையில் புதிதாகத் திறமையாளர்கள் வருவது நல்லது. இந்தப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியதாவது…
மாஸ்டர் கமலஹாசன் மிஸ்டராகிவிட்டார் ஆனால் பிரபு தேவா மட்டும் இன்னும் மாஸ்டராகவே இருக்கிறார். முத்தமிழ் படைப்பகம் என் வீடு மாதிரி, மிக மிக நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். பிரபு தேவா சார், சமீபத்தில் நான் நடித்த படத்தில் மிகவும் உதவியாக இருந்தார். அவர் நடனப்புயல் மட்டுமில்லை, இயக்குநர் புயலும் தான். இந்தப்படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர், நடிகர் PL தேனப்பன் பேசியதாவது,
"சிங்காநல்லூர் சிக்னல்" படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். என்னை நடிக்க அழைத்தார்கள். இயக்குநர் எனது நெருங்கிய நண்பர், இந்தக்கதையை என்னிடம் சொல்லியுள்ளார். படம் கண்டிப்பாக நன்றாக வரும். என்னை நடிக்க அழைத்ததால் வந்தேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், நன்றி.
நடிகர் ஸ்ரீமன் பேசியதாவது...
"சிங்காநல்லூர் சிக்னல்" இந்த சிக்னல் எப்போதும் க்ரீனாகத்தான் இருக்கும், இன்று சினிமா இருக்கும் சூழ்நிலையில், தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் நிலையில், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ள பிரபாகரன் சாருக்கு நன்றி. அவர் படமெடுத்தால் கண்டிப்பாகத் திரைக்குக் கொண்டு வந்துவிடுவார். மாஸ்டர் பிரபுதேவா, அவர் பாடலே பான் இந்தியா வெற்றி பெற்றது. நமக்கு பெருமை தேடித்தரும் மாஸ்டர், அவருடன் இது எனக்கு ஐந்தாவது படம் மகிழ்ச்சி. இயக்குநர் கதை வசனம் நிறைய எழுதியுள்ளார். 12 வருடமாக சினிமாவில் இருக்கிறார். கண்டிப்பாக இந்தப்படத்தை வெற்றிப்படமாக இயக்குவார். எல்லோருக்கும் நன்றி.
நடிகர் சுப்பு பஞ்சு பேசியதாவது...
முத்தமிழ் படைப்பகம் அவர்களுடன் லேபிலில் பணிபுரிந்தேன். மிகச் சிறப்பான தயாரிப்பு நிறுவனம், சொன்ன மாதிரி கச்சிதமாக நடந்து கொள்வார்கள். கண்டிப்பாக நல்ல படைப்பைத் தருவார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
நடிகை பவ்யா ட்ரிக்கா பேசியதாவது...
முத்தமிழ் பதிப்பகத்திற்கு என் நன்றிகள். வாய்ப்பு தந்த இயக்குநர் ராஜா சாருக்கு நன்றி. பிரபுதேவா சாருடன் நடிக்க வேண்டும் டான்ஸ் ஆட வேண்டும் என்பது என் கனவு. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ரொம்ப நல்ல டீம், கண்டிப்பாக நல்ல படைப்பைத் தருவோம் நன்றி.
இயக்குநர் JM ராஜா பேசியதாவது...
எல்லா உதவி இயக்குநர் வாழ்க்கை போலத்தான் என்னுடையதும், கையில் பவுண்டோடு சுத்திக் கொண்டிருந்த போது கேமராமேன் பன்னீர்செல்வம் சார் பிரபு தேவா சாரிடம் கூட்டிட்டுபோனார், என் திரைக்கதையைப் படித்து விட்டு ஒகே சொன்னார் பிரபு தேவா சார். தயாரிப்பாளருக்காக அலைந்தோம், காம்பொ இயக்குநர்களைத் தேடும் சினிமாவில், என்னுடைய கதையை பிரபாகரன் சார் படித்துவிட்டு, ஓகே சொன்னார். மேஜிக் மாதிரி இப்படம் நிகழ்ந்தது. முழுக்க முழுக்க சிரித்து மகிழும் என்டர்டெயினராக இப்படம் இருக்கும். உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள் நன்றி.
நடிகர் பிரபுதேவா பேசியதாவது...
இங்கு நீண்ட காலம் கழித்து உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. இங்குள்ள பலரை எனக்கு பர்ஸனலாகத் தெரியும், எல்லோருடனும் படம் செய்துள்ளேன், ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் பற்றி எல்லோரும் சொன்னார்கள், இந்த கம்பெனியில் நாலைந்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என வேண்டிக்கொண்டேன். மிக கச்சிதமாகத் திட்டமிடுகிறார்கள். மிக நல்ல தயாரிப்பு நிறுவனம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
நடிகர் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். லேபில் வெப் தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹரி சங்கர், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, ஹரிசங்கர், நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிஃபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, PL தேனப்பன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைக் கோவையில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஹம்பியில் பூஜையுடன் 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது!
உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரண் திரையரங்குகளுக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு, திரைப்பட தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார். வி மெகா பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தை, யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பங்குதாரரான விக்ரம் ரெட்டி - 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' , 'கார்த்திகேயா 2' ஆகிய வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது 'தி டெல்லி ஃபைல்ஸ்' எனும் படத்தையும் தயாரித்து வருகிறது. இவர்களுடன் இளமையான மற்றும் திறமையான நட்சத்திர நடிகரான நிகில் சித்தார்த்தா இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே 'கார்த்திகேயா 2' படத்திற்காக தொலைநோக்கு தயாரிப்பாளர் என புகழப்படும் அபிஷேக் அகர்வாலுடன் பணியாற்றியிருக்கிறார். தற்போது உலக அளவில் அறியப்பட்ட.. . இந்தியாவை பெருமைப்படுத்திய ராம்சரணுடன் இணைந்திருக்கிறார்.
'தி இந்தியா ஹவுஸ்' படத்தை ராம் வம்சி கிருஷ்ணா எழுதி, இயக்குகிறார். நிகில் சித்தார்த்தா கதாநாயகனாகவும், சாயீ மஞ்சரேக்கர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சர்வதேச தரத்துடன் தயாராகும் 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். காதல் மற்றும் புரட்சியின் மூலத்தை ஆராயும் இந்த 1905 ஆண்டு காலகட்டத்திய படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹம்பியில் உள்ள விருபாக்ஷா ஆலயத்தில் படக் குழுவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
புரட்சியின் உக்கிரமான உணர்வுடன் காதலையும் கலந்து தயாராகும் இந்த திரைப்படம் வழங்கும் புதிய சினிமா அனுபவத்தை கொண்டாட எங்களுடன் இணைந்திருங்கள்.
இந்த திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்குநராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் விஷால் அபானி பணியாற்றுகிறார்.
விஜய் ஆண்டனியின் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ், மகிழ்ச்சியில் படக்குழுவினர்!
நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய் மற்றும் வாகு மசான் ஆகியோர். படத்தொகுப்பை பிரவீன் கே.எல். கையாண்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். 'மழை பிடிக்காத மனிதன்' படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் படத்தில் இருந்து வெளியான 'தீரா மழை' மற்றும் இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் ’தேடியே போறேன்' ஆகிய இரண்டு பாடல்களுக்கும் இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரிலீஸூக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
'கல்கி 2898 கிபி' பட புஜ்ஜியை ஓட்டிய ரிஷப்ஷெட்டி, ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டாட்டம்!
'கல்கி 2898 கிபி' படமும் “காந்தாரா” படமும் இணைந்த ஒரு மகிழ்வான தருணம். காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி 'கல்கி 2898 AD' படத்தில் பயன்படுத்தப்பட்ட, எதிர்கால வாகனமான புஜ்ஜியை ஓட்டியது, இப்போது இணையம் முழுதும் பெரும் வைரலாகி வருகிறது. 'கல்கி 2898 கிபி' x “காந்தாரா” எனும் டேக்குடன் புஜ்ஜியை தான் ஓட்டும் வீடியோவை ரிஷப் ஷெட்டி டிவிட்டரில் பகிர, ரசிகர்கள் அதனைக் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர்.
புஜ்ஜியை ரிஷப் ஷெட்டி ஓட்டும் வீடியோ கல்கி படத்தின் எதிரர்பார்ப்பைக் கூட்டுகிறது. ரசிகர்கள் மத்தியில் கல்கி திரைப்படம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக, ஆனந்த் மஹிந்திராவும் புஜ்ஜியை ஓட்டியது வாகனத்தின் வசீகரத்தை அதிகப்படுத்தியது.
'கல்கி 2898 கிபி' படத்தின் முன்னணி நடிகரான பிரபாஸுக்கு ரிஷப் ஷெட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பிரபாஸின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ரசிக்குமாறும் அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர், இப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சேவியர் பிரிட்டோ, இயக்குநர் விஷ்ணு வர்தன் இணைந்து வழங்கும் அட்வென்ச்சர் காதல் கதை!
அஜித்குமார், பவன் கல்யாண் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை உருவாக்கி ‘ஸ்டார் டைரக்டர்’ என்ற அந்தஸ்தைப் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவர் தனது பாலிவுட் பயணத்தைத் 'ஷெர்ஷா’ படத்தில் இருந்து தொடங்கினார். அது பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் என்பதை மறுக்க முடியாது. சல்மான் கானுடனான அவரது அடுத்த பெரிய படம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபத்திரங்களில் நடித்துள்ள ’நேசிப்பாயா’ என்ற அழகான அட்வென்ச்சர் காதல் கதையின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வருகிறார்.
விஷ்ணு வர்தன் நாடு முழுவதும் உள்ள முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், அறிமுக நடிகரான ஆகாஷ் முரளியுடன் அவர் புதிய படத்தில் இணைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுபற்றி அவர் பகிர்ந்திருப்பதாவது, “நான் அவருக்குள்ளிருக்கும் ‘ஸ்டார்’ரைப் பார்க்கிறேன். ஆகாஷ் ஒரு திறமையான கலைஞர். மேலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது நடிப்புத் திறனை மெருகேற்ற நிறைய தயார் செய்துள்ளார். அவரது நடிப்பை திரையில் பார்க்கும் பார்வையாளர்கள் எனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்கள். இந்த படம் ஒரு அழகான சாகச காதல் கதையாக இருக்கும். இது காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள் மற்றும் காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பல தருணங்களைக் கொண்டதாக இருக்கும்” என்றார்.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறுகையில், “நாட்டின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணு வர்தனுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. விஷ்ணு வர்தன் தனது ஹீரோக்களை எப்போதும் அழகாக திரையில் காண்பிப்பார். இந்தப் படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு அழகான அறிமுகமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மாதங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால்! - நடிகர் சித்தார்த்
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக "இந்தியன் 2" டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினில்
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசியதாவது…
'உலக நாயகன் கமல் சார், பிரம்மாண்டத்தின் உச்சம் இயக்குநர் ஷங்கர் சார், ராக்ஸ்டார் அனிருத் மூன்று பேரும் சேர்ந்து, இந்தப்படத்தில் ரணகளப்படுத்தியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கமல் சார், ஷங்கர் சார் இணைந்து, இதற்கு மேல் இப்படி ஒரு பிரமாண்ட படைப்பைத் தர முடியுமா எனத் தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி' என்றார்.
நடிகர் சித்தார்த் பேசியதாவது…
'21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு, என் ஆசான் கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் நன்றி சார். ஒரு புதுமுகமாக என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை விட, இந்த படத்தில் நீங்கள் கொடுத்த பொறுப்பை மிக எளிதாக விட்டு விடமாட்டேன். அதற்கான உழைப்பை தந்துள்ளேன் என நம்புகிறேன். கடந்த 20 வருடங்களில் நான் நடித்த பாத்திரங்களில் என்னுடைய பர்சனல் முகம், இந்த படத்தில் நிறைய இருக்கிறது. எனக்குமே இது பர்சனல் ஜர்னியாக இருந்தது. அற்புதமான அனுபவம். இந்த கதாபாத்திரத்தை தந்ததற்கு நன்றி சார். உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் நான் கமல் சாரின் தீவிரமான ரசிகன். அவர் எனக்கு எப்போதும் ஆசானாகவே இருந்திருக்கிறார். ஆனால் எப்போதெல்லாம் கேமரா முன்பு நிற்கிறேனோ, அப்போது மேலே இருந்து, அவருடைய உழைப்பும், நடிப்பும் தான் என்னை வழிநடத்தியது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்குமோ? அதுதான் இந்தியன் 2. இந்தியன் தாத்தா வறார் கதற விடப் போகிறார்' என்றார்.
இயக்குநர் ஷங்கர் பேசியதாவது...
'பொதுவாக எப்போதும் என்னுடைய படங்கள் இது இப்படி நடந்தால், எப்படி இருக்கும் என்கிற கான்செப்டில் தான் இருக்கும். இந்தப்படமும் அந்த மாதிரி தான். இப்போதிருக்கும் நாட்டின் சூழ்நிலையில், இந்தியன் தாத்தா வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இப்படம். இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அனைவரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இந்தியன் படத்தைப் பொறுத்தவரை அதன் கதை தமிழ்நாட்டில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தியன் 2 கதை, கொஞ்சம் வெளியே சென்று, இந்தியா முழுக்க, எல்லா மாநிலங்களிலும் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையைப் பொறுத்த வரைக்கும், இதில் நிறைய கேரக்டர்கள் இருக்கிறது. இந்தியன் தாத்தா தவிர, நிறைய குடும்பங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இந்தியா முழுக்க இருக்கும் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவர்களை இந்தப்படம் கொஞ்சம் யோசிக்க வைக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் மிகச் சிறப்பாக வர மிக முக்கியக் காரணம் கமல் சார் தான். பார்ட் 1 இல் கூட நாங்கள் அவருக்கு 40 நாள் தான் மேக்கப் போட்டு தான், ஷூட் செய்தோம். ஆனால் இந்தப் படத்தில் 70 நாட்கள் அவர் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு வந்து, மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு ரெடியாக வேண்டும், சாப்பிட முடியாது தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். மிகக் கஷ்டப்பட்டு, மிக அர்ப்பணிப்போடு இருப்பார். அவர் உழைப்பைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருக்கும். ஷூட்டிங்கே முடிந்தாலும் அவர்தான் கடைசியாகப் போவார். அந்த மேக்கப் கலைப்பதற்கு 1 மணி நேரமாகும். முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது ஒரு சிலிர்ப்பு வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அவரை ஷீட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாக தான் வாழ்ந்திருக்கிறார். இந்தியன் பார்ட் 1 வந்த போது, பிராஸ்தடிக் மேக்கப் அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். ஒரு சீன் 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கி கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்து கொண்டு நடிக்க வேண்டும். உலகில் யாராலும் முடியாது ஆனால் கமல் சார் அதைச் செய்துள்ளார். இன்னும் பல காட்சிகள் சொல்லிக்கொண்டே போகலாம். கமல் சார் உங்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. அனிருத் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக மியூசிக் போட்டுள்ளார். ஒரு டியூன் அனுப்புவார் 80 % ஓகே என்பேன். ஆனால் நீங்கள் 100 % சொல்லும் வரை போட்டுக் கொண்டே இருப்பேன் என்பார். என்னவிதமான சிச்சுவேசன் தந்தாலும் மிரட்ட கூடியவர், அனிருத்துக்கு வாழ்த்துக்கள். விவேக் சார் அவரை திரையில் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. மனோ பாலாவும் அழகாக நடித்துள்ளார். சித்தார்த், பாபி சிம்ஹா நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவில் வர்மம் செய்து ரவிவர்மம் காட்டியுள்ளார் ரவிவர்மன். குணால் சின்ன சின்ன சவுண்டில் கூட அவ்வளவு உழைத்திருக்கிறார். இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும். சுபாஸ்கரன் சார் ரெட் ஜெயன்ட் மூவிஸ், நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படத்தை சப்போர்ட் செய்து பெரிய வெற்றி பெறச்செய்தீர்கள். அதேபோல் இந்தப் படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும்' என்றார்.
நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது...
'உயிரே உறவே வணக்கம். உலகளவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் அதே இயக்குநர் எடுப்பது, அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளது. அதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ஷங்கருக்கும், அதை நான் இருந்து, எனக்கும் வாய்ப்பளித்ததற்கும் நன்றி. முக்கியமாக இந்திய 2 எடுப்பதற்குக் கருவைத் தந்துகொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனெனில் கரப்சன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தா வருகைக்கு, உங்களிடம் அர்த்தம் இருக்கிறது. இந்த மேடையில் மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்கள் சிலர் இப்போது இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக். நடிகர் விவேக் உடன் இப்போது தான் நடித்த மாதிரி இருக்கிறது. காலம் எப்படி உருண்டோடுகிறது என்பதற்கு இந்தியன் படம் சான்றாக இருக்கிறது. ஷங்கர் இன்னும் இளைஞராக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முரண் கருத்து எப்போதும் மேடையில் இருக்க வேண்டும். ஷங்கரும் நானும் நினைத்தால் கூட இந்தியன் 2 மாதிரி படமெடுக்க முடியாது என்றார் ரவிவர்மன், ஆனால் எடுத்துள்ளோம் அதான் இந்தியன் 3. இந்தப்படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல, இயற்கையும் கொரோனா நோயும் தான் காரணம். அதையெல்லாம் தாண்டி இப்படத்தை எடுக்கத் துணையாக நின்ற லைகாவிற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் நன்றி. தம்பி உதயநிதி அவர் எங்கள் ரசிகனாக இருந்ததால், இதை எடுக்கத் துணிந்தார். அவருக்கும் நன்றி. சித்தார்த் இங்கு மேடையில் மட்டுமல்ல, என்னிடமும் அப்படித்தான் பேசுவார். அன்பா, நடிப்பா எனத்தோன்றும், அவ்வளவு பணிவாக இருப்பார். நல்ல மனசுக்காரார். இந்தப் படம் பல சாதனைகள் படைக்கும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்' என்றார்.
பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை, மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இந்தியன் 2, அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2 எனவும் மற்றும் தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியிடப்படுகிறது.
நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா.
- உலக செய்திகள்
- |
- சினிமா