சற்று முன்
சினிமா செய்திகள்
Susi Ganeshan Reveals Motion Poster for 'Ghuspaithiya
Updated on : 23 July 2024
The makers of the highly anticipated film 'Ghuspaithiya' have launched a brand new motion poster featuring the names of Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi. The motion poster showcases a fleet of ships, among which a sudden appearance of a black ship wearing headphones and a police cap catches the eye. The poster gives the impression that a hidden Ghuspaithiya is lurking among the fleet, signaling a sense of caution to the audience. This unique and intriguing concept has created a buzz among fans, who are eagerly waiting to discover which of these stars is the real 'Ghuspaithiya'.
The makers shared the motion poster on their social media platforms, sparking excitement and anticipation. They captioned the post with a mysterious message, "caption to be added," further adding to the suspense.
Directed by Susi Ganeshan, 'Ghuspaithiya' is produced by M. Ramesh Reddy, Jyotika Shenoy, and Manjari Susi Ganeshan. The film's cinematography is helmed by Sethu Sriram, with music directed by Akshay Menon and Saurabh Singh. The film promises to be a thrilling experience, blending suspense, action, and stellar performances by the lead cast.
Talking about recent incident, actress Urvashi Rautela's bathroom video was leaked, and the next day, her phone call with her manager was tapped, which went viral on the internet. Later, fans started linking the video to the film and posting it on social media.
'Ghuspaithiya' is set to release in theaters on August 9th. Fans and moviegoers are eagerly waiting to unravel the mystery and witness the thrilling journey on the big screen.

சமீபத்திய செய்திகள்
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஜனவரி 15 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு “ஃபீல்-குட்” குடும்ப சினிமாகாக இது உருவாகியுள்ளது.
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இணை தயாரிப்பாளர் தீபக் ரவி தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தது. இதில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு ஜாக்கி, மற்றும் முக்கிய நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன் பேசுகையில்,
''தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி அன்று தான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது நாங்கள் அதற்கு முன்னதாக ஜனவரி 15 ஆம் தேதி அன்று வெளியிடுகிறோம். தலைவர் தலைமையில் ஒரு படம் வெளியாக இருந்தது. தற்போது தலைவர் தம்பி தலைமையில் ஒரு படம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகளை ஏப்ரல் மாத தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கினோம். தை திருநாள் அன்று வெளியிடுகின்றோம். இதற்கு இந்த படக்குழுவினர் முழுமையாக அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நடிகர் ஜீவா காலை 7 மணிக்கு முதல் காட்சி என்றால் 6:55 க்கு தயாராக படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினர் அனைவரும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் ஒன்றிணைந்து பணியாற்றினர். படப்பிடிப்பு தளத்தில் வருண பகவானின் ஆசியும் எங்களுக்கு கிடைத்தது. 45 நாட்களில் ஜீவாவின் 45 ஆவது திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் படப்பிடிப்பு அவருடைய தலைமையில் சிறப்பாக நிறைவடைந்தது. படத்தின் வெளியீடு திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக வெளியாவதால்.. படத்தின் இறுதி கட்டப் பணிகளை இயக்குநர் - படத்தொகுப்பாளர் - இசையமைப்பாளர்- ஆகியோர் பணியாற்றி வருவதால்.. அவர்களால் இந்த நிகழ்விற்கு வர இயலவில்லை. படம் மிகச் சிறப்பாக இருக்கிறது'' என்றார்.
நடிகர் ஜெய்வந்த் பேசுகையில்,
'' டி டி டி ( TTT) என்றால் தி டைம் ஃபார் டிவிஸ்ட் என சொல்லலாம். ஜனவரி 30 வெளியீடு என்று சொல்லிவிட்டு, 15ஆம் தேதியே வெளிவருவது மிக்க மகிழ்ச்சி. எந்த ஒரு கலைஞனுக்கும் தான் நடித்த படம் பண்டிகை தினங்களில் வெளியானால் அது மகிழ்ச்சியை தரும். அந்த வகையில் இந்த 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என சொல்வார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் மிகவும் கேளிக்கையான படம். ஃபீல் குட் படம் என்றும் சொல்லலாம். 45 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு தருணம் முழுவதும் அனைவரும் குடும்பமாக மகிழ்ச்சியாக பணியாற்றினோம். படப்பிடிப்பு தளத்தை நடிகர் ஜீவா எப்போதும் உற்சாகமாகவே வைத்துக் கொண்டிருப்பார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டிற்கான முதல் ஃபேமிலி என்டர்டெய்னர் படம் இது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகை பிரார்த்தனா நாதன் பேசுகையில்,
'' தலைவர் தம்பி தலைமையில் எனும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. 2025 என்றால் எனக்கு இந்த படத்தின் நினைவுகள் தான் அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் ஒரு அருமையான இடத்தில் நாங்கள் அனைவரும் தங்கி இருந்தோம். 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. நிறைவடைந்த தருணத்தில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்து பிரிகிறோமே ..! என்ற கவலை தான் அதிகம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து சந்தோஷமாக பணியாற்றினோம். இந்தப் படத்தில் நான் சௌமியா எனும் கதாபாத்திரத்தில் மணப்பெண்ணாக நடித்திருக்கிறேன். என்னுடைய திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் உணர்வு பூர்வமான மற்றும் அனைத்து விதமான உணர்வுகளையும் சார்ந்தது தான் இந்த திரைப்படம். இதுபோன்ற அழுத்தமான வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் தம்பி ராமையா பேசுகையில்,
'' இந்த ஆண்டின் கிளீன் 'யு' சர்டிபிகேட் உடன் திரையரங்கத்திற்கு குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து ரசிக்கும் வகையிலான தகுதி படைத்த படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' படம் அமைந்திருக்கிறது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக நான் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டுகளில் நடித்து சிறிதளவு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
இப்படத்தின் இயக்குநர் நிதிஷ் கதையை விவரிக்கும் போதே அதில் நடிக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. உயிர்ப்புள்ள கதை தனக்குத் தேவையானதை தானே தேடிக் கொள்ளும் என்பதைப் போல இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ஃபாசிலுக்கு பிறகு... இயக்குநர் சித்திக் -லாலுக்கு பிறகு.. இயக்குநர் நிதிஷ் ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டைனரை வழங்கி இருக்கிறார். அவருடைய முதல் தமிழ் படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.
இந்த படத்தின் ஜட்ஜ்மெண்டை நடிகர் ஜீவா தீர்மானிக்கிறார். இயக்குநர் நிதிஷ் ஜீவாவை சந்தித்து கதையை சொல்லும் போது.. ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன்... ஏராளமான வெற்றி படங்களை வழங்கிய நடிகர்.. ஆகிய அனுபவங்களை தனக்குள் வைத்துக் கொண்டு, இந்த கதைக்குள் தனக்கான பங்களிப்பு என்ன? என்பதை விட... தயாரிப்பாளரின் கோணத்தில் இருந்து இந்த படத்தின் கதையை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜீவா. வெற்றி பெறும் படத்தில் நான் கதாநாயகனாக இருக்கிறேன் என்று உறுதியாக தீர்மானித்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படித்தான் இந்த திரைப்படம் உருவானது அனைவருக்கும் திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கி அதில் தன்னுடைய இருப்பையும் நிலைநிறுத்திக் கொண்ட ஜீவாவை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த எண்ணம் அனைத்து ஹீரோக்களுக்கும் இருந்தால் ஓடாத படங்களின் எண்ணிக்கை குறைந்து, ஓடும் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாயகனாக ஜீவா வெற்றி பெறுவார்.
கல்யாணம் தொடர்பான காட்சிகள் எத்தனையோ படங்களில் இடம் பிடித்திருக்கும். இருந்தாலும் இதில் ஒரு புது வகையான திரைக்கதையில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் துபாயில் அமர்ந்து கொண்டு படத்தின் அனைத்து பணிகளையும் ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டார்.
இந்தப் படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டது. அதன் போது எனக்கு 'மைனா' திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. நானும், பங்காளி இளவரசும் படம் நெடுக வரும் கதாபாத்திரத்தை அனுபவித்து ரசித்து நடித்திருக்கிறோம். ஜனவரி 15ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு யாரும் எந்த ஒரு சிறிய குறையையும் சொல்லிவிட முடியாது. இப்படி ஒரு திரைப்படம் வரவேண்டும் என அனைவரும் கொண்டாடுவார்கள்.
நகைச்சுவை நடிகர்களாக நடிப்பவர்கள் கதையின் நாயகர்களாக அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நகைச்சுவை நடிப்பிற்கான வெற்றிடம் உருவாகிறது. அதனை நிரப்புவதற்காக பல்வேறு தளங்களில் பிரபலமாக இருக்கும் இவர்கள்...(மேடையில் இருக்கும் அறிமுக நடிகர்கள்) இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது'' என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில்,
'' தலைவர் தம்பி தலைமையில் உண்மையில் ஒரு மேஜிக் தான். நடிகரும், நண்பருமான வி டி வி கணேஷ் ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்கு வந்து மலையாளத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அந்தத் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் முன்பே கேட்டிருந்தார். சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அந்தப் படத்தின் இயக்குநரும் , இசையமைப்பாளரும் என்னை தொடர்பு கொண்டனர். அந்தப் படத்தின் பாடல்களுக்காகவும், பின்னணி இசைக்காகவும் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்க்கு நான் பாராட்டு தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியதுடன் தமிழிலும் பணியாற்றுங்கள் என கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு இயக்குநர் ஒருநாள் என்னை சந்தித்து கதையை சொன்னார். அக்கம் பக்கத்தில் உள்ள இரண்டு குடும்பம்... அவர்களுக்குள் ஏற்படும் ஒரு பிரச்சனை... நீங்கள் நடுவராக இருந்து அந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வை கொடுக்கிறீர்கள்? என்பதுதான் கதை என்றார். அவர் சொன்ன விதம் எனக்கு உடனே பிடித்திருந்ததாலும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன். அவரது இயக்கத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தில் நடிகர் பசில் ஜோசப் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு பசில் ஜோசப் வெற்றிகரமான நாயகனாக உயர்ந்தார்.
இந்த இயக்குநர் மற்றும் அவருடைய குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. முதலில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை கம்பம் பகுதிக்கு மாற்றினோம். அங்கே அரங்கம் அமைத்து 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். இந்தப் படத்தில் தண்ணீர் தொட்டி ஒரு கதாபாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது. அதனையும் உருவாக்கினோம். சிறிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு ஆனால் தயாரிப்பாளரின் விருப்பத்தினால் தாராளமான செலவில் படம் உருவாகி இருக்கிறது. என்னுடைய 45 ஆவது படத்தில்.. 46 நடிகர்களுடன் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் புது முகங்கள் அனைவரும் ஏற்கனவே யூட்யூப் மூலமாக பிரபலமானவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் அவர்களுக்கு ஏற்ற வகையிலும் திரைக்கதையும், வசனங்களையும் அமைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக இந்த படத்தில் ஏராளமான யங் எனர்ஜி இருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நாளில் அனைவருடைய கண்களிலும் கண்ணீர். நடிகர்கள் மட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்திருந்த அந்த ஊர் மக்களும் கண்ணீர் விட்டனர். படக்குழுவினரை அவர்கள் வாழ்த்தி விடை கொடுத்தனர்.
இயக்குநர் நிதிஷ் எழுதிய இந்த கதையில் எங்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. நாங்கள் திரையில் கதாபாத்திரத்தை உணர்த்து தீவிரமாக நடித்துக் கொண்டிருப்போம். ஆனால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் 'இப்படி எல்லாம் நடக்குமா..! ' என ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.
தம்பி ராமையா, இளவரசு என எல்லோரும் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றிய போது என்னுடைய சின்ன சின்ன ஆலோசனையும் இயக்குநருக்கு வழங்கினேன். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு புது முயற்சி.. ஒரு புது ட்ரீட்மென்ட்... புது வகையிலான நெரேட்டிவ்...வருணன் தலைவர் தம்பி தலைமையில் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு இதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். உண்மையாக உழைத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
ஜனவரி 30 ஆம் தேதி தான் இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் எங்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஜனநாயகன் படம் வெளியாகாதது குறித்து எங்களுக்கும் வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நடிகர் விஜய் ஏராளமான தயாரிப்பாளர்கள்- தொழில்நுட்ப கலைஞர்கள்- நடிகர்களுக்கு- பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் எங்களது தயாரிப்பு நிறுவனம் ஏழு எட்டு திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. அதனால் எங்களுடைய ஆதரவு எப்போதும் அவருக்கு இருக்கிறது. அதனால் நாங்கள் எப்போதும் போல் விஜயின் ஜனநாயகன் படத்திற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் இந்தப் படத்திற்கும் வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களை துபாய் தமிழ் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக என்னுடைய தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரியை தேர்வு செய்திருந்தார்கள். அந்த தமிழ் சங்கத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி விளம்பரதாரர் என்பதால்.. அவரை நேரில் சந்தித்தோம். அந்தத் தருணத்தில் இளம் திறமைசாலிகள் கொண்ட குழு இருக்கிறது. அவர்களை வைத்து இப்படி ஒரு காம்பாக்ட் பட்ஜெட்டில் படம் தயாரிப்பதற்கு விருப்பமா? எனக் கேட்டோம். உடனே அவர் தாராளமாக செலவு செய்து நல்லதொரு படத்தை உருவாக்குங்கள் என மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். அவருக்கும் அவருடைய வாரிசு தீபக் ரவி அவர்களுக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிறுவனம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.
‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘திரௌபதி 2’ தென்னிந்தியாவின் 14ஆம் நூற்றாண்டின் வேரூன்றிய காலகட்டக் கதையை சினிமாவில் மீளிச் சொல்லப்போகிறது.
இயக்குநர் மோகன் ஜி இயக்கும் வரலாற்று ஆக்ஷன் படத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக, ராக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாக, மற்றும் நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பலமொழிகளில் உருவாகும் இந்த படம் விரைவில் அனைத்து முக்கிய திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா சென்னையில் சிறப்பாக நடந்தது, இதில் நடிகர்கள் மற்றும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், "இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தக் கதை இன்னொரு 'பாகுபலி'. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர சான்றுகளோடு அற்புதமாக எடுக்கப்பட்ட படம் இது. தேசிய உணர்வோடு பாரம்பரியத்தையும் இந்த கதை சொல்லும். ராம நாமி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நிறைய ஆராய்ச்சி செய்து மோகன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.
மும்பை எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் சகோதரர் மோகன், "என் அண்ணன் தான் இந்த படத்தை பூஜை போட்டு ஆரம்பித்து வைத்தார், அதன் பிறகு படத்திற்கு வந்த சின்ன சின்ன பிரச்சனைகளை இயக்குநர் மோகன் ஜி சமாளித்து படத்தை வெற்றிகரமாக முடித்தார். நிதின் தேசாய் ஸ்டுடியோவில் என் அண்ணனும் மோகன் ஜிக்கு பக்கபலமாக இருந்தார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.
எடிட்டர் தேவராஜ், "இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. படம் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.
கலை இயக்குநர் கமல், “நாங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்களை கதையில் கொண்டு வந்து பிரம்மாண்டமாக இயக்குநர் எடுத்திருக்கிறார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
ஒளிப்பதிவாளர் பிலிப் கே சுந்தர், “இந்த வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ‘திரெளபதி2’ மூலம் வந்திருக்கிறேன். நன்றி”.
வசனகர்த்தா பத்மா சந்திரசேகர், “கதைக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட காலக்கட்டம் கொஞ்சம் குழப்பமான காலக்கட்டம். அதற்கு முன்பும் பல போர்கள் நடந்திருந்தாலும் நம் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடந்தது இந்த காலக்கட்டத்தில்தான். இதில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் என் வசனத்தை பேசிய நடிகர்கள் என அனைவருக்கும் நன்றி”.
நடன அமைப்பாளர் தணிகா டோனி, “இது என்னுடைய முதல் படம். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. முதல் படம் என்பதால் கொஞ்சம் பயத்தோடுதான் சென்றேன். ஆனால், இயக்குநர் மிகவும் ஆதரவு கொடுத்தார். அனைவருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் செல்வ மீரா, “எம் கோனே பாடலுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. பாடலுக்கு கிடைத்த அதே ஆதரவு படத்திற்கும் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
’வீர வல்லாள மகாராஜா’ புத்தகத்தின் எழுத்தாளர் ஆறு அண்ணல் கண்டார், “என் கனவை மோகன் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். மோகனைப் போன்ற தன்னம்பிக்கையான ஒருவரை நான் பார்த்தது கிடையாது. அருணாச்சல புராணம் என்ற சமஸ்கிருத நூலை எள்ளப்பநாதர் தமிழ்ப்படுத்தினார். அதில் ஒன்றுதான் வல்லாள மகாராஜாவின் சரிதம். அவரது ஆட்சியில் தர்மம் மேலோங்கி இருந்தது. இருந்தாலும் தனக்கு பின்னால் நாடு என்னவாகும் என சிவ பெருமானுக்கு மனக்குறை இருந்தது. இதனால் சிவனடியாராக பூமிக்கு வல்லாள மகாராஜாவிடம் வருகிறார். சிவனடியாரின் மனக்குறையை வல்லாள மகாராஜா தீர்த்து வைக்க அவருக்கே பிள்ளையாகிறார் சிவன். இந்தக் கதையை இன்னும் விரிவாக படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள்” என்றார்.
நடிகை ஜெயந்தி மாலா, “எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. வெற்றி பெற போகும் இந்த படத்தில் நான் விருதாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் எல்லோருமே அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.
நடிகர் கணேஷ், “மோகன் சார் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இதுபோன்ற படம் வருவது அரிதானது. அதில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். நன்றி”.
நடிகர் ஆல்பர்ட், “படத்தில் எனக்கு முக்கியமான ராஜா கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடன் சேர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கஷ்டப்பட்ட மேக்கப் மேனுக்கும் நன்றி. படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.
நடிகர் மாருதி, “இந்தப் படம் நடக்க முக்கிய காரணம் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி சார்தான். இந்தக் கதையை எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனை நம்பிக்கையோடு மோகன் ஜி எடுத்துள்ளார். மும்பையில் பல பெரிய படங்கள் எடுத்த ஸ்டுடியோவில்தான் இந்தப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. சிஜி இந்தப் படத்தில் அதிகம் இருக்காது. பெரும்பாலும் லைவ் லொகேஷனில்தான் எடுத்திருக்கிறோம். செட் வொர்க்கும் அற்புதமாக வந்துள்ளது. விஎஃப்எக்ஸ் பணியும் அற்புதம். படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். படம் பார்க்கும்போது அது உங்களுக்குத் தெரியும்”.
நடிகர் அருணோதயன், “இந்தப் படத்திற்கு மோகன் ஜி கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் பணிபுரிந்த அனைவரின் உடல் மற்றும் மனதை புரொடக்ஷன்ஸ் நிறைவாக வைத்திருந்தது. என்னை ஸ்டண்ட் செய்ய வைத்த இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி. ரிச்சர்ட் சார் மிக எளிமையாக நடந்து கொண்டார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.
நடிகர் தினேஷ் லம்பா, “இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இந்தப் படம் சொந்தமானது. படம் நன்றாக வந்துள்ளது”.
நடிகர் பரணி, “வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. என்னை வேறொரு ஜானரில் மோகன் ஜி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை எல்லோரும் பெரிதாக கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன். மோகன் ஜியின் கடுமையான உழைப்பிற்காகவே படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். நன்றி”.
நடிகை திவி, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கு நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி”.
நடிகை தேவயாணி ஷர்மா, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கு நன்றி. நான் மும்பையில் இருந்து வருகிறேன். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தை தியேட்டரில் பாருங்கள்”.
இயக்குநர் சரவண சுப்பையா, “மோகன் ஜியுடன் நான் ஏற்கனவே வேலை பார்த்திருக்கிறேன். கடுமையான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஜிப்ரானும் எனர்ஜிடிக்கான இசையை கொடுத்துள்ளார். உங்களை மிரள வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது. எல்லோரும் கடுமையாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளனர். வாழ்த்துக்கள்”.
நடிகர் சிராக் ஜானி, “தமிழ் கலாச்சாரத்துடன் இந்தப் படம் தொடர்புடையது. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி. யாருக்கும் அதிகம் தெரியாத வீர வல்லாள மகாராஜா பற்றி மோகன் படமாக எடுத்துள்ளார். தமிழ்நாடு என்பது பண்பாடு, அடையாளம், மண்ணுடைய வீரம், வரலாறு, அன்பு இதெல்லாம் உள்ளடக்கியது. இதுபோன்ற கதை மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. துக்ளக் கதாபாத்திரத்தை மிகவும் சின்சியராக நடித்திருக்கிறேன். ரிச்சர்ட் சாருக்கு நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். நல்ல கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதும் வரவேற்பு கொடுப்பீர்கள் என நம்பிக்கை உள்ளது” என்றார்.
இயக்குநர் முத்தையா, “’திரெளபதி2’ மோகனின் ஐந்தாவது படம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இது முக்கியமான படம். பெரும் வெற்றி பெற்று அனைவருக்கும் படம் பிடித்தமானதாக வர வாழ்த்துக்கள். நன்றி”.
நடிகர் வேல ராமமூர்த்தி, “மோகன் ஜி சினிமா துறைக்கு வந்ததில் இருந்து அவரது படங்களில் எப்போது நடிப்போம் என்ற தீ எனக்குள் இருந்தது. ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால், அது கொரோனா நேரம் என்பதால் நடிக்க முடியாமல் போனது. நான் சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் நடித்திருக்கும் முதல் சரித்திர படம் இது. துணிச்சலாக சரித்திர வரலாற்று படத்தை மோகன் ஜி எடுத்துள்ளார். பல எதிர்ப்புகள் வந்தபோதிலும் அதை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு இந்தப் படத்தை முடித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த வருடத்தின் முக்கியமான படத்தில் சிறப்பான இசையை ஜிப்ரான் கொடுத்துள்ளார். இது ‘திரெளபதி’ பொங்கல். திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீர வல்லாள தேவராயரின் சரித்திர கதை இது. ‘திரெளபதி2’ மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் நட்டி, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தக் கதை மூலமாக வரலாற்றை தெரிந்து கொண்டேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். குறைந்த நாட்களில் இந்த படத்தை முடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஜிப்ரான் இசையில் எம் கோனே பாடல் அருமை. படத்திற்காக பிரம்மாண்டமாக செலவழித்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்தப் படத்திற்காக ரிச்சர்ட் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. படத்தின் வில்லன்கள் எல்லோரும் நேரில் பார்க்க ஹீரோ மாதிரி உள்ளார்கள். ஹீரோயின்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நன்றி”.
இசையமைப்பாளர் ஜிப்ரான், ”ஒரு படத்தின் இயக்குநருடன் பயணம் செய்யும் அந்த நேரம் பயனுள்ளதாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது மோகன் ஜியுடன் நன்றாக செட் ஆனது. அவருக்குள் ஒரு குழந்தை உள்ளது. தெளிவும் நம்பிக்கையும் அவரிடம் நிறைய உள்ளது. இந்தப் படத்தில் எனக்கு நிறைய புது அனுபவங்கள் கிடைத்தது. எம் கோனே போன்ற ஒரு மெலோடி பாடலை ஓகே செய்ததற்கு நன்றி. ’திரெளபதி’ என்பதற்கு பின்னால் நிறைய சர்ச்சைகளும் இருந்தது. ஆனால், அதை எல்லாம் தாண்டி அவசியம் சொல்லப்பட வேண்டிய இந்த வரலாற்றை எடுக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு நன்றி”.
நடிகை ரக்ஷனா இந்துசூடன், “நெருப்பில் இருந்து பிறந்தவள் திரெளபதி. அந்தப் பெயரை ‘திரெளபதி2’ படத்தில் எனக்கு கொடுத்த இயக்குநர் மோகன் சாருக்கு நன்றி. இந்த கதை 14 ஆம் நூற்றாண்டில் நடந்தது. என்னை நம்பிய மோகன் சாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்திற்குள் வருவதும் வந்த பின்பு அதை விட்டு வெளியே போவதும் எனக்கு கடினமான ஒன்றாகதான் இருந்தது. நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர். இந்த கதாபாத்திரத்திற்காக எடை கூடியுள்ளேன். இயக்குநருடைய தெளிவான திட்டமிடல் மூலம்தான் படத்தை இவ்வளவு குறைந்த நாட்களுக்குள் முடிக்க முடிந்தது. பல தடைகளை தாண்டி பொங்கலுக்கு தமிழ் வரலாற்றை பற்றிய படமாக ‘திரெளபதி2’ திரையரங்குகளில் வரவிருக்கிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை”.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி, “இந்தப் படத்திற்கு சிறப்பான உழைப்பை நாங்கள் கொடுத்துள்ளோம். கதையை நம்பிய தயாரிப்பாளருக்கும் கடின உழைப்பு கொடுத்த மோகனுக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி, “பல வருடங்களாக கதை எடுக்கலாம் என்ற யோசனையில் இருந்தபோது சரியான கதையோடு மோகன் சார் வந்தார். 31 நாட்களில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் மோகன். காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை படப்பிடிப்பு நடக்கும். எங்களுக்கு ஆதரவு கொடுத்த ஊடகங்களுக்கும் நன்றி”.
இயக்குநர் மோகன் ஜி, “பீரியட் படம் இது என்பதால் முதல் படம் போலவே சின்சியராக வேலை பார்த்தேன். அதற்கு பெரும்பலமாக இருந்த தொழில்நுட்பக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. அவர்கள் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 31 நாட்களுக்குள் படம் எடுப்பது சாத்தியமே இல்லை. ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரெளபதி2’ இல்லை. இந்தப் படத்திற்காக இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரை பயிற்சி, கத்தி சண்டை என ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். நான் சொன்ன பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாய் போயிருந்தாலும் கதை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி. படத்தின் முக்கியமான நபர் ஒளிப்பதிவாளர் சுந்தர். நான் எதிர்பார்த்ததை போலவே சிறப்பான தரமான பணியைக் கொடுத்துள்ளார். அவருக்கு இணையான உழைப்பை கலை இயக்குநர் கொடுத்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றால் பலருக்கும் உந்துதலாக இருக்கும்.
25 ஹீரோயின்களை பார்த்த பிறகு ரக்ஷனாவை தேர்ந்தெடுத்தேன். மிகவும் தைரியமானவர். திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பரணி அண்ணனுடன் முதல் படத்திலேயே வேலை செய்ய வேண்டியது. ஐந்தாவது படத்தில்தான் அது கைகூடியுள்ளது. அவர் பேசும் வசனம் படத்தில் முக்கியமானது. சிராக் ஜானி சார், தினேஷ் லம்பா சார் இரண்டு பேரும் மும்பையை சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் நடிப்பும் நிச்சயம் பேசப்படும். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரியாது என்றாலும் புரிந்து கொண்டு நடித்துள்ளனர். நட்டி அண்ணனுக்கு சிறப்பான உடல்மொழி உள்ளது. அவருடைய கரியரில் இந்த கதாபாத்திரம் நிச்சயம் மணிமகுடமாக இருக்கும். வேல ராமமூர்த்தி சாரின் நடிப்பும் குரலும் சிங்கம் கர்ஜிப்பதுபோல இருக்கும். தென்மாவட்டத்தை சார்ந்த நல்ல கதை அவரிடம் இருந்து எனக்கு வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
எழுத்தாளர் பத்மாவை பெண் சாண்டில்யன் என சொல்வார்கள். நிறைய புது தமிழ் வார்த்தைகளை இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அருமையான பல கதைகள் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு. அரி
சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பான விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞரும் திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள ‘நிலத்தவள்’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே.ச. வெளியிட, கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த. குமார், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டோம்னிக், அலுவலக சங்கத் தலைவர் திரு இளங்கோ சேவியர் ஜோதி, முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் ஜான் கென்னடி, மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பொங்கல் விழாவின் பாரம்பரிய அம்சங்களுடன் இணைந்த இந்த நிகழ்வு, இலக்கியமும் கல்வியும் ஒருங்கிணைந்த ஒரு சிறப்பான நாளாக அமைந்தது. சீனு ராமசாமியின் கவிதை நூல் ‘நிலத்தவள்’ மாணவர்களிடமும் இலக்கிய ஆர்வலர்களிடமும் புதிய சிந்தனையைத் தூண்டும் படைப்பாக இருக்கும் என விழாவில் கருத்துகள் பகிரப்பட்டன.
கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’ பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,
எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன், என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியைப் பார்த்த போது அவர் முகம் எம் ஜி ஆர் போட்டோவுடன் அப்படியே மேட்ச் ஆனது. அப்போதே இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என நலனிடம் சொன்னேன். கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.
நடிகர் GM சுந்தர் பேசியதாவது..,
எம் ஜி ஆர் பற்றி பேச எனக்குத் தகுதியில்லை, பரம ரசிகர் சத்தியராஜ் சார் முன் எம் ஜி ஆர் பற்றி எதாவது தகவல் தப்பாகக் கூறி விடுவோம் என பயமாக உள்ளது. அவர் அவ்வளவு தீவிரமான ரசிகர். கார்த்திக்கின் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஐகானிக் இமேஜை மீண்டும் திரையில் கொண்டு வருவது மிக கடினமான விசயம். எம் ஜி ஆராக நடிக்க கார்த்தி நிறைய ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார். அவரது பாடி லாங்குவேஜு எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். முழு அர்ப்பணிப்புடன் உண்மையாக உழைத்தால் தான் அந்த மாதிரி விஷயங்கள்லாம் வெளிவரும். கார்த்தி மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். கிருத்தி ஷெட்டி வெல்கம் டு தமிழ் சினிமா. நான் ஆனந்தராஜனோட கிளாஸ்மேட் ஃபிலிம் இனஸ்டிட்யூட்டில். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இயக்குநர் நலன் அவரது காதலும் கடந்து போகும் படம் போலவே, இந்த படத்திலேயே எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுத்திருக்கார். அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் வெளிவருதற்குத் தயாரிப்பாளர் ஞானவேல் சார் மற்ற எல்லா நடிகர்களும் ஆர்டிஸ்ட் எல்லாருமே சேர்ந்து எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். மிகக்கஷ்டபட்டு இந்த படத்தைப் பொங்கலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நிச்சயமாகச் சத்தியமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.
நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது..,
முதலில் எனக்கு மாலினி என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக, எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஒரு கதையை எழுதும்போது, ஒரு கேரக்டர்க்கும் ஒரு ஆர்க் இருக்கும். ஆனால் ஒரு நடிகையா, எனக்கும் ஒரு ஆர்க் வேண்டும், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவேன். அதனால் தான் இப்படத்தில் இந்த மாதிரி ஒரு ரிஸ்க் எடுத்தேன். அந்த ரிஸ்க் எடுக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால தான் மாலினி இவ்வளவு அழுத்தமான ஒரு கேர்கடராக மாறியிருக்கிறாள். இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரின் முயற்சியையும் உழைப்பையும் முதலில் பாராட்ட வேண்டும். இந்த படம் பெரிய சிக்கல்களைச் சந்தித்தது. எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி ஒரு பெரிய மேடையில், இந்த அளவுக்கு இந்த படம் நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் அவர்கள்தான். படக்குழுவிற்கு நன்றி. எனக்கு வரும் படங்கள் ஏதாவது ஒரு காரணமாகத் தான் வரும். இந்தப் படம் ஒரு ஸ்டார் படம். தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய திருவிழா வெளியீடாக இருக்கும், அதனால் இதுபோன்ற ஒரு படத்தைத் தேர்வு செய்வது ரொம்ப சிக்கலான விஷயம். ஆனா எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் மிக நன்றாக வந்திருக்கிறது. நீங்க எல்லாரும் இந்த படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,
இந்த படம் ஒரு நல்ல படம். நீங்களும் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். நாளைக்கு இந்த படம் வெளியாகப் போகிறது. அதுவும் ஒரு நல்ல நாளில், ஒரு நல்ல நேரத்தில் வெளியாகிறது. நான் தயாரிப்பாளர் ஞானவேல் சார்கிட்ட கூட “சார், முன்னாடி சொன்ன தேதியை விட, நாளைக்கு ரிலீஸ் ஆகுற தேதியே ரொம்ப நல்ல தேதிங்க” என்று சொன்னேன். நாளை போகி பண்டிகை. பழசுகளை எல்லாம் எரிச்சிட்டு, புதுசா ஆரம்பிக்கிறதுதான் நம்ம கலாச்சாரம். அதனால் நாளைக்கு நம்ம மனசில் இருக்கிற எல்லா பழைய விஷயங்களையும் விட்டுவிட்டு, ஒரு புதுசா ஆரம்பிக்கிற படம்தான் ‘வா வாத்தியார்’. இன்று காலை நானும், கார்த்தி சாரும், சத்யராஜ் சாரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சமாதிக்கு போயிருந்தோம். அங்க போனப்போ ஒரு சந்தோஷம், ஒரு மன நிறைவு இருந்தது. அவர் சமாதியை நேரில் போய் பார்த்து, எங்களோட கண்ணீர் அஞ்சலியை செலுத்திட்டு, இந்த படத்தை உங்களுக்குக் கொண்டு வர்றதுல எனக்கு ஒரு பெருமை இருக்கிறது. உங்களால முடிந்தவரை இந்த படத்தை அவருக்கான மரியாதையா நினைச்சு, எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு தாருங்கள். இந்த படம் நன்றாக வெற்றி பெறும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை இருகிறது .இந்த படத்தில் நடித்த கார்த்தி சார், சத்யராஜ் சார் கிட்ட இருந்து தான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார். அவர் ஒரு சீனியர், ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தோட இயக்குநர் நலன் சார் – ரொம்ப பெரிய, அனுபவம் வாய்ந்த இயக்குநர். அவர் கதையை நேரில வந்து சொன்னபோதே “சார், நீங்க சொல்லவே வேண்டாம்… நான் செய்கிறேன்”என்று உடனே சொன்னேன். இந்த படம் மிக நன்றாக இருக்கும். புரட்சித் தலைவரை மீண்டும் திரையில் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டால், இந்த படத்தைக் கண்டிப்பா பாருங்க. அனைவருக்கும் நன்றி.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது..,
எம் ஜி ஆர் பற்றிப் பேசினால் அது தனியா ஒரு கதையாக போய் வ்டும். இந்த படத்தோட தயாரிப்பாளர் தம்பி ஞானவேல் ராஜா பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டும். அவருடைய அப்பா ஒரு தீவிரமான எம் ஜி ஆர் ரசிகர். அவர் 110 தடவை நாட்டோடி மன்னன் படம் பார்த்ததாக சொன்னார். அவ்வளவு தீவிர ரசிகர். அப்படிபட்ட தயாரிப்பாளருக்கு அவர் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. கார்த்திக்கு முதல் படமே மிக சவாலான படம். வெளிநாட்டில் படிச்சிட்டு வந்து, அந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதாபாத்திரம் பண்ணுறது எளிமையானது இல்லை. ஆனால் அதைவிட கஷ்டமான விஷயம் இந்த வாத்தியார் கதாபாத்திரம். ஏனென்றால் இது ஒரு தலைவரின் பெயரோட சம்பந்தப்பட்ட கதாபாத்திரம். ஆனால் அதைத்தாண்டி இந்தப்படத்தில் எம் ஜி ஆர் பாடி லாங்குவேஜை கொண்டு வந்து அசத்திவிட்டார். கிருத்தி ஷெட்டி, ஷில்பா, தம்பி ஆனந்த்ராஜ், தம்பி சுந்தர் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஐம்பது வருடம் முன் கோவையிலிருந்து வந்த போது, பல் பெரிதாக இருக்கிறது என சிவக்குமார் அண்ணன் சிபாரிசில் டாக்டரிடம் சென்று பல்லைக் குறைத்தேன். ஆனால் நலன் இப்படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் வித்தியாசமாக வேண்டுமென பல் வைக்க வைத்து விட்டார். இப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். எம் ஜி ஆரின் பொங்கல் படம் படம் போல இந்தப் பொங்கலுக்கு வா வாத்தியார் வருகிறது அனைவரும் கொண்டாடுங்கள் நன்றி.
நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,
ஒரு பேட்டியில் நலன் சார் ஒரே விஷயத்தை *“இது ஒரு பெஸ்டிவல் படம். பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து பார்க்கிற படம்”*என்று சொன்னார். இப்போது அது அப்படியே நடந்துள்ளது. குடும்பமா, நண்பர்களோடு, எல்லாரும் சேர்ந்து படம் பார்க்கிற மாதிரி இந்த படம் மாறியிருக்கிறது. அதுக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படம் தாமதமானது பற்றி நிறைய பேர் என்கிட்ட கேட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கும் கொஞ்சம் வருத்தமா தான் இருந்தது. ஆனால் நான் ஒன்று நம்புகிறேன் – நல்ல விஷயம் நடக்கவேண்டுமானால், அதுக்கு ஒரு சரியான நேரம் இருக்கும். கடவுள் நம்மளை காத்திருக்க வைக்குறார்னா,அதுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கும்னு நம்புறேன். அதனால இப்போ எல்லாம் சரியா நடந்ததுக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன். இந்தப்படத்தில் என்னைச் சேர்த்ததுக்காக நலன் சார், மற்றும் ஞானவேல் சார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நலன் சார் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமா உழைத்திருக்கார்னு நான் நேரில பார்த்திருக்கேன். அவர் வெற்றியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். கார்த்தி சாரின் தீவிர ரசிகை நான், ஆனால் அவரை நேரில சந்திச்ச பிறகு, நான் இன்னும் பெரிய ரசிகையா மாறிவிட்டேன். ‘வா வாத்தியார்’ கதாபாத்திரம் – பெரியதாக இருந்தாலும், அதை அவரைவிட சிறப்பாக யாராலும் செய்ய முடியாது. கார்த்தி மனதளவில் மிகச்சிறந்த மனிதர். அது அவரது கதாப்பாத்திரங்களிலும் பிரதிபலிக்கிறது, வா வாத்தியார் ஒரு நல்ல மனசு கொண்ட கேரக்டர் அது அவருக்குள்ள இயல்பாகவே இருக்கிறது. நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,
சில படங்கள் சரியாகப் போகவில்லை, அதனால் நெகடிவிட்டி, நிறையக் செய்தி பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். ஆனால் இண்டஸ்ட்றியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான். நான் நன்றாகத் தான் இருக்கிறேன். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள். ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணாவுக்கு நன்றி. KVN அண்ணா, அவர்களின் ஜனநாயகன் படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது, விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு அவர் எனக்கு பெரிய துணையாக இருந்தார். அவருக்கு என் நன்றிகள். பென் மூவிஸ் ஜெயந்திலால் காடா சாருக்கு நன்றி. சக்தி பிலிம்ஸ் சக்திவேலனுக்கு நன்றி. பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி. TTT படம் வருகிறது கண்ணன் ரவி சார் இப்படத்திற்கும் பெரிய உதவிகள் செய்தார் அவர் படமும் பெரிய வெற்றி பெறட்டும். இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான், தீயாகப் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் கார்த்தி பேசியதாவது..,
கடந்த வருடம், பெரிய செலிப்ரேஷனோட இந்த படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அது தள்ளிப்போய்விட்டது. எனது முதல் படமும் இது போல தள்ளிப்போனது. அடுத்த படம் தள்ளிப்போனது. அதனால தாமதம் என்கிறது எங்களுக்கு புதுசு இல்லை – பழகிவிட்டது. இந்த சூழ்நிலையில், நான் ஞானவேல்ராஜா சார்கிட்ட எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். “நீங்கள் நான் என்ன நினைக்கிறேனென்று நினைக்கவே வேண்டாம். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். நாம் போராட்டத்தில் உடலைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
சின்ன வயதில் என் அப்பா ஒவ்வொரு அரிசியிலும் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அது போல் சினிமாவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். அவர் சொன்னது அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது.
ஞானவேல்ராஜா சார் சொன்ன மாதிரியே,நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். முக்கியமாக சூர்யா அண்ணா. அவரோட சப்போர்ட் இல்லாமல் இந்த படம் இப்படி ரிலீஸ் ஆகி இருக்க முடியாது. அதே மாதிரி பைனான்ஸியர்ஸ், டிஸ்ட் ரிபியூட்டர்ஸ், எக்ஸிபிட்டர்ஸ், டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. 48 மணி நேரம், 50 மணி நேரம், தூங்காம வேலை செய்து, இந்த படத்தை நம்ம கைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். எல்லா தொழிலாளர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நலன் சார் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயக்குநர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஆர்டிஸ்ட்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த இயக்குநர். அவர் இந்த கான்செப்ட் கொண்டு வந்தப்போ, எனக்கு ரொம்ப பயமா இருந்தது. இந்த கேரக்டருக்கு ஒரு தனி டிரெய்னிங் வேண்டும். ஆனால் நான் டிரெய்னிங் எடுத்து வரவில்லை. On-set-ல கற்றுக்கொண்டேன், மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.ஒவ்வொரு நாளும், எம் ஜி ஆர் சாரோட படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து, அவரோட close-ups பார்த்து, “என்னோட முகத்துல அதை எப்படி கொண்டு வரலாம்?”ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். எனக்கு என்னோட முகத்தையே சரியா பார்க்க முடியாத பயம் இருந்தபோது, அவரோட முகத்தை screen-ல கொண்டு வரணும்னு நினைத்ததே ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் நலன் மாதிரி ஒரு இயக்குநர், ஜார்ஜ் மாதிரி ஒரு கேமராமேன், அந்த முழு குழுவின் சப்போர்ட் இருந்ததால “இத பண்ண முடியும்”ன்னு ஒரு நம்பிக்கை வந்தது. அது படத்தில் சாத்தியமாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை இந்த படத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது.
எம் ஜி ஆர் திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக செய்தது ரொம்ப பெரிய விஷயம். காலை அவர் சமாதிக்கு போய் கும்பிட்டு வந்தோம். அங்க நின்னப்போ உணர்வு வேற மாதிரி இருந்தது. நாற்பது வருஷமா அவர் இல்லை. ஆனா இன்னும் அவரை நினைக்கிறோம். இன்னும் அவரைப் பற்றி படம் எடுக்க ஆசைப்படுகிறோம். அங்கிருந்து திரும்பி வரும்போது, இந்த எல்லா விஷயங்களும் சரியாக அமைந்ததுக்கு அவரோட ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகளோடு, குடும்பமா, எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்ககூடிய ஒரு ஜாலியான படம் இது. இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுற, ரிலீஸ் ஆகப்போகுற எல்லா படங்களும் மக்களைச் சந்தோஷப்படுத்தி பெரிய வெற்றி பெறவேண்டுமென்று மனசார வாழ்த்துகிறேன். நன்றி.
பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தியுடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையில், டி.ஆர்.கே. கிரண் கலை இயக்கத்தில், வெற்றி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த
இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது
கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநரும் எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூலின் வெளியீடு மற்றும் அறிமுக விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் பதிப்பாளரான நக்கீரன் கோபால், மக்களவை உறுப்பினரும் இலக்கியவாதியுமான தமிழச்சி தங்கபாண்டியன், ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வாழ்த்தினர்.
ஜூனியர் விகடன் வார இதழில் 50 வாரங்களுக்கு மேலாக தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தக் கதை, தற்போது ‘சங்காரம்’ என்ற நாவலாக உருவெடுத்துள்ளது. வன்முறை, அதிகார அரசியல், காதல், பேரன்பு, மனித அகப் போராட்டங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த நாவல் குறித்து விழாவில் பேசியவர்கள், சமகால சமூக யதார்த்தங்களை ஆழமாக பேசும் படைப்பாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இலக்கியத்தையும் சினிமா மொழியையும் இணைக்கும் தன்மை கொண்ட ‘சங்காரம்’, வாசகர்களிடையே மட்டுமல்லாமல் திரைப்பட உலகிலும் கவனம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.
கவிஞர் வெயில் பேசுகையில்,
'' ஜூனியர் விகடன் இதழில் 'ஒரு கொலை 6 ஆயிரம் ரூபாய்' என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை படித்த சரவணன் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் ... அவருடைய மனதில் எப்போதும் உறங்காத ஒரு பத்திரிக்கையாளராக என்னை அழைத்து பேசினார். அந்த சந்திப்பில் நான் எழுதிய கட்டுரையை கடந்தும் பல விசயங்களை குறிப்பிட்டார். அப்போது அவர் ஒரு சம்பவத்தை சொன்னார். அந்த சம்பவத்தை... அவர் சொன்ன விதத்தை... பார்த்துவிட்டு, ஜுவிக்கு ஒரு தொடர் எழுதுங்கள் என்று அன்பாக கட்டளையிட்டேன். அப்போது அவர், 'நான் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லையே... எப்படி தொடரை எழுத முடியும்' என்றார். ஆனால் எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் அடிப்படையில் அவர் ஒரு கதை சொல்லி. அவருடைய கட்டுரையை நான் வாசித்திருக்கிறேன்.
பொதுவாக ஒரு பத்திரிக்கையாளருடைய கட்டுரையில் தகவல்களும், தரவுகளும் கொட்டிக் கிடக்கும். ஆனால் சரவணனுடைய கட்டுரையில் உணர்ச்சியும் மேலோங்கி இருக்கும். களத்திற்கு சென்று மக்களை சந்தித்து தகவல் திரட்டி அதனுடைய சூடு குறையும் முன்பாக வெப்பத்துடன் கட்டுரையை எழுதுவார். அவருடைய எழுத்தில் ஒரு எழுத்தாளரின் இலக்கியத்துவம் மிகுந்த நடை இருக்கிறது. அதற்குத் தேவையான உணர்வும் இருப்பதால் அவரை நான் எழுதுங்கள் என்று சொன்னேன்.
ஒரு கதையை எழுதுவதற்கு இலக்கிய பயிற்சி இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கதையை சுவைபட சொல்ல இயலாது.
சரவணனிடம் பெண்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கிறது. இதன் காரணமாக கூட அவருடைய எழுத்து மேம்பட்டிருக்கலாம்.
இந்த நூலுக்கு பெயர் சூட்டியது தனிக்கதை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பை சொல்ல.. வரை கலை ஓவியரான பாண்டியன் என்பவர் சம்ஹாரம் என சொல்ல... அதனை தமிழில் 'சங்காரம்' என பாரதி தாசன் குறிப்பிட்டதை.. இதன் தலைப்பாக தேர்வு செய்தோம். சங்காரம் என்ற ஒரு சொல் ... அவருடைய எழுத்தில் மிகப்பெரிய வீச்சை உருவாக்கியது.
ஒவ்வொரு தொடருக்கான கட்டுரையை அவர் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் எழுதி கொடுத்து விடுவார், நிறைய அனுபவங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு இருப்பார்களால்தான் இப்படி சரளமாக குறுகிய நேரத்தில் தரமாக எழுத இயலும்.
இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் விசயத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால்.. குற்றம் தான் அனைத்திற்கும் அடிப்படை. குற்றத்தை பற்றிய உளவியல் ரீதியிலான கவித்துவமான இலக்கியத் தரமான நூலாக நான் எப்போதும் பைபிளை தான் பார்ப்பேன்.
அதில் 'மனிதன் எப்போது தன்னை மறைக்கத்தொடங்கினானோ... அப்போதே குற்றம் பிறக்கிறது' என்றிருக்கும்.
பாலியல் குற்றமும், அதிகாரத்தை கைப்பற்றும் குணமும் தான் மனிதர்களின் பிரதான இரண்டு குற்றங்கள் என நான் பார்க்கிறேன். இதுதான் இந்த நாவல் முழுவதும் பரவி கிடக்கிறது.
டெல்டா மண்டலத்தில் செயல்படும் இரண்டு தாதாக்கள் ....அந்த இரண்டு தாதாக்களுடைய இரண்டு காதல்கள்--- அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் --- விசுவாசிகள்... உறவினர்கள்... இந்த இரண்டு தாதாக்களையும் பயன்படுத்திக் கொள்கிற ஒரு அரசியல்வாதி.... இந்த இரண்டு தாதாக்களையும் கொன்று விட வேண்டும் என நினைத்து செயல்படும் ஒரு காவல்துறை அதிகாரி... இதற்குள் நிகழும் சம்பவங்கள் தான் இந்த நாவலின் கதை.
இரண்டு தாதாக்களின் வன்முறை உலகத்தை எழுதியிருந்தாலும்.. இதில் மனித உணர்வுகளுக்கும் , அவனுடைய அக போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நிறைய உணர்ச்சிகளை பற்றி பேசி இருக்கிறார். இதில் சமூகத்தை உலுக்கி கொண்டிருக்கும் சாதிய பிரச்சினையை பற்றியும் பேசி இருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுடைய எழுச்சி என்பது எவ்வளவு நுட்பமானதாக இருக்க வேண்டும் என்பதையும் விவரித்திருக்கிறார். இது விவாதிக்கப்பட வேண்டிய விசயமும் கூட.
வன்முறை அதிகம் பேசப்படும் இந்த நாவலின் காமமும் , ரொமான்ஸும் பேசப்பட்டு இருக்கும். காமம், வன்மம் எனும் இரு பிரிவுகளிலும் சொல்லப்பட்டிருக்கும் கதை இது.
ஆண்- பெண் என இரு பாலின அரசியலை சரியாக சம நிகராக புரிந்து கொண்டிருக்கும் ஒருவரால் தான் காமத்தை கண்ணியமாக எழுத இயலும். அந்த வகையில் இரா. சரவணன் மாஸ்டர் என்று சொல்லலாம்.
இந்த நாவலில் தன் பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றியும் விவரித்து இருக்கிறார். இந்த சங்காரம் நாவல் உலகத்தில் உள்ள உறவுகளைப் பற்றி பேசக்கூடிய நாவலாக இருக்கிறது.
இந்த புத்தகத்தை வாசித்தவர்களுக்கு வாசித்த பின் மரிக்கொழுந்து வாசம் தான் வீசும். அந்த அளவிற்கு இந்த நாவலில் மரிக்கொழுந்து எனும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
அத்துடன் இந்த கதாபாத்திரத்தில் சக மனிதர்கள் மீது ஒவ்வொருவரும் காரணமற்ற அன்பை செலுத்துவார்கள் என்ற பேருண்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
குற்றம் என்பது நமக்கு நாமே வகுத்துக் கொண்ட எல்லையை மீறுவது. இதனையே அதிகாரத்தில் இருப்பவர்கள் மீறும் போது எமக்குள் எழும் வெடிப்புதான் சங்காரம். இந்த சங்காரம் தொடரும். இது முடிவுறாத மானுட கதையாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்றார்.
திரு. கலைச்செல்வன் பேசுகையில்,
'' பேசுவது எப்படி ஒரு கலையோ அதேபோல் பேசாமல் இருப்பதும் ஒரு கலை. அந்தப் பட்டியலில் உள்ள நான் சரவணன் கேட்டுக் கொண்டதற்காக இங்கு அவரை வாழ்த்த வருகை தந்துள்ளேன்.
சரவணன்- இந்த மனிதர்களின் இருளடைந்த பகுதிக்குள் சரளமாக உலா வருகிற ஒரு நபர். அவருடைய திரைப்படங்களில் சமூகப் பிரச்சனையை விவசாயிகளின் பிரச்சனையை குடும்ப உறவுகளின் சென்டிமென்ட் சார்ந்த பிரச்சனையை பேசி இருக்கிறார். ஆனால் அவர் இப்படி ஒரு எழுத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவருக்குள் இருக்கும் எழுத்தாளருக்கு என் வாழ்த்துக்கள்'' என்றார்
திரு. முருகன் பேசுகையில்,
'' சரவணன் கட்டுரை எழுதும் போதே அது ஒரு இலக்கியமாக இருக்கும். அதனால் அவர் இப்படி ஒரு நாவல் எழுதி இருப்பது வியப்பல்ல. ஒரு தொடரை நூறு அத்தியாயங்களுக்கு மேல் எழுதி ஏராளமான வாசகர்களை படிக்க வைப்பது என்பது எளிதான விசயம் அல்ல. ஒரு பத்திரிக்கையாளராக இருந்து கதை சொல்லும் போது அது சுவைபட இருக்கும்.
சரவணன் இந்த சிறிய வயதிற்குள் ஏராளமான மனிதர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை பொறுமையுடன் கேட்டிருக்கிறார். அதனால்தான் இந்த கதை இவ்வளவு இன்ட்ரஸ்ட் ஆக வந்திருக்கிறது.
இந்தக் கதையில் சூரியையும், மார்ட்டினையும் அவர் நேர் எதிராக நிறுத்துவது நன்றாக இருக்கும்.
இந்தக் கதை வன்முறை நிரந்த கதை என்பதை மேலோட்டமாக பார்த்தால் சொல்லலாம். அன்பு எப்படி எல்லா மண்ணுக்கும் பொருத்தமானதோ... அதேபோல் வன்முறையும் எல்லா மண்ணிற்கும் பொதுவானது தான்.
இந்தக் கதை சினிமாவாகவோ இணைய தொடராகவோ உருவானால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடும். இது போன்ற நூற்றுக்கணக்கான கதை சரவணன் இடத்தில் இருக்கிறது. எழுதுவதற்கு எங்களிடம் இடம் இருக்கிறது. அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்,
'' சரவணனை பத்திரிக்கையாளராக தெரியும். எழுத்தாளராக தெரியும். இயக்குநராகவும் தெரியும். அவர் எழுதிய இந்த நாவலை படிக்கும் போது தான் அவருக்குள் இவ்வளவு பெரிய வன்முறையும், காதலும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். இந்த நாவலில் ஆக்சன் சீனும் அதிகம் ரொமான்ஸ் சீனும் அதிகம். இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும் போதும் ஒரு ஆக்ஷன் படத்தை பார்ப்பது போல் இருந்தது. இந்த புத்தகத்தை படிக்கும் போது சினிமாவிற்கான நிறைய காட்சிகளை எழுதி இருக்கிறார் என்பதை பார்த்தேன். சினிமாவாக உருவாகும் போது மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது என்னுடைய நம்பிக்கை. நாவலில் இருக்கும் சூரி மற்றும் மார்ட்டின் என இரண்டு கதாபாத்திரத்தை வைத்து சினிமாவை உருவாக்கலாம். இதை திரைப்படமாக எடுத்தால் எங்களுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என்பதை இந்த தருணத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
திருமதி சத்யா கரிகாலன் பேசுகையில்,
''புத்தகங்கள் நமக்கு நிரந்தரமான தோழர்கள் என புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும். மனித சமுதாயத்திற்கு நிரந்தரமான விடுதலையை புத்தகம் மூலம் அடைய முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்த வகையில் விடுதலை சிந்தனை கொண்ட எழுத்தாளரும், இயக்குநரும் , சிறந்த நண்பருமான சரவணனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரவணிடமிருந்து இது போன்ற படைப்புகள் வருவது எனக்கு மகிழ்ச்சியேத் தவிர ஆச்சரியம் இல்லை. மனிதர்களை காதலிக்க கூடிய ஒரு கலைஞனுக்கு அதே மனிதர்கள் சில நேரங்களில் பொருளாதாரத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் சில சல்லித்தனமான செயல்களை செய்யும் பொழுது அதை நுட்பமாக உணர்ந்த ஒரு படைப்பாளியின் கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த புத்தகம்.
இவர் மனிதர்களிடத்தில் மட்டும் பற்றும் பாசமும் அன்பும் கொண்டவர் இல்லை. இயற்கை மீதும் பேரன்பும் காதலும் கொண்டவர் என்பது இந்த கதையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும்.
'எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு பூ பூக்கத் தான் செய்யும்' என பிரபஞ்சன் குறிப்பிட்டதை போல்... ' தலையை காவு வாங்க ஒரு கூட்டம் காத்திருக்கும் நிலையில் ..ஒருவன் காதலித்துக்கொண்டிருக்கிறான் என்பதே சமகால கவித்துவமாக தான் நான் பார்க்கிறேன்.
அத்துடன் இந்த நாவலில் காமத்தில் புரிதலின் அவசியத்தை குறித்து நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லி இருக்கிறார்.
இந்தக் கதை அதிகார வேட்கையின் உச்சகட்டத்தை விவரிக்கும் வகையில் தொடங்கினாலும்.. படிப்படியாக பெண் முடிவெடுக்கும் திறனை நோக்கி நகர்ந்து வருவதால் ஒரு பெண்ணாக இதை பார்க்கும் போது சரவணன் மீதான மரியாதை இன்னும் அதிகமாகிறது'' என்றார்.
நக்கீரன் கோபால் பேசுகையில்,
'' இந்த விழாவை தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கத்தில் நடந்திருந்தால்... இன்னும் சில ஆயிரம் பேர் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பார்கள்.
இந்த தொடரைப் பற்றி என்னுடன் பணியாற்றிய லே அவுட் ஆர்டிஸ்ட்டான பாண்டியன்.. 'கதை முழுவதும் ரத்தம் தான்' என சொல்வார். டெல்டா என்ற உடன் நான் சரவணனிடம் மணல்மேடு சங்கர் என்பவரை பற்றிய விசயங்கள் இடம் பிடித்திருக்கிறதா..? என கேட்டேன். அவர் ஆமாம் என தலையாட்டினார்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் முருகனுடைய வாழ்வில் நடைபெற்ற சம்பவமும் ஒரு கதையாக எழுதலாம்.'' என்றார்.
நடிகர் சூரி பேசுகையில்,
'' நேற்று முதல் நான் பதட்டத்தின் உச்சத்தில் தான் இருக்கிறேன். சரவணன் போன் செய்து நூல் வெளியீட்டு விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என சொன்னார். எப்போது? எனக் கேட்டேன். 'நாளை' என்றார். யார் யாரெல்லாம் வருகிறார்கள்? என கேட்டேன். இங்கு மேடையில் வீற்றிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வருகிறார்கள் என சொன்னார். . நான் சிறிது நேரம் மௌனம் காத்து விட்டு என்னை எதற்காக அழைக்கிறீர்கள்? எனக் கேட்டேன். நீங்கள் வந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்றார். புத்தகத்தை அனுப்பி இருக்கிறேன் படித்துவிட்டு விழாவிற்கு வாருங்கள் என சொன்னார். அப்போது அவரிடம் புத்தகத்தை படிக்க வா? அல்லது விழாவிற்கு வரவா? இரண்டில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என்று கேட்டேன். விழாவிற்கு வாருங்கள் என சொன்னார்.
விழாவிற்காக கிளம்பும்போது என் மனைவி இரண்டு பக்கத்தைையாவது படித்துவிட்டு செல்லுங்கள் என சொன்னார். ஜோசியக்காரன் போல் புத்தகத்தில் ஒரு பக்கத்தை திடீரென்று எடுத்தேன். அது 43 வது பகுதி. மார்ட்டின்- காயத்ரி பற்றி எழுதி இருந்ததை உரக்க வாசித்துக் கொண்டிருந்தேன். இருவருக்கும் இடையேயான அளவற்ற காதலை.. கட்டுக்கடதங்காத காதலை.. அடாவடித்தனமான அந்த அன்பை ஒளிந்து இருந்து ஜன்னல் வழியாக பார்ப்பது போல் ஆகிவிட்டது. அவரது எழுத்து நடையை வாசிக்கும் போது உருவம் தெரிந்தது. அதுதான் அவருடைய சிறப்பு.
அண்ணன் சமுத்திரக்கனி படிப்பதற்காக இரண்டு புத்தகங்களை கொடுத்திருக்கிறார். அவரை சந்திப்பதை இப்போது தவிர்த்து வருகிறேன். ஏனென்றால் சந்திக்கும்போது புத்தகத்தை படித்து விட்டாயா? என கேட்டால்... என்ன பதில் சொல்வது?
என்னை பொருத்தவரை புத்தகத்தை நான் பொழுதுபோக்காக நினைத்து விட்டேன். நான் ஏன் அடிக்கடி புத்தகத்தை பார்த்தேன் என்றால் இந்த புத்தகத்தின் டைட்டிலை மறந்து விடக்கூடாது என்பதற்காக பார்த்தேன். சங்காரம் என்பதை சிங்காரம் என்று பேசிவிட்டால் தப்பாக்கி போய்விடும் அல்லவா..!
புத்தகம் சாதாரண விசயம் அல்ல. பல நாடுகளில் பல சரித்திரத்தை உருவாக்கி இருப்பது புத்தகங்கள் தான். எழுத்துகள் தான் சமூக சீர்திருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. சமூகத்திற்கு தேவையான பல நல்ல விசயங்களை புத்தகங்கள்தான் கொடுத்திருக்கிறது. எத்தனை ஆண்டு காலமானாலும் புத்தகங்கள் அழிவதில்லை.
இப்போதுதான் புத்தகத்தின் அருமையை தெரிந்து கொண்டிருக்கிறேன். :மாமன்' படத்திற்கு கதை எழுதினேன். தற்போது என் தந்தையை பற்றிய சுயசரிதையை எழுதி வருகிறேன்.
இரா. சரவணன் இயக்குநர் மட்டுமல்ல அவருடைய சமூகத்திற்கான பங்களிப்பு இன்றும் தொ
வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!
‘சிலந்தி’, ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள புதிய படம் ‘தீராப்பகை’. விறுவிறுப்பான த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் விஜயராகவேந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக, தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகை ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ஸ்டைலான குத்து பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பாடலை இயக்குநர் ஆதிராஜன் தானே எழுதியுள்ளார். நட்சத்திர ஹோட்டலின் பாரில் அமைந்த காட்சியில், ஒரு நடனமங்கை மதுபானங்களை தன் உடலோடு ஒப்பிட்டு பாடுவது போல அமைந்துள்ள இந்த பாடல், தைரியமான வரிகளும் கவர்ச்சியான காட்சிகளும் கலந்து உருவாகியுள்ளது.
“லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு…
பீரு பிராந்தி விஸ்கி தொட்டா பாஸ்மார்க்கு…”
என தொடரும் இந்த பாடலை, ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநிஷா சீனிவாசன், தனது கிக் ஏற்றும் குரலில் பாடியுள்ளார்.
ஸ்ரீநிஷா சீனிவாசன், சமீபத்தில் ‘அரண்மனை – 4’ படத்தில் தமன்னாவின் கவர்ச்சி நடனத்திற்கு இடம்பெற்ற “அச்சோ அச்சோ அச்சச்சோ…” பாடல் மூலம் பெரும் ஹிட்டை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் குறித்து அவர், “இந்த ‘சரக்கு சாங்’ நிச்சயமாக பெரிய அளவில் வைரலாகும்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த பாடலில், பல படங்களில் நாயகியாக நடித்துள்ள மேக்னா நாயுடு, செம கவர்ச்சி ஆட்டத்துடன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எம்.ஜி. கார்த்திக் இசையில் உருவான இந்த பாடலுக்கு, மாஸ்டர் சிவகுமார் நடன அமைப்பு செய்துள்ளார்.
படத்தின் தொழில்நுட்ப தரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பல பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜேஷ் கே. நாராயன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கேஜிஎப்’ படப்புகழ் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மற்ற பாடல் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.
விறுவிறுப்பான திருப்பங்களும், த்ரில்லர் அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகியுள்ள ‘தீராப்பகை’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களிடையே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்
தமிழ் ஓடிடி உலகில் 2026-ஆம் ஆண்டை மிகுந்த வேகத்துடனும், திகில் நிறைந்த பொழுதுபோக்குடனும் தொடங்கியுள்ளது ZEE5 தமிழ். இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திரில்லர்கள், பரபரப்பான கதைக்களங்கள் மற்றும் வலுவான நடிகர் கூட்டணியுடன், இந்த ஆண்டுக்கான தனது உள்ளடக்கத் திட்டத்தை ZEE5 தமிழ் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளது.
ஆண்டின் தொடக்கமே ZEE5 தமிழுக்கு சாதனை படைத்த ஒன்றாக அமைந்துள்ளது. தளபதி விஜய்யின் “ஜனநாயகன்” இசை வெளியீட்டு விழா, ZEE5 உள்ளடக்கங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாளிலேயே அதிகமான புதிய சந்தாதாரர்களை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடித்த “மாஸ்க்” திரைப்படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொடர் வெற்றிகள், 2026-க்கான ZEE5 தமிழின் வலுவான ஆரம்பத்தை உறுதி செய்துள்ளன.
இந்த வெற்றியின் அடுத்த கட்டமாக, ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடிப்பில் உருவான சிறப்பு பொங்கல் பிராண்ட் திரைப்படத்தை ZEE5 தமிழ் வெளியிட்டுள்ளது.
“ZEE5-இல் இந்த பொங்கல் – திகில் பொங்கல்” என்ற விளம்பர வாசகத்துடன் வெளியான இந்த படம், விழாக்கால கொண்டாட்டத்தையும், மர்மம் நிறைந்த திகில் அனுபவத்தையும் ஒன்றாக இணைக்கிறது.
பாரம்பரியமான பொங்கல் பின்னணியில் தொடங்கும் கதை, திடீரென நிகழும் ஒரு மர்ம சம்பவத்தின் மூலம் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. உறுதியான விசாரணை அதிகாரியாக ஜீவா நடித்துள்ள நிலையில், ஆண்ட்ரியா மர்மத்தின் மையக் கதாபாத்திரமாக தோன்றுகிறார். நியோ-நாயர் பாணி திகில் சூழலுடன் கூடிய இந்த பிராண்ட் திரைப்படம், ZEE5 தமிழின் 2026-க்கான பல்வகை திரில்லர் உள்ளடக்க திட்டத்தை தெளிவாக பிரதிபலிக்கிறது.
இந்த பொங்கல் சீசனில், ZEE5 தமிழ் வலுவான திரைப்பட மற்றும் சீரிஸ் வரிசையையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. அதில்,
விக்ரம் பிரபு மற்றும் L.K. அக்ஷய் குமார் நடித்த விமர்சகர்களால் பாராட்டப்பட்ட “சிறை”,
பிளாக்பஸ்டர் திகில் திரைப்படமான “டிமாண்டி காலனி – பாகம் 2”,
சமுத்திரக்கனி நடித்த “பார்த்த ஞாபகம் இல்லையோ”,
“ஒன்ஸ் அப்ஆன் எ டைம் இன் காயம்குளம் ” போன்ற ஒரிஜினல் சீரிஸ்கள்
இடம்பெறுகின்றன.
இதுகுறித்து பேசிய லாய்ட் C. சேவியர், பிஸ்னஸ் ஹெட் – தமிழ் & மலையாளம், ZEE5; சீனியர் வைஸ் பிரசிடென்ட் – மார்க்கெட்டிங், தென் இந்தியா கூறியதாவது,
“2026-ஆம் ஆண்டில் அதிக தாக்கம் கொண்ட திகில் மற்றும் திரில்லர் பொழுதுபோக்கை வழங்குவதே எங்கள் தெளிவான நோக்கம். ஜனநாயகன் இசை விழாவுக்கும் ‘மாஸ்க்’ படத்திற்கும் கிடைத்த வரவேற்பு, சக்திவாய்ந்த உள்ளடக்கத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆண்டில் தமிழ் ஓடிடி உலகில் புதிய உயரங்களை எட்ட ZEE5 தமிழ் தயாராக உள்ளது” என்றார்.
பிராண்ட் திரைப்படத்தின் முகமாக இருக்கும் நடிகர் ஜீவா கூறுகையில்,
“ZEE5 தமிழ் குழுவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். திகிலும், ரசிகர்களை ஈர்க்கும் கதைகளிலும் அவர்கள் காட்டும் கவனம் பாராட்டத்தக்கது. இந்த பொங்கல் படம், இந்த ஆண்டுக்கான ZEE5 தமிழின் அதிரடியான தொடக்கத்தை பிரதிபலிக்கிறது” என்றார்.
நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா கூறியதாவது,
“இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘மாஸ்க்’ திரைப்படத்தின் புரமோஷனை க்ரியேட்டிவாக இணைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. பார்வையாளர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்றார்.
திகில் நிறைந்த திரில்லர்கள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் தரமான ஒரிஜினல் சீரிஸ்களுடன், ZEE5 தமிழ் 2026-ஆம் ஆண்டை தமிழ் ஓடிடி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாற்ற தயாராக உள்ளது.
சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!
சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Top 10 Action / Adventure திரைப்படங்கள் தரவரிசைப் பட்டியலில், ‘Bison Kaalamaadan’ திரைப்படம் இடம்பிடித்து பெரும் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் என்பதும் தமிழ் சினிமாவுக்கு கூடுதல் பெருமையைச் சேர்த்துள்ளது.
வலுவான கதை அமைப்பு, தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தனித்துவமான திரைக்கதை ஆகிய அம்சங்களால் பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்ற ‘Bison Kaalamaadan’, உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக Letterboxd பயனர்களிடமிருந்து கிடைத்துள்ள உயர்ந்த மதிப்பீடுகள், இந்த திரைப்படத்தின் சர்வதேச தாக்கத்தையும் தரத்தையும் வெளிப்படுத்துகின்றன.
ஆக்ஷன் மற்றும் சாகச (Adventure) வகைப்பாட்டில் சர்வதேச அளவில் இப்படம் பெற்றுள்ள இந்த அங்கீகாரம், படக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது. தமிழ் சினிமா உலக அரங்கில் தொடர்ந்து தன்னுடைய முத்திரையைப் பதித்து வருவதற்கான இன்னொரு முக்கியக் கட்டமாக, ‘Bison Kaalamaadan’ இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது.
சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!
இந்திய திரைப்படத் துறையின் எதிர்காலத்தை நோக்கி தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் எவ்வாறு ஒன்றிணைய வேண்டும் என்பதைக் குறித்து ஆராயும் வகையில், ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப் மற்றும் புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) நடத்தின. இந்த நிகழ்வு கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் நடைபெற்றது.
திரைப்படத் துறையின் எதிர்கால வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் தாக்கம், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அலசி ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், திரைப்படம், தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் அறிவுசார் உரிமைகள் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு, படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் இணைத்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில், சிங்கப்பூரைச் சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலரான டாக்டர் விவேகா காளிதாசன், தொழில்நுட்பம் திரைப்படப் படைப்பாற்றலுக்கு எவ்வாறு துணை நிற்கிறது என்பது குறித்து முக்கிய உரையாற்றினார். கதை எழுதுதல், படத்தொகுப்பு, காட்சி கதைசொல்லல் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த திரைத்துறை பொருளாதார சூழலில் உரிமைகள், வருமானம் மற்றும் உலகளாவிய தாக்கங்களை எவ்வாறு மறு உருவாக்கம் செய்யலாம் என்பதைக் குறித்து வட்டமேசை கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில், பிக்ஸ் ஸ்டோன் இமேஜஸ் பிரைவேட் லிமிடெட் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் உஜ்வல் தன்குட்டே, தேஜ் என்டர்டெயின்மென்ட் இயக்குநர் நாகராஜன் வைத்தியநாதன், சக்தி குளோபல் டிவி ஓடிடி தலைவர் மற்றும் மகாராஜ குழுமத்தின் திரைப்பிரிவு தலைவர் சம்மந்த்ராஜ் கோதண்ட்ராம், பாக்கெட் எஃப்.எம் கிரியேட்டிவ் புரொடியூசர் அசாருதீன் ஜெ, ஐபிஆர்எஸ் தென் மண்டல உறவுகள் பிரிவின் உறுப்பினர் பாலமுரளி திருமுருகன், கிறிஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கிறிஸ்டி எஸ், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் செயல் இயக்குநர் ஜமுனராணி கோவிந்தராஜூ, பிராண்ட் எக்சேஞ்ச் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் மல்லேலா, பியூர் சினிமா நிறுவனர் அருண் மோ, புரொடியூசர் பஜார் சட்டப்பிரிவு தலைவர் அர்ச்சனா கவில், ஓஓ ஸ்டூடியோ இன்க் இணை நிறுவனர் சிந்துஜா ராஜமாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்தாழம் மிக்க உரைகள் மற்றும் சிந்தனைகள், கலந்து கொண்ட திரைத்துறையினரிடையே தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்துதல், படைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அறிவுசார் உரிமைகளை பாதுகாத்தல் குறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். இதற்காக ஏற்பாட்டாளர்களான ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப் மற்றும் புரொடியூசர் பஜார் நிறுவனங்களுக்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.
100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'
“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்” விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய திரைப்படங்களுக்கு, உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது.
“காந்தாரா சேப்டர் 1” தற்போது இந்திய எல்லையைக் கடந்து, உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.

- உலக செய்திகள்
- |
- சினிமா













