சற்று முன்
சினிமா செய்திகள்
Susi Ganeshan Reveals Motion Poster for 'Ghuspaithiya
Updated on : 23 July 2024
The makers of the highly anticipated film 'Ghuspaithiya' have launched a brand new motion poster featuring the names of Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi. The motion poster showcases a fleet of ships, among which a sudden appearance of a black ship wearing headphones and a police cap catches the eye. The poster gives the impression that a hidden Ghuspaithiya is lurking among the fleet, signaling a sense of caution to the audience. This unique and intriguing concept has created a buzz among fans, who are eagerly waiting to discover which of these stars is the real 'Ghuspaithiya'.
The makers shared the motion poster on their social media platforms, sparking excitement and anticipation. They captioned the post with a mysterious message, "caption to be added," further adding to the suspense.
Directed by Susi Ganeshan, 'Ghuspaithiya' is produced by M. Ramesh Reddy, Jyotika Shenoy, and Manjari Susi Ganeshan. The film's cinematography is helmed by Sethu Sriram, with music directed by Akshay Menon and Saurabh Singh. The film promises to be a thrilling experience, blending suspense, action, and stellar performances by the lead cast.
Talking about recent incident, actress Urvashi Rautela's bathroom video was leaked, and the next day, her phone call with her manager was tapped, which went viral on the internet. Later, fans started linking the video to the film and posting it on social media.
'Ghuspaithiya' is set to release in theaters on August 9th. Fans and moviegoers are eagerly waiting to unravel the mystery and witness the thrilling journey on the big screen.

சமீபத்திய செய்திகள்
சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், Raju Murugan இயக்கத்தில், Sasikumar கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மை லார்ட்’ (My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமூக அக்கறை மிக்க கருவை வலுவாக பேசுவதுடன், ரசிகர்களை ஈர்க்கும் திரைக்கதையால் பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ள இப்படம் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்படுகிறது.
இந்த வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில், இன்று படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்…
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக....
சில படங்கள்...நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது ஒரு இசையமைப்பாளராகவும் சரி ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு... இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என்பது இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜூ முருகன் சார் எனக்கு பாட்டு எழுதும் போதோ இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன்.
அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் satire ஐ ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைசிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்த படம் தொடர்ச்சியாக சசி சாருடன் வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான தருணமாய் உணர்கிறேன்.
அம்பேத் சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்...
இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த அந்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்யராஜ் சாருக்கு மை லார்ட் படம் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். சத்யராஜ் சார் மியூசிக் ல சில இன்புட்ஸ் கொடுத்தாரு. படங்களின் கலெக்ஷனை நாம் கம்பேர் பண்ணலாம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த இசை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்களுக்கு ஒரு பலமாக இருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,
படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். அதேபோல், இந்த படத்தின் இயக்குநர்—என்னோட அருமையான நண்பர் ராஜுமுருகன் சாருக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசின—அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்.எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,
இந்த படத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அது உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
‘மை லார்ட்’ படத்தை தொடங்குவதற்கு முதன்மையான காரணமாக இருந்த அம்பேத்கர் சாருக்கு என் சிறப்பு நன்றிகள். ஷான் —தொடர்ந்து ஒரு வாத்தியார் மாதிரி, பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு, என்னுடைய இசை பயணத்திலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்காக அவருக்கும் என் நன்றிகள். எடிட்டர் சத்யராஜ் சார், நீரவ் ஷா சார், இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்-புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும்—ப்ரமோஷன் வரைக்கும்—நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது.நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது
ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி. இந்த படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,
இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதலில் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் — முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர். ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
மை லார்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் எம். சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளதுடன், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார். ஆடை வடிவமைப்பை டி. ஆர். பூர்ணிமா செய்துள்ளதுடன், நடன அமைப்பை எம். ஷெரீப் மற்றும் சண்டைக் காட்சிகளை பி. சி. ஸ்டண்ட் வடிவமைத்துள்ளனர்.
வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!
எம்.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. “தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தின் மூலம் கவனம் பெற்ற Theeran Arun Kumar இந்தப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
Ettu Thotta மற்றும் Jiivi படங்களின் மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த Vettri இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார்.
ஒரு சாதாரண இளைஞனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே வெடிக்கும் மோதலே இப்படத்தின் மையக்கரு. நம் அன்றாட வாழ்க்கையில் கவனிக்கப்படாமல் கடந்து செல்லும் ஒரு விஷயம், எவ்வாறு உலகளாவிய வணிக சதியாக மாறுகிறது என்பதை புதுமையான திரைக்கதையில் இப்படம் வெளிப்படுத்துகிறது. அதிரடி காட்சிகளும், பரபரப்பான திருப்பங்களும் நிறைந்த இந்த படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.
தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், Livingston, Tulasi, Abhirami Venkatachalam (பிக்பாஸ் அபிராமி), A. Venkatesh, Jeeva Ravi, Vijay TV Ramar உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழுமையாக படமாக்கப்பட்டுள்ள “பிளாக் கோல்டு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் டிரெய்லர் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அதிரடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த வித்தியாசமான களத்துடன் உருவாகும் “பிளாக் கோல்டு” திரையரங்குகளில் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!
‘மெட்ராஸ்காரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS நிறுவனம் தனது அடுத்த முக்கிய முயற்சியாக “அண்டர் 18” (Under 18) திரைப்படத்தை அறிவித்துள்ளது. B. ஜெகதீஸ் தயாரிப்பில், Karthik Perumal Samy இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் டைட்டில் லுக், தேசிய விருது பெற்ற இயக்குநர் Vetrimaaran அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
வெற்றிமாறன் பள்ளியில் பணியாற்றிய அசோசியேட் இயக்குநராகத் திகழ்ந்த கார்த்திக் பெருமாள் சாமி, தனது புதிய படைப்பில் சமூகத்தின் அடித்தள உண்மைகளை மையமாகக் கொண்டு ஒரு வலுவான கதை சொல்லவுள்ளார். குற்ற உலகின் இருண்ட முகத்தையும், அதனால் சிதைந்துபோகும் ஒரு குடும்பத்தின் உணர்ச்சி போராட்டத்தையும் எமோஷனல் டிராமா வடிவில் “அண்டர் 18” வெளிப்படுத்தவுள்ளது.
உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், தமிழகத்தின் அறியப்படாத குற்றப் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து கதையை வடிவமைத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சமூக யதார்த்தமும், குடும்ப பாசமும் கலந்த இந்த படம், பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் Aishwarya Rajesh, Vikranth மற்றும் Kishore முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி நடிகர்கள் விரைவில் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை பகுதிகளில் நிஜமான இடங்களைத் தேர்வு செய்து, இயல்பான காட்சியமைப்புடன் படம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சமூகத்தின் மறுபக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாக “அண்டர் 18” திரைப்படம் திரையுலகில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!
KJP Talkies தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், அஸ்வின் குமார் நடிப்பில் உருவான ‘ஹாட்ஸ்பாட் 2’, கடந்த ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. Vishnu Vishal Studioz வழங்கியுள்ள இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சுவாரசியமான கதாபாத்திரங்களால் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர்கள் சுரேஷ்குமார், அனில் ரெட்டி, ராபின் ஆகியோர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினர். இந்த நிகழ்வு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘ஹாட்ஸ்பாட் 2’ தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, படம் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் Prime Video டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.
முன்னதாக வெளியான ‘ஹாட்ஸ்பாட்’ முதல் பாகம் திரையரங்குகளிலும், பின்னர் ஓடிடியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ‘ஹாட்ஸ்பாட் 2’யும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாக தனது தனித்துவமான செய்தி வெளியீட்டு பாணியால் வாசகர்களின் நம்பிக்கையைப் பெற்ற நம்பிக்கை ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையை சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த தொடக்க விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தியாவில் தனது விரிவாக்கப் பயணத்தை ஆரம்பித்துள்ள ‘நம்பிக்கை’, தமிழ் ஊடக உலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நம்பிக்கையை இது நிச்சயம் பெறும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்” என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “நம்பிக்கை விதைக்கூடிய நாளாக இன்று இருக்கிறது. நம்முடைய செயல்பாடுகள் மூலம்தான் நம்பிக்கை பெற முடியும். சோஷியல் மீடியா யுகத்தில் யதார்த்த தன்மையை இழக்கும் சூழலில் உள்ளோம். அதனால், களத்தில் இருந்து உண்மைத்தன்மையுடன் செய்திகளை எந்தளவுக்கு நேர்மையாக கொடுக்கிறோம் என்பதில்தான் நம்பிக்கையை பெற முடியும். மலேசியாவை தொடர்ந்து இங்கும் ‘நம்பிக்கை’ வந்திருக்கிறது. சீமான் அண்ணன் சொன்னதை போல உள்ளது உள்ளபடி சொல்லுங்கள். மக்கள் எங்களை வழிநடத்துவாரகள். தனது பேச்சு, கவர்ச்சி மூலம் முதலில் ஊடகங்கள் முட்டாள்களைத்தான் முதலில் கவரும். பின்பு, புத்திசாலிகளை வாயடைக்க வைத்துவிடும். அப்படி இல்லாமல், தவறு யார் செய்திருந்தாலும் அதை தைரியமாக சுட்டிக்காட்டி சொல்லுங்கள். இன்று வந்திருக்கும் அனைத்து ஆளுமைகளோடு இணைந்து நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பாக ‘நம்பிக்கை’க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்”.
நடிகர் சரத்குமார், “மலேசியாவில் தொடங்கி இன்று சென்னை நோக்கி அனைவரின் நம்பிக்கை பெற வந்திருக்கும் ’நம்பிக்கை’ குழுமத்திற்கும் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! என் பெரியப்பா ஆதித்தனார் மிகுந்த உழைப்பைக் கொடுத்து ஆரம்பித்த பத்திரிகைதான் தந்தி. அவருடன் என் அப்பாவும் சில காலம் பயணித்தார். நானும் சில காலம் பத்திரிகை உலகில் இருந்தேன். உண்மைகள் மட்டுமே பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பத்திரிகை இயங்க வேண்டும். 27 ஆண்டுகளாக ’நம்பிக்கை’ இயங்கி வருகிறது. மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர், இந்தியா, துபாய் செல்ல இருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளுக்கு சென்று பலரது நம்பிக்கையை இந்த ‘நம்பிக்கை’ பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார், “’நம்பிக்கை’ டிஜிட்டல் லான்ச் இன் இந்தியா’ நிகழ்விற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு வாக்குறுதியோடு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீடியா என்பது பிரேக்கிங் செய்திகளை தருவது மட்டுமல்லாது, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். நியாயம், துணிவு, நேர்மையான பார்வையோடு செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம். பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார்.
நடிகர் நாசர், “இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். பரபரப்பாக இருக்க வேண்டும் என்று பல செய்திகள் திரித்து கூறப்படுகிறது. குறிப்பாக, எங்கள் சினிமா துறையில் பல நல்ல படங்கள் திரித்து கூறி காணாமல் போய்விடுகிறது. இதனால் நான் செய்தி சேனல்களை பார்ப்பதையே தவிர்த்து விட்டேன். ஆனால், என்னை மீண்டும் செய்திகள் பார்க்க வைக்கிறது இந்த ‘நம்பிக்கை’. இன்று ஒரு கஷ்டம் வந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மனிதகுலம் இயங்கி வருகிறது. தெளிவான, உண்மையான செய்திகள் ‘நம்பிக்கை’யில் நமக்கு கிடைக்கும். சீமான் அவர்கள் சொன்னது போல நீங்கள் வேர் விட வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!
2017ஆம் ஆண்டு வெளியாகி நகைச்சுவை கலந்த ஃபாண்டசி கதைக்களத்தால் ரசிகர்களை கவர்ந்த மரகத நாணயம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 16, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு “கேமரா ரோலிங், ஆக்ஷன்!” என்று அறிவித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Passion Studios, Thinkal TV, RTC Media, Axess Film Factory மற்றும் Good Show ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை இணைந்து தயாரிக்கின்றனர். முதல் பாகத்தை இயக்கிய ஏஆர்கே சரவன், இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் பாகத்தை விட அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்ய திருப்பங்களுடன் இந்த இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது.
தற்போது தொடங்கியுள்ள படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், நடிகர் பட்டியல் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த ஃபாண்டசி-காமெடி தொடர்ச்சி, மீண்டும் ஒரு முறை வெற்றி நாணயமாக மாறுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு
மழைக்காடுகளில் நடைபெறும் மட் ரேஸ் போட்டியை மையமாக கொண்டு உருவான மட்டி மூலம் கவனம் பெற்ற இயக்குநர் டாக்டர் பிரகபல், தனது அடுத்த படைப்பான ‘ஜாக்கி’ மூலம் மீண்டும் பாராட்டுகளை குவித்து வருகிறார். கடந்த ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜாக்கி’, தொடர்ந்து நான்கு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
PK7 Studios தயாரித்து வழங்கியுள்ள ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடைபெறும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக வைத்து உருவான முதல் திரைப்படமாக திகழ்கிறது. மண் மணத்தையும், மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும் திரையில் உணர்த்தும் வகையில் படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
படம் குறித்து பேசிய டாக்டர் பிரகபல், “இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் சில நாட்கள் ஓடுவதற்கே சவால். ஆனால் ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக வெற்றிநடை போடுகிறது. ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் அளிக்கும் ஆதரவு எங்களுக்கு பெரிய ஊக்கமாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
‘மட்டி’ படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் இந்த படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார். மேலும் பல திரைப் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணியாற்றியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் ஒத்துழைப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மதுரையின் கலாச்சாரத்தை திரையில் உயிர்ப்பிக்கும் ‘ஜாக்கி’, உள்ளூர் விளையாட்டை தேசிய அளவில் பேசப்படும் வகையில் மாற்றியுள்ள திரைப்படமாக திகழ்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இப்படம், தரமான உள்ளூர் கதைகளுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!
திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இன்று மரியாதை நிமித்தமாக மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில், தயாரிப்பாளர்கள் முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், படக்குழுவினருடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இன்றைய தலைமுறையின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியதற்காக படக்குழுவினரை பாராட்டினார். இந்த சந்திப்பு, படத்தினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படம், ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டும் படமாக அமைந்துள்ளது.
லவ்வர் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லல் மூலம் கவனம் பெற்றுள்ளார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், K. சுரேஷ் குமார் எடிட்டிங் செய்துள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளதுடன், ப்ரியா ரவி உடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றி நடைபோடும் ‘வித் லவ்’, இன்றைய இளைஞர்களின் மனதை தொட்ட காதல் கதையாக திகழ்கிறது.
விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக பிரபலமான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’ தற்போது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணையுவது இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, நடிகர் கிஷோர், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பது இசைஞானி இளையராஜா. அவரது இசை இப்படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். தற்போது இசைப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And Kino Fist (TDKF) மூலம் தயாரிக்கிறார். கொலைகாரன் மற்றும் வதந்தி போன்ற படைப்புகளை இயக்கிய Andrew Louis இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.
ஒளிப்பதிவை Nirav Shah கவனிக்கிறார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் எடிட்டிங் மூலம் கவனம் பெற்ற சத்யராஜ் நடராஜன் இந்தப் படத்திலும் இணைந்துள்ளார். கலை இயக்குநராக வே. சண்முகராஜா பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை உரிமையை Think Music கைப்பற்றியுள்ளது. மேலும் டிஜிட்டல் உரிமைகள் தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில் ‘பாக்கெட் நாவல்’ வெளியிடப்பட உள்ளது. வித்தியாசமான கதை சொல்லல், பலம் வாய்ந்த நடிப்பு அணியும், இசைஞானியின் இசையும் இணையும் இந்த படம், தியாகராஜன் குமாரராஜாவின் திரைப்பட பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
.jpeg)
சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்
குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும் நோக்கில் ‘கலர் பென்சில்’ கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகை அனுபவ அடிப்படையிலான கல்வி ஸ்டோர் அறிமுகமாகுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனர் நாராயணன் நிகழ்வில் பேசியபோது, “கல்வி என்பது திணிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; அது ஒரு கலை. குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்கும் மனப்பாங்கை ஊக்குவிக்க வேண்டும். அதற்காகவே ‘Joy of Y’ என்ற கருத்தை உருவாக்கியுள்ளோம். இங்கு படிப்பதால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் அல்லது ஐஐடி சேர்க்கை என எதையும் நாங்கள் உறுதி செய்யவில்லை. ஆனால் குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக உருவாகும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.
தலைமை செயல் அதிகாரி மீனா சப்ரியா, “கோடைக்கால சிறப்பு வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஜப்பான் மொழி, ஆரிகாமி போன்ற பாடங்கள் டிப்ளமோ வகுப்புகளாக, குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக நடத்தப்படும். தனி கட்டணம் எதுவும் இல்லை; சுமார் ரூ.400 மதிப்புள்ள புத்தகத்தை வாங்கி அதில் பயிற்சி பெறலாம். 34-க்கும் அதிகமான புத்தகங்களும், சிறப்பு பயிற்சி மாடலும் இங்கு உள்ளது. 3300 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஸ்டோர், குழந்தைகளின் கல்விக்கான பொருட்கள் விற்பனையாகும் இந்தியாவின் முதல் முயற்சி. அடுத்த ஆண்டு இந்தியாவில் மேலும் ஐந்து கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாணி போஜன், குழந்தைகள் உற்சாகமாக ஈடுபட்டதை பாராட்டி, இந்த முயற்சி தொடர்ந்து வளர வேண்டும் என வாழ்த்தினார்.
மேலும், பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட மைக்செட் ஸ்ரீராம், “அறிவும் மொழியும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அடிப்படை. அனுபவத்தின் மூலம் கற்றல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.
கற்றலும் மகிழ்ச்சியும் ஒன்றிணையும் புதிய கல்வி அனுபவ மையமாக ‘கலர் பென்சில்’ உருவெடுத்துள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













