சற்று முன்
சினிமா செய்திகள்
திருவனந்தபுரம் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளரான நடிகை கீர்த்தி சுரேஷ் !!
Updated on : 22 August 2024
முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தை தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கென தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது.
ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாக செயல்பட்டு வருவது போல், கேரள திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக மாறி அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கிவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL
போட்டிகள் நடக்கவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் 33 போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
KCL கேரளா கிரிக்கெட் போட்டிகளுக்கான அம்பாஸிடராக, முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் செயல்படுகிறார்.
கேரளாவின் முக்கிய நகரங்களிலிருந்து மொத்தமாக 6 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளன. மொத்தமாக 33 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மொத்த போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. ஐபில் போலவே பல நட்சத்திரங்களும், பிஸினஸ் ஐகான்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு ஊக்குவிக்கவுள்ளனர். விரைவில் போட்டி அணிகள், போட்டி அட்டவணைகள், வீரர்கள் அறிமுகம், மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1ல் நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளது, முதல் போட்டி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மட்டும் ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!
‘சிறை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L.K. அக்ஷய் குமார், கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ படத்தின் பூஜை விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் L.K. அக்ஷய் குமார் உடன் ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் P.A., ஷாரீக் ஹாஸன் மற்றும் ‘டியூட்’ படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுமையான ஃபன் எண்டர்டெய்னராக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவை லியோன் பிரிட்டோ மேற்கொண்டு வருகிறார். இசையமைப்பை ஜென் மார்ட்டின், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை P.S. ஹரிஹரன் கவனிக்கின்றனர். ஆடை வடிவமைப்பாளராக பிரியா பணியாற்ற, K. அருண் மற்றும் மணிகண்டன் நிர்வாக தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க, L.K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை, எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, L.K. அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘சிறை’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ குறித்த புதிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பிரம்மாண்டமான தயாரிப்பான “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்துக்கு வலுவான கவனத்தை பெற்ற நிலையில், டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸை வழங்கியுள்ளது.
டோவினோ தாமஸின் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில், ஒரு சிறப்பு பிறந்தநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டு, பான்–இந்தியா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
டோவினோ தாமஸ் இதுவரை ரசிகர்கள் காணாத முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் சார்பில் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சாணுக்கியா சைதன்யா சரண் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு காலகட்டப் பின்னணி திரைப்படமாக உருவாகியுள்ளது.
நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ள இப்படத்தில், விஜயராகவன், சுதீர் கரமண, பாபுராஜ், வினோத் கெடமங்கலம், பிரஷாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1950–60கள் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள கதைக்களம், ரசிகர்களுக்கு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி, இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங்கை ஸ்ரீஜித் சரங், கலை வடிவமைப்பை திலீப் நாத் மேற்கொண்டுள்ளனர்.
இணை தயாரிப்பாளர்களாக மேகாஸ்யாம் மற்றும் தண்சீர் பணியாற்ற, உடை வடிவமைப்பை மஞ்சுஷா ராதாகிருஷ்ணன், மேக்கப்பை ரஷீத் அகமது கவனிக்கின்றனர். லைன் புரொட்யூசராக அலெக்ஸ் E. குரியன், நிதிக் கட்டுப்பாட்டாளராக அனில் அம்பல்லூர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக ராஜேஷ் மேனன் பணியாற்றியுள்ளனர்.
‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!
தமிழ் சினிமாவில் புதிய முகங்களுக்கு நம்பிக்கையுடன் வாய்ப்பளித்து, அவர்களின் படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறது. அந்த வரிசையில், “மாயபிம்பம்” திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், இயக்குநர் K.J. சுரேந்தரின் நேர்மையான முயற்சியையும், குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கதை சொல்லிய விதத்தையும் பாராட்டி, அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார்.
தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகர்–இயக்குநர் RJ பாலாஜி, ‘டயங்கரம்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் VJ சித்து உள்ளிட்ட பல திறமைவாய்ந்த கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இந்த நிறுவனத்துக்கே உரியது. வித்தியாசமான கதைக்களங்கள், புத்தம் புதிய ஐடியாக்கள் மற்றும் இளம் படைப்பாளிகளின் கனவுகளை நிஜமாக்கும் அணுகுமுறையே வேல்ஸ் ஃபிலிம்ஸின் அடையாளமாக மாறியுள்ளது.
“மாயபிம்பம்” படத்தை பார்த்த ஐசரி K கணேஷ்,
“ஒரு புதிய இயக்குநர், முற்றிலும் புது முகங்களை வைத்து எளிமையான ஆனால் மனதைத் தொடும் கதையை சொல்லியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு, படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகவும், இயக்குநரின் பயணத்திற்கு புதிய உற்சாகமாகவும் அமைந்துள்ளது.
ஒருபுறம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பல புதிய படைப்புகள் உருவாகிக் கொண்டிருக்க, மறுபுறம் “மாயபிம்பம்” இயக்குநர் K.J. சுரேந்தர் இயக்கும் புதிய படம் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
K.J. சுரேந்தர் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள “மாயபிம்பம்” திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2005 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெய்னர், தற்போது ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55
நடிகர் தனுஷ் நடிப்பில், ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. தற்காலிகமாக #D55 என அழைக்கப்படும் இந்த படம், ஆரம்பத்தில் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அதிகாரப்பூர்வ பூஜையும் நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முன் தயாரிப்பு பணிகளும் வேகமாக நடந்தன.
ஆனால் கதையின் அளவு, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் தயாரிப்பு தேவைகள் காரணமாக படத்தின் பட்ஜெட் கணிசமாக உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தயாரிப்பாளர் அன்புச்செழியன் இந்த திட்டத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, திட்டத்தில் தற்காலிக இடைவேளை ஏற்பட்டாலும், தற்போது புதிய தயாரிப்பு அமைப்புடன் படம் மீண்டும் பாதையில் திரும்பியுள்ளது.
புதிய ஏற்பாட்டின்படி, Wunderbar Films மற்றும் RTake Studios இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. இதன் அடையாளமாக, சமீபத்தில் மீண்டும் ஒரு முறை பூஜை நடத்தப்பட்டு, படத்தின் புதிய தொடக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி, படத்திற்கு வலுவான தயாரிப்பு மதிப்பையும், சர்வதேச தரத்திலான தொழில்நுட்ப அணுகுமுறையையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் இந்தப் படத்தில் இதுவரை பார்க்காத புதிய தோற்றம் மற்றும் ஆழமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி, சமூகப் பின்னணி மற்றும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவர் என்பதால், #D55 ஒரு பெரும் அளவிலான, உள்ளடக்கச் செறிவான படமாக உருவாகும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, நட்சத்திரப் பட்டியல் மற்றும் வெளியீட்டு காலக்கெடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

“மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனவரி 23 ஒரு சிறப்பு நாளாக மாறியுள்ளது. காரணம், ஒரே நாளில் தல அஜித் குமாரின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் மற்றும் ரிச்சர்ட் ரிஷி நடித்த ‘திரௌபதி 2’ புதிய வெளியீடு திரையரங்குகளை அலங்கரிக்கவிருக்கிறது.
2011-ல் வெளியான ‘மங்காத்தா’, அஜித் குமாரின் திரைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாக அமைந்த படம். ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையிலான கோட்டையை உடைத்து, முழுக்க முழுக்க கிரே ஷேட் கதாபாத்திரத்தில் அஜித் மிரட்டிய அந்த படம், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மைல்கல் படம், இப்போது ரீ-ரிலீஸ் மூலம் மீண்டும் பெரிய திரையில் ரசிகர்களை சந்திக்கிறது.
அதே நேரத்தில், சமூக அரசியல் பேசுபொருளால் கவனம் பெற்ற ‘திரௌபதி’ படத்தின் தொடர்ச்சியான ‘திரௌபதி 2’, ரிச்சர்ட் ரிஷியின் கேரியரில் மிக முக்கியமான படமாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்பை விட கூர்மையான அரசியல், அழுத்தமான வசனங்கள், தீவிரமான கதைக்களம் என படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே தேதி… இரண்டு விதமான அனுபவங்கள்!
மங்காத்தா - நாஸ்டால்ஜியா, ஸ்டைல், ஸ்டார் பவர்
திரௌபதி 2 - சமகால அரசியல், சர்ச்சை, கருத்து மோதல்
இதனால், சினிமா வட்டாரத்தில் “இது நேரடி போட்டியா, இல்லை இரண்டு தலைமுறை ரசிகர்களுக்கான திருவிழாவா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் மங்காத்தா ரீ-ரிலீஸ் மற்றும், புதிய சர்ச்சை பேசுபொருளுடன் வரும் திரௌபதி 2
ஜனவரி 23, தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத நாளாக மாறுமா?
சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் வெற்றிகளுக்குப் பெயர் பெற்ற சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்திருப்பது, ரசிகர்களிடையே மட்டுமல்லாது திரையுலக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய திரைப்படம், முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S. அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றனர். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆக்ஷன் ஹீரோ விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இன்றைய இளம் ரசிகர்களின் விருப்ப இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது திரைப்படம் என்பதே “புருஷன்” படத்தின் முக்கிய சிறப்பு. இதற்கு முன், “ஆம்பள” திரைப்படத்தில் சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில், அதே கூட்டணி மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார்.

சமீபத்தில் வெளியான “புருஷன்” படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி, நகைச்சுவை மற்றும் மாஸ் தருணங்கள் கலந்த சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணியை வெளிப்படுத்தி, குறுகிய நேரத்திலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். “கமர்ஷியல் கிங்” சுந்தர் சி-யின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் வகையிலான ஒரு முழுமையான எண்டர்டெயினராக “புருஷன்” உருவாகி வருகிறது.
படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், படத்தில் இணையும் மற்ற நடிகர்–நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு மாஸ் கமர்ஷியல் விருந்தாக “புருஷன்” அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, தனது நான்காவது தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தரமான கதையம்சம் மற்றும் வலுவான பொழுதுபோக்கு அம்சங்களை இணைப்பதே சாந்தி டாக்கீஸின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சியான் 63’ படத்தையும் சாந்தி டாக்கீஸ் தயாரித்து வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘புரொடக்ஷன் நம்பர் 4’ திரைப்படம் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய படத்தில், வளர்ந்து வரும் நாயகனாக தனது நகைச்சுவை கலந்த இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாரத், கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பால் பாராட்டைப் பெற்ற நடிகை சான்வி மேக்னா நடிக்கிறார். இப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்குகிறார்.
இன்று (ஜனவரி 21, 2026) காலை, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. முழுப் படப்பிடிப்பும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 45 முதல் 50 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நகைச்சுவை மற்றும் கதாபாத்திர நடிப்பில் தொடர்ந்து தனி முத்திரை பதித்து வரும் பாலசரவணன், இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியாகவும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில்,
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை கவனிக்க, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார். உடை வடிவமைப்பை கிருத்திகா சேகர் கவனித்து வருகிறார்.
வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு மற்றும் புதிய அணுகுமுறையுடன் உருவாகும் இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 4’ திரைப்படம், சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், பிரமாண்டமான வரலாற்று கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘திரௌபதி 2’. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அதன் தீவிரமான கதையம்சம் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு, தங்கள் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் விதமான முக்கியமான கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் நடித்துள்ள திரௌபதி, ஆயிஷா, கோதை என்ற கதாபாத்திரங்கள், பெண்களின் வலிமை, உணர்ச்சி, அறிவு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், இந்த அனுபவத்தை தனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். ஆழமான உணர்ச்சிகளும், தாங்கும் உறுதியும், அதே சமயம் நளினமும் கொண்ட கதாபாத்திரமாக திரௌபதி இருப்பதாகவும், அந்த உணர்வுகளை திரையில் வெளிப்படுத்துவது ஒரு பெரிய சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி, தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஆயிஷா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தேவியானி ஷர்மா, இந்த படம் தன் வாழ்க்கையில் பெருமையான தொடக்கம் எனக் கூறியுள்ளார். அறிவும், அமைதியும், மன உறுதியும் கொண்ட ஆயிஷா கதாபாத்திரத்தை இயக்குநர் மோகன் ஜி அழகாக திரையில் வடிவமைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களின் மனதை தொடும் இசையும், ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தர் அவர்களின் பிரமாண்டமான ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோதை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவி வைத்யன், உறுதியான உண்மையான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரமாக கோதை இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த வீரத்தையும் உறுதியையும் தன் நடிப்பில் முழுமையாக வெளிப்படுத்தியிருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்த ஆக்ஷன் சந்தோஷ் அவர்களுக்கும், படப்பிடிப்பில் வழிகாட்டியாக இருந்த ரிச்சர்ட் ரிஷி அவர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில், ரிச்சர்ட் ரிஷி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வலுவான பெண்கதாபாத்திரங்கள், வரலாற்று பின்னணி, பிரமாண்டமான காட்சியமைப்பு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான கதையம்சம் ஆகியவற்றின் சங்கமமாக ‘திரௌபதி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு தாக்கம் கொண்ட சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது தமிழ் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், புதிய படைப்பான “தடயம்” என்ற திரைப்படத்தின் அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தரமான, கருத்துச் செறிவுள்ள கதைகளுக்குப் பெயர் பெற்ற ZEE5 தமிழ், தொடர்ந்து வலுவான உள்ளடக்கங்களை வழங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைத்தேர்வுகளுக்கும், சமூகப் பார்வையுடன் கூடிய இயல்பான நடிப்புக்கும் பெயர் பெற்ற நடிகர் சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கியமான படைப்புடன் இணைந்துள்ளார். “தடயம்” எனும் இந்த புதிய படம், விரைவில் ZEE5-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்பை மையமாகக் கொண்டு, தீவிரமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள படைப்பாகக் கருதப்படுகிறது. சமுத்திரகனியின் கதாபாத்திரத் தேர்வுகளுக்கு ஏற்ப, இந்த திரைப்படமும் சமூக நிழல்கள், மனித மனநிலை மற்றும் நீதியின் தேடல் போன்ற அம்சங்களை ஆழமாக பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன், சமுத்திரகனி இயக்கி நடித்த “விநோதய சித்தம்” திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து ஒரே நேரத்தில் பாராட்டுகளைப் பெற்றது. வாழ்க்கை–மரணம், நேரம், மனித உறவுகள் போன்ற தத்துவார்த்தமான கருத்துகளை எளிய மொழியில், தாக்கம் கொண்ட திரைக்கதையுடன் சொல்லிய அந்த படம், ZEE5-யின் முக்கியமான தமிழ் படைப்புகளில் ஒன்றாக மாறியது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, “தடயம்” திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கதையின் முழு விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டர், காவல் துறை பின்னணியில் உருவாகும் ஒரு அழுத்தமான, விறுவிறுப்பான திரில்லராக இந்த படம் இருக்கும் என்பதைக் குறிப்பதாக உள்ளது.
புதிய கதைகள், தீவிரமான நடிப்பு, மற்றும் உணர்வுப்பூர்வமான திரில்லர் அனுபவம் – இவற்றின் சங்கமமாக “தடயம்” உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் ரசிகர்கள், ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள்… சமுத்திரகனி நடிப்பில் “தடயம்” – விரைவில் ZEE5-ல் மட்டும்!
வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து, தனது நடிப்புத் திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், காலப்போக்கில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளார்.
அந்த வரிசையில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுத் திரைப்படமான ‘திரௌபதி 2’ ரிச்சர்ட் ரிஷியின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயன் என்ற வரலாற்றுப் பாத்திரத்தில், இதுவரை ரசிகர்கள் காணாத வீரத் தோற்றத்தில் அவர் திரையில் தோன்றவுள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த அனுபவம் குறித்து ரிச்சர்ட் ரிஷி தனது மனதாரப் பகிர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி கூறியதாவது,
"திரௌபதி 2" படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்திருக்கும் அனுபவம். இயக்குநர் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ சினிமா என்பதைத் தாண்டி வரலாற்றின் மறுபிறப்பாக உள்ளது. ’திரௌபதி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றுவது, நம்பிக்கையுள்ள தளபதியுடன் மீண்டும் போர்க்களம் சென்ற அனுபவம் போல இருந்தது” என்றார்.
மேலும் பகிர்ந்து கொண்டதாவது, “இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்தது ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக்கியுள்ளது. ‘திரௌபதி 2’ வரலாற்று திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு வரலாற்றுப் பயணம். நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தலைமுறைகள் கடந்து ஒலிக்கும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியமாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து அம்சங்களுடனும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், வரலாற்றுத் திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு காவியப் பயணமாக உருவாகியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து வணிக மற்றும் உணர்ச்சி அம்சங்களுடனும் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’, தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













