சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி
Updated on : 23 September 2024

தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, நடிகர் ஜெயம் ரவி நடிக்க, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் #பிரதர். 



 



இப்பபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 21.09.2024 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது :



 



பாடலாசிரியை பார்வதி பேசும்போது..



 முக்கியமான ஆளுமைகள் இருக்கக்கூடிய இந்த இடத்தில் முதல் ஆளாக பேச கூப்பிட்டதற்கு மகிழ்ச்சி. என்னுடைய மிதக்குது என்ற பாடலை பார்த்து மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்தப் பாடலில் நானும் தோன்றி இருக்கிறேன். யாராவது கண்டுபிடித்தீர்களா என்று தெரியவில்லை. அதேபோல டீசரில் வரும் அமுதா.. அமுதா.. பாடலையும் நான் தான் எழுதினேன். ஹாரிஸ் சாருடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பை மிகப்பெரிய பேராக நினைக்கிறேன். மறைந்த எனது அப்பாவின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இதை நான் அவரிடமே கூறியிருக்கிறேன். இன்று அவர் இருந்திருந்தால் என்னை நினைத்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார்.  ஹாரிஸ் சார், ராஜேஷ் மற்றும் ஒட்டுமொத்த பல குழுவினருடன் பணியாற்றியது மிகவும் நிறைவாகவும் சௌகரியமாகவும் இருந்தது என்றார்.



 



பாடலாசிரியர்  விக்னேஷ் பேசும் போது 



 எனக்கு இந்த படம் மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்திற்காக நான் கவலை படும் போது நான் ஒன்றுமே இல்லாமல் இருந்தேன். தனிப்பட்ட முறையில் தான் ஹிட்ஸ் கொடுத்து இருந்தேன். ஆனால், சினிமாவில் இவன் ஏதாவது ஒன்று செய்வான் என்று என் மீது நம்பிக்கை வைத்து முதல் வாய்ப்பை கொடுத்த ராஜேஷ்க்கு நன்றி. என்னுடைய வாழ்க்கையை பிரதருக்கு முன் பிரதருக்கு பின் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதற்குக் காரணம் இந்த படத்தின் கடைசி நாள் அன்று ஹரிஷ் ஜெயராஜ் சார் இனிமே உங்களுக்கு எல்லாமே சரியாக நடக்கும் விக்னேஷ் என்று கூறினார். அவர் சொன்னது போலவே என்னுடைய வாழ்க்கை ஒரு யூடர்ன் போட்டது. இரண்டு படுக்கை அறையில் இருந்து நான்கு படுக்கை அறை கொண்ட வீட்டிற்கு மாறினேன். சொந்தமாக ஒரு அலுவலகம் திறந்தேன்.



 



இந்த ஆரம்ப காலகட்டத்திலேயே ஹரிஷ் ஜெயராஜ் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. யாருக்கு தான் அவருடன் பணியாற்ற விருப்பம் இருக்காது? அதேபோல ஜெயம் ரவி சாருடன் இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் எனது வீட்டில் எல்லோருக்கும் பெரிய நடிகர்கள் படத்திற்கு தான் திரையரங்கில் சென்று பார்க்கும் வழக்கம் உண்டு. முதுகு வலி காரணமாக எல்லா படத்திற்கும் நீண்ட நேரம் உட்கார்ந்து பார்க்க முடியாது என்பதால் என்னுடைய பெற்றோர்கள் திரையரங்கிற்கு அதிகம் செல்ல மாட்டார்கள். ஆனால் ஜெயம் படம் வந்தபோது சன் டிவியில் ட்ரைலர் பார்த்தார்கள். படம் நன்றாக இருக்கும் போல தெரிகிறது என்று திரையரங்கிற்கு சென்றார்கள். அன்று முதல் ஜெயம் ரவி சாரின் இந்த படத்தையும் தவறவிட்டதே இல்லை. அன்று முதல் ஜெயம் ரவி குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறினார். அதேபோல அவருடைய படத்தில் அனைத்து பாடல்களுமே வெற்றியாகும். எனக்கு பிடித்த 50 சதவீத பாடல்கள் அனைத்தும் ஜெயம் ரவி சார் படத்தின் பாடல்கள் தான். நான்கு நாட்கள் ஹாரிஸ் ஜெயராஜ் சார் ஸ்டுடியோவில் இருந்து பணி புரிந்தேன். என்னுடைய மொத்த வாழ்க்கை திரும்பத் தருணமாக அதை சொல்லலாம். இந்தப் படம் அதிகமாக திரும்பத் திரும்ப பார்க்க கூடிய படமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.



 



ஒளிப்பதிவாளர் பேசும்போது..



 இப்படம் ராஜேஷ் உடன் முதல் படம் ஜெயம் ரவி சார் உடன் இரண்டாவது படம். இப்படத்தில் மிகப்பெரிய பிரபலங்கள் உடன் பணியாற்றியதும் அவர்களை ஒளிப்பதிவு செய்வதும் ஒரு குடும்பம் மாதிரி தான் இருந்தது. இப்படத்தை பார்க்கும் போது எல்லோருக்கும் அக்காவையோ தம்பியையோ கண்டிப்பாக நினைவுபடுத்தும். இந்த படத்தில் குடும்ப பிணைப்பு இருக்கும். இந்த படத்திற்காக ஹாரிஸ் சார் மிக சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். படக்குழு அனைவருக்கும் நன்றி என்றார்.



 



கலை இயக்குனர் கிஷோர் பேசும் போது.. 



 எங்கு சென்றாலும் தயாரிப்பு நிறுவனத்தினர் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் அவர்களுக்கு நன்றி என்றார்.



 



ஆஷிஷ் பேசும் போது.. 



 இது எனது முதல் மேடை இந்த பட வாய்ப்பு கொடுத்த ராஜேஷுக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு மிக்க நன்றி. என்னுடன் பணி புரிந்த அனைத்து குழுவினர்களுக்கும் நன்றி. தீபாவளியன்று வெளியாகும் இந்த படம் குடும்பத்தினர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.



 



பிரவீன் ராஜ் பேசும்போது.. 



 ஜெயம் ரவி, ராஜேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. ஹாரிஸ் ஜெயராஜ் சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. மூத்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றினார்கள். அவர்களுக்கும் நன்றி என்றார்.



 



நடிகை சரண்யா பேசும்போது.. 



 நீண்ட நாட்களுக்கு பிறகு  விழாவிற்கு வந்திருக்கிறேன். ராஜேஷ் படம் என்றாலே அமர்க்களம் தான். ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. நாங்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷமாகவும் ஜாலியாகவும் இருந்தோம். அங்கு நாங்க நடித்த காட்சிகள் அனைத்தும் நகைச்சுவையுடன் இருந்தது. இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்ததற்காக ராஜேஷ்க்கு நன்றி. இப்படம் மிகவும் நன்றாக இருக்கும் நான் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். குடும்ப உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் படம். எல்லோருக்கும் நன்றி என்றார்.



 



நடிகர் ராவ் ரமேஷ் பேசும் போது..



 இந்த படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்த ராஜேஷுக்கு நன்றி. எப்போதுமே தமிழ் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒரு கிக்கு தான். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது புது சிந்தனைகள் கொண்டு ஜீவநதி போல ஓடிக் கொண்டிருக்கும். வணிக ரீதியான படம், சர்ச்சைக்குரிய படம், நகைச்சுவை படம் என்று தமிழ் சினிமா நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த வாய்ப்பு கொடுத்த  தயாரிப்பாளர் சுந்தர் சாருக்கு நன்றி. ஒவ்வொரு காட்சிகளிலும் சுவாரசியம் நிறைந்திருக்கும். பூமிகா, வி டிவி கணேஷ், நட்டி சார் சரண்யா மேம் எல்லோரும் இருக்கிறார்கள். வெற்றி பெற தகுதி இருக்கின்ற படம். 



 



நான் ஒளிப்பதிவாளராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் நடிகனாகி விட்டேன். இப்போது நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளேன். தெலுங்கு சினிமாவில் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளேன் என்றார்.



 



நடிகர் நட்டி பேசும்போது.. 



 பிரதர் என்பது படம் அல்ல அது உணர்வு பூர்வமான விஷயம். இந்த படம் முடிந்த போது ஏன்டா முடிந்தது என்று இருந்தது.



 



ஜெயம் ரவி,  ராஜேஷ்,  பிரியங்கா, பூமிகா ராவ் ரமேஷ் சார், விடிவி கணேஷ், வீட்டில் ஒரு அம்மா என்றால் திரையில் என்னுடைய அம்மா சரண்யா மேம் என்று இவர்கள்  அனைவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ராஜா சாருக்கு பிறகு ஹாரிஷ் ஜெயராஜ் பாடல்களை தான் மிகவும் விரும்பி கேட்பேன். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்த பாடலில் நானும் பங்காற்றியிருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி சாருக்கு மச்சானாக நடித்திருக்கிறேன். படிப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஜெயம் ரவி சாருடன் செஸ் விளையாடுவோம். தொடர்ந்து எட்டு முறை தோற்று இருக்கிறேன். படப்பிடிப்பு நடந்தது என்று போல் இல்லாமல் ஒரு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தது போலதான் இருந்தது அந்த சூழலை அமைத்துக் கொடுத்த ராஜேஷ்க்கு நன்றி என்றார்.



 



நடிகர் விடிவி கணேஷ் பேசும்போது..



 ஊட்டியில் 30 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்தது. தயாரிப்பாளர் வாரி வழங்கினார். படிப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை. நான் என் மனைவியை அழைத்துக் கொண்டு, அம்மாவை விட்டு தனியே வந்து விட்டேன். ஆனா இந்த படத்தில் நடிக்கும் போது தான் மாமா மாமி சித்தப்பா என்று அனைத்து சொந்தங்களுடனும் கூட்டு குடும்பமாக வாழ்ந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். கூட்டு குடும்பமாக இருக்கும்போது சண்டே சச்சரவுகள் இருக்கும். ஆனால், இவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதேபோல தவறு செய்தாலும் அதை நினைத்து மனம் வருந்தவோம். ஆனால் தனியாக வந்துவிட்டால் சுவரிலோ, கண்ணாடியிலோ தான் நம்மை பார்த்து  கொள்ள நேரிடும். படத்தை இரண்டரை மணி நேரம் முழுவதும் கலகலப்பாக கண்டு களிப்பீர்கள். 



 



ராகுல் ரமேஷ் தெலுங்கில் நாட்கள் கொடுக்க முடியாமல் நடித்துக் கொண்டிருக்கும் போது,  தமிழில்  எனக்கு நிறைய நடிக்க வேண்சும்  வேண்டும் என்று தமிழ் மொழியை நேசிப்பது நமக்கு பெருமையாக இருக்கிறது. நமது மொழி மீதும் நமக்கு மதிப்பு வருகிறது என்றார்.



 



இயக்குனர் மோகன்ராஜ பேசும்போது..



 எனக்கும் ரவிக்கும் முதல் நாளிலிருந்து இன்று வரை ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. ரவி ரசிகர்களில் ஒரு சிலரை சொல்லி அழைக்கும் அளவிற்கு 20 வருடங்கள் தொடர்ந்து எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் சரண்யா முதல் ராவ் ராகுல் வரை அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த விழா நாயகனான  ஹரிஷ் ஜெயராஜ்  அவர்களின் இசையை நான் மிகவும் ரசிப்பேன். பாடல்களின் பாடல் வரிகள் மட்டும் அல்ல அது இசையையுமே திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் மதிப்பை கொடுத்த முதல் இசையமைப்பாளர் என்று நான் அவரை கூறுவேன். அதேபோல அவர் இயல்பைப் பற்றியும் கூற நான் தகுதி வாய்ந்தவன். ஃபிலிம் இன்ஸ்டியூட் டிப்ளமோவிற்கு, இசையமைப்பாளராக அறிமுகமாக தருணத்தில் கூட நான் குறும்படம் எடுப்பதற்காக இசையமைத்துக் கொடுத்தவர். குறும்பட இயக்குனர் ஆவதற்கு உறுதுணையாக இருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதற்கு எப்போதும் நன்றி கடனாக இருப்பேன். ராஜேஷ்க்கு ஒரு பெரிய இடம் இருக்கிறது என்பதை ஒரு இயக்குனராக ராஜேஷ் உடைய ஃபேனாக நான் சொல்லிக் கொள்கிறேன். எம் குமரன் மாதிரியும், சம்திங் சம்திங் மாதிரியும் #பிரதர் படம் இருக்கும் என்பது நிறைவாக உள்ளது. ரவி எப்போதும் சினிமாவை நேசிப்பவன். அதனால் தான் இது மாதிரி நல்ல ரசிகர்கள்  அவனுக்கு கிடைத்திருக்கிறார்கள். ரவி நடனத்திற்கு நான் மிகப்பெரிய ஃபேன். ரவி நடனத்தைப் பார்க்கும்போது, இவன் என் தம்பி என்று சொல்ல பெருமையாக இருக்கிறது. இந்த பட குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.



 



தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் பேசும்போது.. 



 குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பெரிய பொழுதுபோக்கு படமாக இது இருக்கும். தீபாவளி அன்று வெளியாகும் இந்த படத்தை குடும்பத்துடன் திரையரங்கிற்கு  சென்று பாருங்கள். ராஜேஷ் முதலில் ஹீரோவுக்குத்தான் கதை சொன்னார். ரவி சார் அதைக் கேட்டுவிட்டு, ஒரு நல்ல குடும்ப கதை இருக்கிறது கேளுங்கள் என்று என்னிடம் கூறினார். கதை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனே படப்பிடிப்பை ஆரம்பித்தோம். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் நடிகர் நடிகைகள் தானாகவே அமைந்தது அது ஆசீர்வாதம் என்று தான் சொல்ல வேண்டும். மக்கா மிஷி பாடலை முதல் முறை கேட்டதுமே ஹரிஷ் ஜெயராஜிடம் இந்த பாடல் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கும் என்று கூறினேன். நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இந்த பாடலைக் கேட்டதும் இது மிக பெரிய  ஹிட்டாகுமெ என்று ஆர்வமாக கூறினார். அந்த சமயத்தில் ரவிக்கு காலில் அடிபட்டு விட்டது. சிறிது காலம் காத்திருங்கள் கால் சரியானதும் வருகிறேன் என்று அஒல்லி விட்டு வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டார். இந்தப் பாடலுக்குப் பிறகு நான் ரவியின் நடனத்திற்கு ஃபேனாகி விட்டேன் என்றார்.



 



இயக்குனர் ராஜேஷ் பேசும்போது.. 



ரவியின் ரசிகர்கள் பார்ப்பதில் மகிழ்ச்சி. இங்கு வந்திருக்கும் இந்த படத்தின் அனைத்து நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. என்னை பாராட்டி பேசிய இயக்குனர் மோகன்ராஜ் சாருக்கு மிகப்பெரிய நன்றி. 



 



என்னுடைய நிஜ வாழ்க்கையில் எனக்கு அக்கா கிடையாது. ஆனால் இந்த படம் பார்த்த பிறகு அக்கா இருக்கும் அனைவரும் அவர்கள் அக்காவிற்கு கால் செய்து பேச வேண்டும் அல்லது கோபப்பட வேண்டும் என்று தோணும். அக்கா இல்லாதவர்க்கு நமக்கு இப்படி ஒரு அக்கா இல்லையே என்ற உணர்வு வரவேண்டும். நானும் ரவியும் மூன்று கதை கலந்து ஆலோசித்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு நாம் இந்த கதையை படமாக்கலாம் என்று கூறினார். எம் குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்று படங்கள் எடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. அதேபோல் இந்த நேரத்தில் இந்த கதை நன்றாக இருக்கும் என்று கூறினார். அங்கிருந்துதான் இந்த படத்திற்கான பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு தான் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர்கள் தேர்வு செய்தோம். ராவ் ரமேஷ் கதாபாத்திரத்திற்கு ரவி சார் தான் தேர்வு செய்தார். ஜெய் பீம் படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஹைதராபாத்தில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு சென்று கதை கூறினேன். அவரிடம் கதை கூறும் முன்பு தெலுங்கு டப்பிங் கலைஞரை வைத்து தான் பணியேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் அழகாக பேசிய தமிழைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தினோம். ராவ் ரமேஷ் கூறியது போல என்னோட பகுதியை நான் சிறப்பாக செய்து விடுவேன். அதேபோல அனைவருக்கும் அதற்கான இடம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பூமிகா மேடத்திடம் கதை கூறுவதற்காக மும்பை சென்று இருந்தேன். அவர் கதையை கேட்டுவிட்டு என் பையனை அழைத்து வர வேண்டும் என்று கிளம்பி விட்டார். நான்  ஓடிப்போய் இந்த கதை ஓகேவா என்று கேட்டேன்.. புரசீட் பண்ணுங்க என்று கூறிவிட்டு பையனை அழைப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். அவரும் நிஜ வாழ்க்கையில் குடும்ப பிணைப்போடு இருப்பது சந்தோஷமாக இருந்தது. டப்பிங் முடிந்து அவருடைய நடிப்பை பார்த்ததும் முன்பை விட மிகவும் பிடித்திருந்தது. 



 



வி டி வி கணேஷ்  சார் பற்றி உங்களுக்கே தெரியும். நான் என்ன சொல்லிக் கொடுக்கிறோமோ அதை பேச மாட்டார். அவர் விருப்பத்திற்கு தான் பேசுவார். ஆனாலும் அது நன்றாக இருக்கும். ஒவ்வொரு நாள் படப்பிடிற்கு செல்லும்போதும் இன்று நம் வசனத்தை  தான்  பேச வைக்க வேண்டும் என்று நினைத்து செல்வேன். ஆனால் அது முடியாது. அவர் விருப்பத்திற்கு பேசினாலும் நாம் வேண்டாம் என்று சொல்ல முடியாத அளவிற்கு பேசிவிடுவார். அதேபோல ஒளிப்பதிவு, நடிப்பு என்பதை தாண்டி நட்டிசாருடன் நிறைய விஷயங்கள் பேசவோம். பிரியங்கா மோகன் அவர்களின் நடிப்பை திரையில் பார்க்கும்போது அவ்ளோ அழகாக இருக்கிறது. அவரின் சின்ன சின்ன ரியாக்ஷனை வைத்த&l

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா