சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

நடிகர் ரிச்சர்ட் ரிஷி & பெல்ஜியன் மலினோயிஸ் நாய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுப்ரமணி’!
Updated on : 12 February 2025

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வின்சென்ட் செல்வா தற்போது ‘சுப்ரமணி’ என்ற புதிய ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். ‘திரௌபதி’ உள்ளிட்ட பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ராணுவ நடவடிக்கைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் அரியவகை நாய் இனமான ‘பெல்ஜியன் மாலினோயிஸ்’ முதன்முறையாக இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்த நாயைப் படத்தில் நடிக்க வைப்பதற்கு ஏற்ப பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது, நடிகர் ரிச்சர்ட் ரிஷி நாயுடன் ஒரு மாதத்திற்கு மேலாக நேரம் செலவிட்டு பழகி வருகிறார். இப்படம் எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லராக இருக்கும். முன்னதாக ‘ஜித்தன் 2’ படத்தைத் தயாரித்த வின்சென்ட் செல்வாவின் உதவியாளரான ராகுல் பரமஹம்சா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே கொடைக்கானலில் உள்ள அடர் வனப்பகுதியில் நிறைவடைந்துள்ளது மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். இத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. 



 



படத்தின் எழுத்தாளரான இயக்குநர் வின்சென்ட் செல்வா பகிர்ந்து கொண்டதாவது, “மனிதனின் சிறந்த நண்பன் நாய்கள் மட்டும்தான். புனித நூல்கள், புராணங்கள், வரலாற்றுப் படைப்புகள் இவற்றில் எல்லாம் நாய்கள்தான் மனிதர்களுக்கு சிறந்த துணையாக இருந்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான ஆரம்பகால உறவு 15,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற உண்மை என்னை ஈர்த்தது. தவிர அகிரா குரோசாவா, ஸ்டீபன் கிங், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உட்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் பலர் தங்கள் படைப்புகளில் எப்போதும் ‘நாய்களை’ முக்கியப் கதாபாத்திரங்களாகக் கொண்டு வந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன். பல வருடங்களாக, நாயை மையக்கருவாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அது ‘சுப்ரமணி’ படம் மூலம் நடந்திருக்கிறது. இதில் 'பெல்ஜியன் மாலினோயிஸ்' என்ற அரிய இனத்தைச் சேர்ந்த நாய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் பார்வையாளர்களை மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார். 



 



இப்படத்தை எஸ் புரொடக்ஷன்ஸின் எஸ். சௌந்தர்யா தயாரிக்கிறார். இவருடன் பிரனவ் & பாலாஜி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா