சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!
Updated on : 01 May 2025

பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும்  விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும்  'துகில்' எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில்  தொடங்கப்பட்டிருக்கிறது.  இதனை முன்னணி நட்சத்திர  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்ததுடன்  முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். 



 



'துகில்'- அருகி வரும் கைத்தறி ஆடைகளின் மரபை மீட்கும் முயற்சியில் தொழிலதிபர்கள் வர்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியில் 2022 ஆம் ஆண்டில் இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தின் அனைத்து தமிழர்களுக்கும் தங்களின் பாரம்பரிய உடையான காஞ்சி பட்டு சேலை, தூய பருத்திச் சேலை, கூறைநாடு சில்க் காட்டன் சேலை, பட்டு வேட்டி போன்ற கலாச்சார உடைகளை பிரத்யேக முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கி, கைத்தறி ஆடைகளின் விற்பனையில் புதிய தடத்தை பதித்து வருகிறது. 



 



' துகில்' நிறுவனத்தின் சிறப்பு அம்சமாக வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் - வடிவமைப்பு - ஆகியவற்றை தேர்வு செய்தாலும்.. அதனையும் அவர்கள் வியக்க வைக்கும் அளவில் நேர்த்தியாகவும் பாரம்பரியத்துடனும் பட்டு சேலைகள்- பருத்தி சேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.



 



இந்த நிறுவனத்தின் புதிய கிளை மங்கலம் பொருந்திய நன்னாளாம்  அட்சய திருதியை நாளான ஏப்ரல் 30 ஆம் தேதியன்று  சென்னை அடையாறில் உள்ள சாஸ்திரி நகரில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



 



இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா