சற்று முன்

'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |    நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |   

சினிமா செய்திகள்

'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால்
Updated on : 21 May 2025

'இந்திய சினிமாவின் லாலேட்டன் ' மோகன்லாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள்.‌ அவர்கள் மிகவும் எதிர்பார்த்த பிரம்மாண்ட படைப்பான 'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.



 



டிராகன் அளவிலான வடிவங்களுடன் சிக்கலானதாகவும், விரிவானதாகவும் தங்க பழுப்பு நிற கவசத்தை அணிந்த மோகன்லால், ஒரு புராண போர் வீரன் - ராஜாவாக கம்பீரமாக நிற்கிறார். அவரது அலைபாயும் கூந்தல்- அடர்த்தியான தாடி -அற்புதமான வெள்ளை வண்ண திலகம் - அவரது கட்டளையிடும் தோற்றத்திற்கு காலத்தால் அழியாத ஆன்மீக ஈர்ப்பை வழங்குகிறது. ஒரு பெரிய வாழ்வில் அமைதியாக அமர்ந்திருக்கும் கைகளாலும் ... தீர்க்கமான பார்வையுடன் உயர்த்தப்பட்ட கண்களாலும்... அவர் அமைதியின் வலிமை, மரபு மற்றும் தெய்வீக எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். பாரம்பரிய ஆபரணங்களும், ஒரு தடித்த மூக்குத்தியும் ராஜ நாகரீக தோற்றத்தை நிறைவு செய்கின்றன. இந்த தோற்றம் - போஸ்டரை ஒரு சக்தி வாய்ந்த அறிக்கையாக மாற்றுகிறது. மேலும் இது ஒரு காவிய கதையின் மையத்தில்.. அதன் மகத்துவத்திற்காக விதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றும் வெளிப்படுத்துகிறது. 



 



மோகன்லால் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது சமூக ஊடக பக்கங்களில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ''இது சிறப்பு வாய்ந்தது. என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். இத்துடன் இதற்கான காத்திருப்பு நிறைவடைகிறது. ‌ பெருமிதத்துடனும், ஆற்றலுடனும் புயல் விழித்தெழுகிறது. உங்கள் ஆன்மாவை தூண்டும் வகையிலும்.. காலத்தை எதிரொலிக்கும் வகையிலும்.. உருவானதொரு கதையான 'விருஷபா'வின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறேன்.



 



எனது பிறந்தநாளில் இதை வெளியிடுவது மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. உங்களது அன்பு எப்போதும் எனக்கு மிகப்பெரிய சக்தியாக இருந்து வருகிறது. # விருஷபா அக்டோபர் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது'' என பதிவிட்டிருக்கிறார்கள்.



 



நந்தகிஷோர் எழுதி, இயக்கி, கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் 'விருஷபா'-  அதிரடி- உணர்வு பூர்வமான டிராமா மற்றும் புராணங்களை தடையின்றி இணைத்து வழங்கும் ஒரு சினிமா அனுபவமாகும். மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் பிராந்திய மற்றும் மொழியியல் எல்லைகளைக் கடந்து எதிரொலிக்கும்... ஒரு உண்மையான கலாச்சார ரீதியாக வேரூன்றிய அனுபவத்தை வழங்கும் என்பதையும் உறுதி செய்கிறது. 



 



2025 அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் விருஷபா வெளியிடப்பட உள்ளது. இந்தியா மற்றும் உலகளாவிய திரை சந்தைகளில் பாக்ஸ் ஆபீசை 'விருஷபா' அதிர வைக்க தயாராகிறது. சோபா கபூர் - ஏக்தா ஆர். கபூர் -சி கே பத்மகுமார் - வருண் மாத்தூர்-  சௌரப் மிஸ்ரா - அபிஷேக் எஸ். வியாஸ் - விஷால் குர்னானி  மற்றும் ஜூஹி பரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம்.. இந்திய சினிமாவில் காவிய கதை சொல்லலை மறு வரையறை செய்வதாக உறுதியளிக்கிறது. 



 



வியப்பில் ஆழ்த்தும் காட்சிகள் - உணர்வுபூர்வமான காட்சிகள் - பெரிய அளவிலான போர் காட்சிகள் - மறக்க இயலாத நிகழ்ச்சிகளுடன் தயாராகும் 'விருஷபா'- ஒரு நீடித்த தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மோகன்லாலை மையமாகக் கொண்டு இதயங்களை கவரும் வகையிலும் உலகெங்கிலும் உள்ள திரைகளை ஆள்வதற்கான.. ஒரு காவியத்திற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. 



 



எதிர்வரும் அக்டோபர் 16ஆம் தேதி அன்று இந்திய சினிமாவின் மிகப்பெரிய நிகழ்விற்கான கவுண்ட் டவுன் இன்றிலிருந்து தொடங்குகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா