சற்று முன்
சினிமா செய்திகள்
SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!
Updated on : 11 June 2025

சரியான திரைப்படத்தைக் கண்டுபிடிக்க முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்கிறீர்களா? நாம் அனைவரும் அதை அனுபவித்திருக்கிறோம். SunNXT உங்களுக்காக ஒரு அற்புதமான பட்டியலை வழங்குகிறது
இதுவரை எங்கும் திரையிடப்படாத திரைப்படம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது...
லால் சலாம்
நடிப்பில்: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்
இயக்கத்தில்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-lal-salaam-2024/detail/223701
லால் சலாம் – நட்பு, நம்பிக்கை, நம்மளோட கதை!
‘லால் சலாம்’ ஒரு சாதாரண கிரிக்கெட் படம் கிடையாது. இது நட்பை, மதத்தால் உருவாகும் பிளவுகளை, அது பின் ஏற்படுத்தும் மனஉளைச்சலை உணர்ச்சிப் பூர்வமாக சொல்லும் திரைப்படம்.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் சிறு வயதில் தொடங்கிய நட்பு, மத வேறுபாடுகளால் சோதிக்கப்படும் போது, அந்த வேதனை நம்மைத் தாக்காமல் இருக்க முடியாது. இந்த பின்னணியில், ரஜினிகாந்த் அவர்களின் மொய்தீன் பாய் ஒரே வார்த்தையில் செம்ம ‘ஸ்டைல்’ கொண்டு கதையை சீர்படுத்தி விடுகிறார்.அதற்கும் மேலாக, ஏ.ஆர். ரஹ்மானின் இசை... ஒவ்வொரு காட்சியையும் உயிரோடு பேச வைக்கிறது. சோகமும், நம்பிக்கையும் இசையில் உருகி வழிகிறது.சமூகமும், மனித நெஞ்சுகளும் சந்திக்கும் இடம் தான் 'லால் சலாம்'.
Superstar ரஜினி ரசிகர்களுக்ககாவே
முத்து
நடிப்பில்: ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு
இயக்கத்தில்: கே. எஸ். ரவிகுமார்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
கடல்ல முத்து எப்படி அதிசயமோ, அதேமாதிரிதான் நம்ம தலைவரோட’முத்து’ படமும் சினிமாவுல அதிசயம்தான்.
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-muthu-1996/detail/75250
சந்திரமுகி
நடிப்பில்: ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா
இயக்கத்தில்: பி. வாசு
இசை: வித்யாசாகர்
அறிவால் ஆவியை வீழ்த்தியவன்,
மாயையின் முகமூடியை கிழித்தவன் – நம் தலைவர்!!
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-chandramukhi-2005/detail/8825
பேட்ட
நடிப்பில்: ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திகி
இயக்கத்தில்: கார்த்திக் சுப்பராஜ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
ரஜினி ரசிகனால், ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினியே செய்திருக்கும் தரமான சம்பவம் - பேட்ட !!
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-petta-2019/detail/127025
எந்திரன்
நடிப்பில்: ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் பச்சன், டேன்னி டென்சொங்பா
இயக்கத்தில்: எஸ். சங்கர்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
இரும்புக்குள் ஒரு இதயம் முளைத்து, 'எந்திரன்'... தந்திரன் ஆனால், என்ன நடக்கும்?
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-enthiran-4k-2010/detail/165835
த்ரில்லர் வேண்டுமா?
ராட்சசன்
நடிப்பில்: விஷ்ணு விஷால், அமலா பால்
இயக்கத்தில்: ராம் குமார்
இசை: ஃகிர்பான்
பள்ளி மாணவிகளைக் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன், சினிமா இயக்குநர் கனவோடு திரிந்து, குடும்பச் சூழலால் போலீஸ் ஆன ஹீரோ... இருவரையும் இணைத்து மிரட்டுகிறான் - ராட்சசன்
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-ratsasan-2018/detail/82686
கெத்து
நடிப்பில்: விக்ராந்த், உதயநிதி ஸ்டாலின், சத்யராஜ்
இயக்கத்தில்: திருகுமரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
ஒரு அமைதியான மலை நகரத்தில், ஒரு கொலையாளி குழப்பத்தை தூண்டி, பதட்டமான விளையாட்டைத் தூண்டுகிறார்
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-gethu-2016/detail/7263
நான் மிருகமாய் மாறா
நடிப்பில்: விக்ராந்த், சரத் குமார், வாணி போஜன்
இயக்கத்தில்: சத்யசிவா
இசை: ஃகிர்பான்
இந்த இருண்ட பழிவாங்கும் கதையில் விக்ராந்த் மிருகமாக மாறுகிறார். இது கரடுமுரடானது, ஜாக்கிரதை.
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-naan-mirugamai-mara-2023/detail/153462
டிராமா போய் தேடுபவர்களுக்கு
நீர்ப்பறவை
நடிப்பில்: விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ்
இயக்கத்தில்: சீனு ராமசாமி
இசை: என். ஆர். ராகுநாதன்
இலங்கைப் பேரினவாத அரசின் கடற்படைத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி, வெறுமனே செய்தியாக மட்டுமே கடந்துபோன பல நூற்றுக் கணக்கான மீனவர்களில் ஒரு பறவை, இந்த - நீர்ப்பறவை!
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-neerparavai-2012/detail/7090
முத்துக்கு முத்தாக
நடிப்பில்: விக்ராந்த், இளவரசு, சரண்யா பொன்வண்ணன்
இயக்கத்தில்: ராசு மாதுரவன்
இசை: காவி பெரியதம்பி
கண்ணில் ஆற்றை ஊற்றுவிக்கும் ‘முத்துக்கு முத்தாக’!
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-muthukku-muthaga-2011/detail/6979
புகுந்து விளையாடா
வெண்ணிலா கபடி குழு
நடிப்பில்: விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன்
இயக்கத்தில்: சுசிந்திரன்
இசை: வி. செல்வகனேஷ்
சூரியின் பரோட்டா... அப்புக்குட்டியின் மாமியார்... ஊருக்குள் கெத்தான ஒரு கபடி குழு!! - வெண்ணிலா கபடி குழு
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-vennila-kabadi-kuzhu-2009/detail/8991
வெண்ணிலா கபடி குழு 2
நடிப்பில்: விக்ராந்த், பசுபதி, சூரி
இயக்கத்தில்: செல்வா சேகரன்
இசை: ஆர். அஜய்
புதிய தலைமுறை கபடி வீரர்கள் தங்கள் கனவுகளை உயிர்ப்பிக்க இதயம், வியர்வை மற்றும் உடைக்க முடியாத கடினத்துடன் போராடுவதால்; பெருமைக்கான போர் தொடர்கிறது.
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-vennila-kabaddi-kuzhu-2-2019/detail/94548
த்ரில்லர் வேண்டுமா? நகைச்சுவை வேண்டுமா? அல்லது ரஜினியின் மாஸ்?
உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும், SunNXT உங்களுக்கான சரியான விஷயத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ - அதை ஸ்ட்ரீமிங் செய்து தயாராக வைத்திருக்கிறோம்.
🔐 இப்போதே Subscribe செய்யவும்:
அடிப்படைத் திட்டம் - ₹579 ஒரு வருடத்திற்கு
பிரீமியம் திட்டம் - ₹899 ஒரு வருடத்திற்கு
அதிக திரைப்படங்கள், அதிக சுவாரஸ்யம். நீங்கள் விரும்பும் இடத்திலேயே.
உங்கள் அடுத்த பிஞ்ச் இங்கே தொடங்குகிறது.
SunNXT. இப்போதே Subscribe செய்யவும்.
சமீபத்திய செய்திகள்
அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
அதர்வா - நெல்சன் வெங்கடேசன் கூட்டணியில் உருவாகி இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் கே. பாபு, ஹேமந்த் ஆகியோருடன் கவிஞர் வெண்ணிலாவின் வாரிசுகளும், மத்திய தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் தமிழக அளவில் சாதனை படைத்த கவின்மொழி மற்றும் நிலா பாரதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பேசுகையில், '' வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. இந்த பாடலில் இணைந்து பணியாற்றிய பாடலாசிரியர், பாடகர், பாடகிக்கும், இசைக்கலைஞர்களுக்கும் நன்றி. பாடகராக என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. ஏ ஆர் ரகுமான் சார் தான் என்னுடைய மானசீக குரு. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்தப் பாடலை கேட்டுவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
அறிமுக இசையமைப்பாளர் சத்ய பிரகாஷ் பேசுகையில், '' சந்தோசமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலுக்கு இசை அமைத்திருக்கிறேன். இந்தப் பாடல் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. கே.எஸ் சித்ராம்மா இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் இந்த படத்தின் மிக முக்கியமான சூழலில் இடம் பிடித்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் இது என்னுடைய பயணத்தின் தொடக்கம் தான். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
அறிமுக இசையமைப்பாளர் பிரவீண் சைவி பேசுகையில், '' 14 வருடமாக சென்னையில் இருக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதற்கு நானும் சாட்சி. இதுவரைக்கும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. அற்புதமான அனுபவம். இந்தப் படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். '' என்றார்.
அறிமுக இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் பேசுகையில், ' இசையமைப்பாளராக பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது போன்றதொரு வாய்ப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். அறிமுக இசையமைப்பாளர்களுடனும், ஜிப்ரான் போன்றவர்களுடனும் மேடையை பகிர்ந்து கொண்ட தருணம் தான் எனக்கு கிடைத்த கௌரவம் என நினைக்கிறேன்'' என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, '' பெரு மகிழ்ச்சியில் இருக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்புத் தம்பி மாரி செல்வராஜை இந்த மேடையில் பார்க்கிறேன்.
இந்த மேடையில் வியப்பாகவும், சிலிர்ப்பாகவும் சொல்ல நினைப்பது இயக்குநர் நெல்சனை பற்றி தான். அவரிடம் தொடர் இலக்கிய வாசிப்பு இருக்கிறது. சமகாலத்தில் சமூகத்தின் அசைவுகளை அவதானித்து, அதில் தன்னுடைய பார்வையை பதிவு செய்வதில் தீவிரமானவர். அத்துடன் உலக திரைப்படங்களையும் தீவிரமாக பார்க்கக் கூடியவர். இத்தகைய அனுபவங்களில் ஊறி வெளியாகும் படைப்புதான் இது.
அவருடன் பாடல் எழுதும் போது பாடலுக்காக அவர் விவரிக்கும் சூழல் வாழ்க்கைக்கான கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்குள் இருக்கும். மனித உணர்வுகளை நுட்பமாக சொல்லக்கூடிய வகையில் தான் அவர் சூழலை விவரிப்பார். என்னை போல் எழுதக்கூடியவர்களுக்கு இது எளிதானது. இதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் பணியாற்றிய ஏனைய பாடலாசிரியர்களுக்கும், இசையமைப்பாளராக அறிமுகமாகும் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உலகம் நமக்கு எதை கொடுத்தாலும் நாம் அதற்கு திருப்பி தர வேண்டியது அன்பை மட்டும் தான். இதைத்தான் இந்த படமும் பேசுகிறது'' என்றார்.
பாடலாசிரியர் முத்தமிழ் பேசுகையில், '' 1980களில் வெளியான 'கண்ணில் தெரியும் கதைகள்' என்ற படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அனைவரும் இசை துறையில் சாதித்த ஜாம்பவான்கள். தற்போது பாடல்கள் மலிந்து வரும் தருணத்தில் ஐந்து இசையமைப்பாளர்களை ஒரு படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இயக்குநரும், தயாரிப்பாளரும் எடுத்த முடிவிற்கு பாராட்டுகிறேன். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் இசை துறையில் ஜாம்பவான்களாக மாற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த டி என் ஏ திரைப்படம் - ரசிகர்களின் டிஎன்ஏவுக்குள் சென்று உற்சாகத்தை உண்டாக்கட்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.
நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், '' இது ஒரு நல்ல படம். அதர்வாவின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும்.
பத்து வருடங்களுக்கு முன் இதே மேடையில் தான் இயக்குநர் நெல்சன் இயக்கிய 'ஒரு நாள் கூத்து' படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. அவர் தொடர்ந்து நிறைய படங்களை இயக்க வேண்டும் ஏனெனில் அவர் ஒரு நேர்மையான இயக்குநர். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு இப்போது தான் இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்திருக்கிறார். பொருத்தமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அழைத்து வாய்ப்பளிப்பார். இந்தத் திரைப்படம் ஜூன் இருபதாம் தேதியன்று வெளியாகிறது. படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வழங்குங்கள்'' என்றார்.
பாடலாசிரியர் உமாதேவி பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். ஐந்து திறமையான இளம் இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியதற்காக இயக்குநருக்கு நன்றியையும் , வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பர்கானா எனும் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருந்தேன்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இடம் பிடித்திருக்கும் பெண் கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவர்களாக எனக்குத் தெரிந்தார்கள். கவனிப்பாரற்று இருக்கும் பெண்களை தன்னுடைய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இடம்பெறச் செய்திருப்பார்.
'டி என் ஏ' வில் உள்ள திவ்யா கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொலைத்த அனுபவங்களை நினைவுபடுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருக்கிறது.
அற்புதமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களை தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகை மானசா சௌத்ரி பேசுகையில், '' டி என் ஏ எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். நான் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் இது . இதற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய வேடமாக இருந்தாலும் அழுத்தமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் என நம்புகிறேன் அதர்வாவுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது.'' என்றார்.
இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில், '' எனக்கு அடையாளம் கொடுத்த தயாரிப்பாளருக்கு வணக்கம். ஒவ்வொரு படமும் மக்களிடம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பார். சினிமாவை மிகவும் நேசிப்பவர். எந்த படத்தைப் பற்றியும் அவரிடத்தில் ஒரு சரியான ஜட்ஜ்மெண்ட் இருக்கும். இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இயக்குநர் நெல்சன் அவருடைய எல்லா படங்களையும் நேர்த்தியாக சொல்லி இருப்பார். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில், '' என் மனதிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் படம். இது என்னுடைய விழாவாக தான் பார்க்கிறேன்.
ரமேஷ் திலக் குறிப்பிட்டது போல் நெல்சன் வெற்றி பெற்றால் ஏராளமானவர்களுக்கு ஒரு தலைமுறைக்கான வாசல் திறந்து விட்டது போல் இருக்கும். மிக சாதாரண நிலையில் இருந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருப்பவர்.
சில நபர்கள் தான் ஏற்ற இறக்கங்களை கடந்து வாழ்க்கையில் சீரான ஒரு நிலையை பராமரிப்பார்கள். அப்படி ஒரு இயக்குநர் தான் நெல்சன்.
இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நிச்சயமாக சொல்கிறேன்... நெல்சன் இயக்கிய படங்களில் வெகுஜன ஆதரவும், வியாபார ரீதியான பெரிய வெற்றியையும் பெறக்கூடிய முதன்மையான படமாக இது இருக்கும். இது சம்பிரதாயமான வார்த்தை இல்லை. நிச்சயம் இது நடக்கும்.
அதர்வாவிற்கும் இந்த படம் நிச்சயமாக நல்ல படமாக இருக்கும். அற்புதமாக நடித்திருக்கிறார்.
நிமிஷா இந்தியாவில் இருக்கக்கூடிய நல்ல நடிகைகளில் ஒருவர். மொழிகளைக் கடந்து ஏற்கனவே நம்மிடம் வந்திருப்பவர். இந்தப் படத்தில் ஸ்பெஷலாக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் மக்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார்- தயாரிப்பாளர் என்பதை கடந்து என்னுடைய நண்பர். நல்ல மனிதர் . நான் எப்போதும் ஆச்சரியமாக பார்க்கும் மனிதர். காலையில் 6:00 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி வந்தவாசிக்கு 9 மணிக்கு சென்று விடுவார், பிறகு அங்கிருந்து மாலை 6:00 மணிக்கு கிளம்பி, 9 மணிக்கு சென்னைக்கு வந்து விடுவார். தொடர்ந்து உழைக்கும் அபாரமான உழைப்பாளி. இந்த உழைப்புதான் அவரை அரசியல் -சினிமா- தொழில் துறை - என அனைத்து துறைகளிலும் வெற்றியாளராக மாற்றி இருக்கிறது.
சினிமா மீது தீரா காதல் கொண்டவர். ஒரு காபி குடிப்பதற்குள் ஒரு கதையை சொல்லக்கூடிய வல்லமை பெற்றவர். அவர் இயக்குவதற்கு அவரிடமே நிறைய கதைகள் உள்ளது. அவர் வெற்றி பெற்றால் மக்களுக்கு நிறைய நல்ல படங்கள் கிடைக்கும். அந்த வகையில் டி என் ஏ படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும். வெற்றி விழாவில் சந்திப்போம்'' என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், '' இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தின் பின்னணி இசைக்காக இயக்குநர் நெல்சன் என்னை தொடர்பு கொண்ட போது அவரிடம் நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் என்று சொன்னேன். அவருடைய படங்களில் கதை சொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கும். என்னைப் பொறுத்தவரை அவர் இயக்கிய மூன்று படங்களை விட இந்த டி என் ஏ சிறந்தது என்று சொல்வேன்.
அவருடைய பேச்சை நான் மிகவும் ரசிப்பேன். அவரால் பொலிட்டிக்கல் என்டர்டெய்னர் படத்தை இயக்க முடியும். அந்த அளவிற்கு அவரிடம் அரசியலைப் பற்றிய அறிவு இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. '' என்றார்.
நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், '' டி என் ஏ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. திவ்யா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறிது சவாலானதாக இருந்தது.
அதர்வா திறமையான சக நடிகர். ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு திரையில் மாயஜாலம் செய்திருக்கிறார்.
படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படம் ஜூன் இருபதாம் தேதி அன்று வெளியாகிறது . அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
சிறப்பு விருந்தினர் கவின் மொழி பேசுகையில், '' அனைவருக்கும் வணக்கம் . எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமாரின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கிறேன். பொதுவாக இது போன்ற இசை வெளியீட்டு விழாவில் திரை உலக பிரபலங்களை தான் விருந்தினர்களாக அழைப்பார்கள். முதன்முறையாக எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் சினிமாவை திரையில் தான் கண்டு ரசித்து இருக்கிறோம். அதை கடந்து இத்தனை நபர்கள் கடுமையாக உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள் என்பதனை பார்க்கும்போது பெரிய மேஜிக்காக இருக்கிறது.
ஒரு தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்திருப்பது போல் தான் இருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை நன்றாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெறுவதற்கும் , படக் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ''என்றார்.
சிறப்பு விருந்தினர் நிலா பாரதி பேசுகையில், '' இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியதற்காக தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு நன்றி.
அவர் அழைப்பு விடுத்த போது இந்த விழாவிற்கு செல்வது தொடர்புடையதாக இருக்குமா? என யோசித்தேன். நாள் இங்கு வந்த பிறகு ஒவ்வொருவரையும் சந்தித்த பிறகும் அவர்களுடைய பேச்சை கேட்ட பிறகும் நெருக்கமானதாக இருக்கிறது.
ஆனந்த விகடனில் வெளியான' வட்டியும் முதலும்', 'மறக்கவே நினைக்கிறேன்' போன்ற தொடர்களை வாசித்திருக்கிறேன். அதை எழுதிய ராஜு முருகனை இங்கு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாரி செல்வராஜ், பாலாஜி சக்திவேல், நெல்சன் ஆகியோரை சந்திக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
அண்மையில் 'டப்பா கார்ட்டல் ' எனும் வெப்சீரிஸை பார்த்தேன். அதில் நிமிஷா சஜயன் அற்புதமாக நடித்திருந்தார்கள். அவர்களை இங்கு நேரில் பார்க்கிறேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
'சூப்பர் சிங்கர்ஸ்' நிகழ்ச்சிகள் பார்த்து ரசித்தவர்களை இங்கு இசையமைப்பாளராக பார்க்கிறேன். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக பெருமிதம் அடைகிறேன். டி என் ஏ திரைப்படம் வெற்றி பெறுவ
'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு
'காட் ஆப் மாஸஸ் ' நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தயாராகி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'அகண்டா 2 : தாண்டவம்'. பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைப் பெற்ற 'அகண்டா' திரைப்படத்தின் தொடர்ச்சியாக அகண்டா படத்தின் இரண்டாம் பாகம், அதிரடி மிக்க ஆக்சன் படைப்பாக இருக்கும் என படக் குழு உறுதி அளிக்கிறது. ஆக்சன் காட்சிகள்- ஆன்மீக பின்னணியுடன் கலந்திருக்கிறது. இந்த திரைப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார்.
' பத்மபூஷண் 'நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ' அகண்டா 2 : தாண்டவம்' படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். படக்குழு, படத்தின் நாயகனான பாலகிருஷ்ணாவிற்கு பிறந்தநாள் பரிசாக இந்த டீசரை வெளியிட்டுள்ளனர்.
இந்த டீசரில் பாலகிருஷ்ணாவின் பரபரப்பான மிரட்டலான தோற்றம் - அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தோன்றக்கூடிய மூர்க்கத்தனமும், தெய்வீகத்தின் ஆற்றலும் கலந்த கலவையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் போயபதி ஸ்ரீனு மீண்டும் ஒருமுறை பாலகிருஷ்ணாவை வேறு எவரையும் விட நன்றாக புரிந்து வைத்திருப்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் நட்சத்திர பிம்பத்தை கூடுதலாக பிரகாசிக்கும் வகையில் படத்தின் டீசரை அவர் உருவாக்கி இருக்கிறார்.
நந்தி - திரிசூலம் - பனி மூடிய கைலாசம் இவற்றின் பின்னணி பார்வையாளர்களை வசீகரிக்கிறது. அத்துடன் கதாபாத்திரத்தின் நுட்பத்தையும், படம் பேசும் விசயத்தையும் பிரதிபலிக்கிறது. பாலகிருஷ்ணாவின் கம்பீரமான தோற்றமும், நடையும் தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது.
அவர் குண்டர்களை ஒதுக்கி தள்ளும் காட்சிகளும், திரிசூலத்துடன் கூடிய ஷாட்டும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்கிறது. சண்டை பயிற்சி இயக்குநர்களான ராம்- லக்ஷ்மன் பாலகிருஷ்ணாவின் திறமையை துல்லியமாக வடிவமைத்துள்ளனர். அவரது உரையாடல் எப்போதும் போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
எஸ். தமனின் பின்னணி இசை, டீசரை தெய்வீகமான உணர்வுக்கு உயர்த்துகிறது. பாலகிருஷ்ணாவின் தோற்றம் பிரம்மாண்டத்தை நிறைவு செய்கிறது. பாலகிருஷ்ணாவிற்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமன் முற்றிலும் மற்றொரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.
14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்பின் தரம் மிக உயர்ந்தவை என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டமும், செழுமையும் இணைந்திருக்கின்றன.
இந்த டீசரின் ஒவ்வொரு ஃபிரேமும் .. குழுவினரின் பேரார்வத்துடன் கூடிய அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு வியப்பில் ஆழ்த்தக்கூடிய காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நவராத்திரி திருவிழா விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் 'அகண்டா 2 :-தாண்டவம்' படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் தெய்வீகம் .. தேசம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை காந்தம் போல் ஈர்க்கும் என்பது உறுதி. இந்த டீசர் ஏற்கனவே அந்த மாயஜாலத்தை நிகழ்த்தியுள்ளது.
'அகண்டா 2: தாண்டவம் ' படத்தில் நடிகர் ஆதி பினிஷெட்டி வில்லனாக நடிக்கிறார். 'அகண்டா' படத்தின் முதல் பாகத்தில் நாயகனுக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தா இதிலும் நாயகியாக தொடர்கிறார். இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
சி . ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தம்மிராஜு கவனிக்க கலை இயக்குநராக ஏ. எஸ் .பிரகாஷ் பணியாற்றி வருகிறார்.
ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, அடுத்ததாக அதிரடி வெற்றித் திரைப்படமான "டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல், எனும் டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதிரடி-திகில்-நகைச்சுவை, ஜம்ப்-ஸ்கேர்ஸ், நையாண்டி மற்றும் ஸ்லாப்ஸ்டிக் ஆகிய ஜானர்களின் சுவாரஸ்யமான கலவையாக, அனைத்து வகை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில், உருவாகியுள்ளது. இறந்துபோன திரைப்பட இயக்குநரின் பழிவாங்கும் எண்ணத்தால், ஒரு திரைப்படத்திற்குள் சிக்கிக்கொள்ளும் விமர்சகன், அங்கு இருக்கும் டைரியின் சக்தியை மீறி, அந்த மாயாஜால சக்தியை மீறி, ஜெயிக்கிறானா ? படத்திலிருந்து வெளியில் வந்தானா? என்பது தான் இப்படத்தின் மையம்.
இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பது தான் இப்படத்தின் கதை.
ZEE5 இன் மூத்த துணைத் தலைவர் தென்னிந்திய மார்க்கெட்டிங் மற்றும் வணிகத் தலைவர் லாயிட் சி சேவியர் கூறியதாவது…,
"ZEE5 இல், புதுமையான கதைக்களத்தில், ரசிகர்களை ஈர்த்த வெற்றித் திரைப்படங்களைக் கொண்டுவருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். தென்னிந்திய கதைகளுக்கு, இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. “டிடி நெக்ஸ்ட் லெவல்” முற்றிலும் வித்தியாசமான களத்தில், ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும். இப்படத்தினை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் கூறியதாவது…,
"டிடி நெக்ஸ்ட் லெவல் மூலம், பாரம்பரிய திகில் அனுபவத்திலிருந்து மாறுபட்டு, நகைச்சுவையின் எல்லைகளைத் தாண்டி, முற்றிலும் புதுமையான ஒரு உலகத்தை உருவாக்க விரும்பினேன். தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதும், சந்தானம், செல்வராகவன், கௌதம் மேனன் மற்றும் கீதிகா திவாரி உள்ளிட்ட அற்புதமான நடிகர்களின் பங்களிப்பிலும், அந்த கற்பனை உலகத்தை உயிர்ப்பிக்க முடிந்தது. வழக்கமான கதை சொல்லலிருந்து மாறுபட்டு, ஒவ்வொரு திருப்பத்திலும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு படத்தை வடிவமைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு ZEE5 ஐ விடச் சிறந்த தளம் இருக்க முடியாது. ZEE5 மூலம் இப்படம், உலகம் முழிக்கவிருக்கும் அனைத்து ரசிகர்களையும் சென்றடையவுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
நடிகர் சந்தானம் கூறியதாவது..,
"டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தில் நடித்த கிஸ்ஸா கதாப்பாத்திரம், சமீப காலங்களில் நான் ஏற்று நடித்ததிலேயே மிகவும் திருப்திகரமான கதாபாத்திரமாக்கும். கிஸ்ஸா தைரியமானவன், விசித்திரமான குணங்கள் நிறைந்தவன். கிஸ்ஸா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது மிகுந்த சவால் வாய்ந்ததாகவும், சந்தோசமான அனுபவமாகவும் இருந்தது. இப்போது இப்படம் ZEE5 மூலம் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைச் சென்றடைவது மகிழ்ச்சி. நீங்கள் இதுவரை பார்த்த திரைப்படங்களைத் தாண்டி, இந்தப்படம் உங்களை அடுத்த லெவலுக்கு கூட்டிச் செல்லும்.
ZEE5 ல் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல், டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்!!
புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !
இந்தியா, 7 ஜூன் 2025 – ZEE5 இன்று தனது புதிய பிராண்டு அடையாளத்தையும், எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான மாற்றத்தையும் அறிவித்து, இந்தியாவின் முன்னணி உள்ளூர் OTT தளமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. “நம்ம மொழி நம்ம கதைகள்” எனும் வாக்குறுதியுடன், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நெடுங்கதைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், ZEE5 புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய மாற்றத்தில், மொழியை மையப்படுத்திய பல புதிய திட்டங்கள், AI சார்ந்த பர்ஸ்னலைஸ்ட் பரிந்துரைகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட கஸ்டமர் அனுபவம் ஆகியவை அடிப்படை அம்சமாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மொழிக்குமான கண்டண்ட் பிளான்கள் தனித்தனியாக உருவாக்கப்படுகின்றது.
மொழி அடிப்படையிலான சந்தா திட்டங்கள் ₹120/மாதம் முதல் தொடங்க, இந்தி (பஞ்சாபி மற்றும் போஜ்புரி உட்பட) ₹220/மாதம், All Access Pack ₹320/மாதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் வருடாந்திர சலுகை கட்டணமும் உள்ளது.
ZEE நிறுவனத்தில் வரவிருக்கும் முக்கிய மொழி சார்ந்த சீரிஸ்கள் :
Detective Sherdil (இந்தி)
Chhal Kapat: The Deception (இந்தி)
சட்டமும் நீதியும் (தமிழ்)
Mothubaru Love Story (தெலுங்கு)
Inspection Bungalow (மலையாளம்)
Maarigallu (கன்னடம்)
Aata Thambhahya Naay (மராத்தி)
Vibhishan (பெங்காலி) ஆகிய படைப்புகள் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.
ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவர் அமித் கோயங்கா கூறியதாவது...
"இந்திய பார்வையாளர்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஆழமான பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட, மொழிக்கு முதன்மையான தளமாக மாறுவதற்கான எங்கள் பயணத்தில் எங்கள் புதிய பிராண்ட் அடையாளம் ஒரு முக்கிய படியாக இருக்கும். ZEE இந்த புதிய பிராண்ட், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில், எங்கள் தடத்தை வலுப்படுத்துதல், கலாச்சார ரீதியாக பொருத்தமான கதைசொல்லல் மூலம் ரசிகர்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்துதல் மற்றும் பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட மற்றும் உள்ளுணர்வு கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த, வசதியான தளத்தைத் தொடர்ந்து உருவாக்குதல் என செயல்படும். இது உலகளவில் இந்தியப் பொழுதுபோக்கு படைப்புகளைக் கண்டறிந்து, இணைத்து, நுகரும் விதத்தில் ஒரு புதிய கலாச்சார மாற்றமாகும்"
ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கார்த்திக் மகாதேவ் கூறுகையில்..,
"நம்ம மொழி நம்ம கதைகள்" என்ற வாசகத்துடன் கூடிய எங்கள் பிராண்ட் பிரச்சாரம், மொழி அடிப்படையிலானது, ஒரு ஆழமான பர்ஸனலைஸ் உணர்வுகளின் கொண்டாட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் மொழியில் சொல்லப்படும் ஒரு கதை, அதை வெறும் கதையாக பார்க்காமல், அதை வாழ்ந்தது போல உணர வைப்பது தான் எங்கள் நோக்கம். 7 மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இந்த பன்மொழி பிரச்சாரம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் உட்பட பெரிய மற்றும் சிறிய நகரங்களின் கலாச்சாரத்துடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மொழி அடிப்படையிலான இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதும், அவர்கள் மொழியில் அவர்கள் கலாச்சாரத்தில் படைப்புகளை வழங்க வேண்டும் என்ற ZEE5 இன் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறது.
ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை உள்ளடக்க அதிகாரி ராகவேந்திரா ஹுன்சூர் கூறுகையில்..,
“ZEE5 இல், சக்திவாய்ந்த கதைசொல்லல் ஆழமான கலாச்சார நுண்ணறிவுடன் தொடங்குகிறது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மொழி சார்ந்த பார்வையாளர்களுக்குச் சேவை செய்வதில், நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அவர்களின் யதார்த்தங்கள், அவர்களின் மொழிகள் மற்றும் அவர்களின் அன்றாட கதைகளில் இணைந்து, நாங்கள் எதை உருவாக்குகிறோம் என்பதை மட்டுமல்ல - யாருக்காக உருவாக்குகிறோம் என்பதையும் இதில் விரிவுபடுத்தியுள்ளோம். அது நீண்ட வடிவ ஒரிஜினல் கதைகள், குறுகிய வடிவ கதைகள் அல்லது சோதனை வடிவங்கள் என எதுவாக இருந்தாலும், பார்வையாளர்களை அவர்களின் மொழிகளில் மகிழ்விப்பதே எங்கள் குறிக்கோள். இது வெறும் புதுமையான கண்டண்ட் உள்ளடக்க உத்தி மட்டும் அல்ல - பார்வையாளர்கள் முழுமையாக ரசிக்கும் வகையில் மொழியை மையப்படுத்தி, எங்கள் புதிய படைப்புகளை வழங்கவுள்ளோம்"
இந்த புதிய பிராண்டிங் மாற்றம், ‘Yours Truly, Z’ எனும் Zee நிறுவன வாக்குறுதியுடன் மிக இயல்பாக ஒத்துப்போகிறது. இது ZEE5-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்காக, பல்வேறு மொழிகளில் புதுமையான கண்டண்ட்களை வழங்கும் ஒரே தளமாக ZEE5 தன்னை நிலைநிறுத்தி வருகிறது.
'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்
“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரீஃப் முகமது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் படமான “கட்டாளன்” படத்தினை தயாரித்து வருகிறார்.
முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் இப்படம், அடர்ந்த வனத்திற்குள், வாழ்க்கைக்கும் விதிக்குமான போராட்டத்தில் சிக்கியுள்ள ஒருவனின் அசாத்தியமான பயணத்தை விவரிக்கிறது. தனது தனித்துவமான நடிப்புக்கு பெயர் பெற்ற, ஆண்டனி வர்கீஸ், “கட்டாளன்” படத்தில், காட்டுக்குள் வாழும் மனிதனை அச்சு அசலாக திரையில் கொண்டு வந்துள்ளார்.
ஆண்டனி வர்கீஸ் உடன் இணையும் சுனில், புஷ்பா மற்றும் ஜெயிலர் போன்ற, வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஒரு புதுமையான வலிமைமிக்க கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதுவரை அவர் செய்த பாத்திரங்களைவிட, முற்றிலும் மாறுபட்ட மற்றும் அதிர்ச்சியளிக்கும் அவரது தோற்றம், ரசிகர்களை மிரள வைக்கும்.
மார்கோவில் இந்திய திரையுலகிற்கு மிகவும் பயங்கர வில்லனாக அறிமுகமான, கபீர் துஹான் சிங், “கட்டாளன்” படத்தில், மீண்டும் கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்துள்ளார். அவருடைய தோற்றமே கதையில் அதிரடியாகவும் பரபரப்பையும் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அவரது திரை வாழ்க்கையில், இது மறக்கமுடியாத படமாக இருக்கும்.
“காந்தாரா” திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத், இப்படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் அமைக்கிறார். காட்டை மையமாகக் கொண்ட கதைக்கு, அவரது இசை மிகுந்த உணர்வையும், பலத்தையும் சேர்க்கும்.
ஷமீர் முகமது ஒளிப்பதிவு செய்ய, கேச்சா கம்பக்டி மற்றும் கலை கிங்ஸன் ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளை இயக்குகின்றனர். கட்டாளன் திரைப்படம் நாட்டுப்புறக் கதைச்சாரம், உணர்ச்சி, அதிரடி ஆகியவற்றை தகுந்த அளவில் கலந்து, காட்டு வேட்டைக்காரர்களின் உலகத்தை திரையில் சித்தரிக்கவுள்ளது.
கியூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் “கட்டாளன்” திரைப்படம், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் வகையில், மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்
B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர்ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவிசா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற் குஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார்.
விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் அருண்குமார் பேசுகையில், ''இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் 'ஏமாற்றாதே', 'பொய் சொல்லாதே', 'திருடாதே', 'கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்' என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த 'குயிலி' படகுழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்ததிரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்? எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது. இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்..அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,'' என்றார்.
நடிகை தாஷ்மிகா பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக்குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,'' என்றார்.
மூத்ததயாரிப்பாளர்கே. ராஜன்பேசுகையில், ''குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல், எல்லாருக்குமான தலைவராகவும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவராக திகழும் தொல்.திருமாவளவனை வருக, வருக என வரவேற்கிறேன். அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம். இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த 'குயிலி' திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன்.
இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த த்திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள்.
நான் தமிழக முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத்தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களை கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் 20 முதல் 25 சதவீத பெண்களும் குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாடு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது.அதனால் தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் ஒரு வழியில் மதுவை ஒழிக்க வேண்டும்.
இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை இந்த படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவை இல்லை. திரையரங்கத்தில் பாடல் காட்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதில்லை. ஆனால் இந்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கருத்துள்ள பாடல் இருக்கிறது, மது ஒழிப்பை பற்றி பேசுகிறது, மதுவால் தாய்மார்கள் படும் வேதனையை பேசுகிறது. இதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். இப்படம் வெற்றி பெற வேண்டும். படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு தமிழ் ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடத்திலும் ,இயக்குநர்களிடத்திலும் பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
இயக்குநர்ப. முருகசாமி பேசுகையில், ''இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத் தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது.
இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் கார்ல்மார்க்ஸ், அண்ணல்அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாக இருக்கும் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவைபார்க்கிறேன். சிறிய வயதிலிருந்து அவருடைய போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன். பா.ரஞ்சித்தைப் பார்த்தும் வளர்ந்திருக்கிறேன்,'' என்றார்.
இசையமைப்பாளர் ஜூஸ்மித் பேசுகையில், ''முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும் அவர்கள் கேட்டதில்லை. இதனைத் தொடர்ந்து இப்படத்தின்த யாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொருமுறை தொலைபேசி மூலம் பேசும் போது நலம்வி சாரித்து நான் படம் தயாரித்தால் நீதான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும் அழைப்பு விடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கினார்.
சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட, சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். என்னை சினிமாவில் அழைத்து வந்தவர்கள் யாரும் தற்போது என்னுடன்இல்லை. அவர்கள் சினிமாவிலும் இல்லை. வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமே எனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார். இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. இயக்குநர் முருகசாமி, 'குயிலி' கமர்ஷியல் திரைப்படம் அல்ல, கருத்து சொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அவருக்கு பிடித்தது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்து பாடல்களும் மதுவை குடிக்காதே என்பதை சொல்லும் விதமாகத் தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களை நான்கு புதுமுக பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்,'' என்றார்.
இயக்குநர் ஸ்ரீஜர் பேசுகையில், '' சினிமாவும் அரசியலும் ஆண்டாண்டு காலமாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. சமீபகாலமாக சினிமாவில் அரசியல் பேசு பொருளாகமாறி இருக்கிறது. 'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் ,கலாச்சாரத்தையும் பேசும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் குடிக்கு அடிமையானவர்களைப் பற்றி ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். தாய்ப் பாசத்தை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள்.
இந்த விழாவின் நாயகனான ஜூஸ்மித் பத்து ஆண்டுகளுக்கு முன்என்னால் அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர். இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இது போன்ற படங்களுக்கு இரண்டு பாடல்களே போதுமானது. பரபரப்பான இந்த வாழ்க்கை சூழலில் சினிமாவையே ஒன்றரை மணி நேரமாக சுருக்கி விட்டோம். இதுவே போதும் என்றும் நினைக்கிறோம். 'குயிலி' திரைப்படம் நல்ல கலாச்சாரத்தையும், நல்ல பண்பாட்டையும் போதிக்கும் படமாக இருக்கிறது. வலியை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ''எல்லோருக்குமான தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்க்கை வரலாறு சுயசரிதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். யாரேனும் இதற்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
இப்படத்தின் இயக்குநர் முருகசாமி, 'கல்லூரி' படத்தில் இருந்து என்னிடம் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு குறும்படத்தை இயக்கி என்னிடம் காண்பித்து அதன் பிறகு உதவியாளராக சேர்ந்தார். இன்று வரை என்னுடன் பயணிக்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட, இந்தப் படத்திலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன். 'பொன்னியின் செல்வன்', 'அசுரன்' ஆகிய படங்களில் நான் நடிக்கும் போது என்னுடன் வருகை தந்து அங்கு நடைபெறும் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வார். அதையெல்லாம் செய்த பிறகு தான் அவர் இந்த படத்தை உருவாக்கி இருப்பார் என நம்புகிறேன். இயக்குநர் முருகசாமி மிக எளிமையான பின்புலம் கொண்டவர். மறைந்த நடிகர் மயில்சாமி உடன் இணைந்து ஏராளமான தொண்டுகளை செய்திருக்கிறார். எளிமையாக பழகக்கூடிய முருகசாமி இயக்குநராக உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அருண்குமாரை மனதார பாராட்டுகிறேன்.
இந்தப் படத்தை எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து இயக்கியிருக்கிறார். அதில் வீரியம் இருக்கும். இது தான் இப்படத்தின் பலம். இப்படத்தின் திரைக்கதையும் நன்றாக அமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை லிசி ஆண்டனி பேசுகையில், ''சுயவிருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத் தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான்பார்த்தேன்.
இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்திற்கு 'குயிலி' என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார். இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், 'சத்தீஸ்கர் நிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
இந்தகால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக
#AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்
சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நூறு கோடி... இருநூறு கோடி... ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக பயணிக்கத் தொடங்கி, ' ஜவான்' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்யேக முத்திரையை பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்த 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் அதிரடி ஆக்சன் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்து தனித்துவமான நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார்.
சர்வதேச திரையுலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் #AA22xA6 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி, இந்திய திரையுலகில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிர்வை ஏற்படுத்தியது. அத்துடன் படத்தை பற்றிய புது தகவல்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலமான நடிகை தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுனின் காந்தம் போல் இழுக்கும் திரை தோற்றம் - பிரம்மாண்டத்தின் சர்வதேச அடையாளமாகத் திகழும் இயக்குநர் அட்லீ மற்றும் வெற்றிகளை தொடர்ச்சியாக வழங்கி, தனித்துவமான தயாரிப்பு நிறுவனம் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் சன் பிக்சர்ஸ் - இவர்களுடன் திறமையான நடிப்பாலும், வசீகரமான தோற்றத்தாலும் ரசிகர்களை வசப்படுத்தியிருக்கும் தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார். இதனால் இந்த படம் சர்வதேச அளவிலான திரையுலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தப் படத்தில் ஏற்கனவே சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார். படக் குழுவினர் வெளியிட்டிருக்கும் இந்த புது தகவலால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய அப்டேட்டுகள் இனி தொடர்ந்து வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருப்பதால்.. ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'
VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு அகமத்
இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளார்..
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது. பெரும் பொருட் செலவில் vj Combines நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!
தொல். திருமாவளவன் பாராட்டு
E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
வரும் ஜூன்-5 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் சிறப்பு திரையிடல் காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று பார்த்தார்..
படம் பார்த்துவிட்டு தொல். திருமாவளவன் பேசும்போது, “பேரன்பும் பெருங்கோபமும் என்கிற இந்த திரைப்படம் புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகுகிறது. இந்த படம் சாதிய முரண்களை விரிவாக, நுட்பமாக, மிக ஆழமாக பேசுகிறது. சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது காலம் காலமாக நம் சமூகத்தில் இருந்து வருகின்ற ஒன்று. இதனால் ஆணவக் கொலைகள் அவ்வப்போது நடந்திருக்கின்றன. அவ்வாறு சாதி மாறி திருமணம் செய்து கொள்கின்ற ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களை அந்தந்த சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. உறவினர் ஏற்றுக் கொள்வதில்லை. பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை.. அதையும் தாண்டி அவர்களை படுகொலை செய்யும் கலாச்சாரமும் நம்மிடையே வலுவாக இருக்கிறது.
அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களே இங்கே தெய்வங்களாக வணங்கப்படுகின்ற, வழிபாடு செய்யப்படுகிற ஒரு கலாச்சாரமும் நம்மிடையே கலந்து இருக்கிறது. மதுரை வீரன் சாமி கூட, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு அதன் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு வரலாறாக தான் நான் காண்கிறோம். அப்படி தென் மாவட்டங்களில் முத்தாலம்மன் வழிபாடு இன்றைக்கும் இருக்கிறது. இந்த முத்தாலம்மன் என்கிற தெய்வம் சாதி அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் வரலாறாக தான் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது. அந்த கருப்பொருளை மையமாக வைத்து இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கி இருக்கும் பேரன்பும் பெருங்கோபமும் என்கிற இந்த திரைப்படம் புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகுகிறது. ஆழமான கருத்துக்களை விவாதமாக்கி இருக்கிறார். சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிறார். இயக்குநர் சிவப்பிரகாஷ் கையாண்டிருக்கும் யுக்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது. ஆழமாக சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கிறது. சாதி பிறப்பால் வருவதில்லை வளர்ப்பால் வருகிறது என்பதை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ என்கிற திரைப்படம் வெளிவந்தது. உயர்ந்த கல்வி பெற்ற குடும்பத்தில் பிறக்கும் பிள்ளை மிக சாதாரண குடும்பத்தில் வளரும். சாதாரண குடும்பத்தில் பிறந்த பிள்ளை செல்வந்தர் குடும்பத்திலே வளரும். சாதாரண குடும்பத்திலே பிறந்த பிள்ளைக்கு அந்த சாதி புத்தி இருக்கும் அல்லது உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பிள்ளைக்கு உயர்ந்த புத்தி இருக்கும் என அப்படி ஒரு வரையறையே இல்லை, அது வளர்ப்பின் அடிப்படையில் தான் அமையும் என்பதை அப்போதே அந்த படம் சொல்லி இருக்கிறது.
அதை இன்றைக்கு வேறு ஒரு கோணத்தில் எந்த சாதியிலே பிறந்தாலும், அந்த குழந்தை வளர்ப்பின் அடிப்படையில் தான் தனது பண்பு நலன்களை பரிணாமம் செய்து கொள்கிறது, அந்த அடிப்படையில் தான் வளர்ந்து இயங்குகிறது என்பதை இந்த திரைப்படம் மிக அழகாக விவரிக்கிறது, பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பக் கூடிய வகையில் இந்த திரைப்படம் பேசுகிறது. சாதி மாறி பிள்ளைகளை வளர்த்தால் கூட அந்த வளர்ப்பின் அடிப்படையில் தான் அவர்கள் குணம் இருக்குமே தவிர குருதி அடிப்படையில், ஜீன் அடிப்படையில் சாதிப் பண்பு என்பது தொடர்வதற்கு வாய்ப்பு இல்லை. அறிவு சம்பந்தமான, ஆற்றல் சம்பந்தமான வேறு பண்பு நலன்கள் குருதி வழியே தலைமுறைக்கு தலைமுறை புலம்பெயர்வதுண்டு. பரிணாமத்தில் அது இடம் பெயர்வதுண்டு. ஆனால் சாதி என்பது இடையிலே நாம் ஒரு சமூக கட்டமைப்பில் மேல் கட்டுமானமாக வளர்த்திருப்பதால், ஒரு கலாச்சாரமாக வளர்த்திருப்பதால் அது குருதி வழியே போகாது, இந்த சாதியை நாம் கட்டிக் காப்பாற்ற கூடாது, அது அழித்தொழிக்க வேண்டிய ஒன்று, அது சமூக மேம்பாட்டுக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது, ஆகவே சாதிய முரண்களை நாம் விரிவாக விவாதிப்போம், அதை களைந்து எறிய அல்லது அழித்தொழிக்க சொல்லுகிற ஒரு திரைப்படமாகத்தான் பேரன்பும் பெருங்கோபமும் என்கிற திரைப்படம் திரைக்கு வருகிறது.
விஜித் பச்சான் முதல் படத்தில் நடிக்கிறார் என்கிற எண்ணமே ஏற்படாத அளவுக்கு மிக இயல்பாக சிறப்பாக நடித்து இருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் வெளி வருகின்ற அதே ஜூன் 5ஆம் தேதியில் தம்பி விஜித்தின் திரைப்படம் வருகிறது. அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படம் என்னை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. நான் நீண்ட காலமாக பேசி வருகின்ற அரசியலை இரண்டு மணி நேரத்தில் சொல்லுகிற ஒரு திரைப்படமாக இதை சிவப்பிரகாஷ் இயக்கி இருக்கிறார். அதைவிட முக்கியமாக அண்ணன் தங்கர் பச்சான் அவர்களின் மைந்தர் விஜித் பச்சான் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பது சாலப் பொருத்தமானது. அவர் எழுப்புகின்ற கேள்விகள் ஒவ்வொன்றும் சாதியவாதிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிந்திக்க தூண்டும். சாதி வேண்டாம் என எண்ண தோன்றும். அத்தகைய காட்சிகள் இந்த படத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. வசனங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் ஆழமாக பதியக் கூடியவையாக இருக்கின்றன. மிகப்பெரிய விவாதத்தை எழுப்பக்கூடிய திரைப்படமாக இந்த படம் அமையும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.
இயக்குநர் சிவப்பிரகாஷ், தம்பி விஜித் ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். நாயகி ஷாலியும் தனது பாத்திரத்தை மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் பாராட்டும் அதே வேளையில் இந்த திரைப்படத்தின் உயிரோட்டமாக இருப்பது இசைஞானி இளையராஜா அவர்களின் இசை. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் உயிர்ப்பை தருகிறது. உயிரோட்டத்தை தருகிறது. அந்த இசையே இந்த படத்தை வெகு மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் என்று நான் பெரிதும் நம்புகிறேன். தமிழ் சமூகத்தில் ஜனநாயக சக்திகளாக இருக்கும் அனைவரும், சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று நம்புகிற புரட்சிகரமான முற்போக்கான சிந்தனை உள்ள ஒவ்வொருவரும் வரவேற்று ஆதரிக்க வேண்டிய திரைப்படம் இது. கட்டாயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். ஒரு முறையாவது திரையரங்குக்கு சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
இயக்குநர் சிவப்பிரகாஷ் பாலு மகேந்திராவின் மாணவர் என்பதால் அவருடைய சாயல்கள் ஆங்காங்கே இந்த படத்தில் வெளிப்படுகின்றன. நல்ல அருமையான காட்சிகளை பதிவு செய்து இருக்கிறார். விறுவிறுப்பான ஒரு கதை என்றாலும் கூட ரம்யமான காட்சிகளையும் இதில் இணைத்து இந்த திரைப்படத்தை எழிலூட்டி இருக்கிறார். கதைக்கரு மிகவும் வலுவானது. ஆழமானது. அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது. ஆணவக் கொலை தொடர்பான பல படைப்புகளை பலரும் படைத்திருக்கிறார்கள். ஆனால் இதிலே ஒரு புதிய யுத்தியை இயக்குனர் கையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இது விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கதை சொல்லியாக பாவா செல்லத்துரை மற்றும் இன்னும் சில முக்கிய பாத்திரங்களும் இந்த படத்தில் இருப்பது இந்த படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தம்பி விஜித் பச்சான்!
இதுபோன்று இன்னும் பல படைப்புகளை தமிழ் சமூகத்திற்கு அவர் வழங்குவார் என்று நான் பெரிதும் நம்புகிறேன். தங்கர் பச்சானின் படைப்பு தான் விஜித் பச்சான். அவரைப் போல ஒரு புரட்சிகரமான பார்வை அவரிடத்திலே இருப்பதை பார்க்க முடிகிறது. இது போன்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதும், அந்த வசனங்களை பேசுவதும், கருத்தியல் ரீதியாக உடன்பட்டால் மட்டும்தான் முடியும். இயக்குநர் சிவப்பிரகாஷ் என்ன சிந்தித்திருக்கிறாரோ அதை அப்படியே அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஜனநாயக சக்திகள் அனைத்தும் இதனை வரவேற்க வேண்டும். திரையரங்குகளுக்கு சென்று இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற 'அக்யூஸ்ட்' இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், "அக்யூஸ்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்திருக்கும் திரையுலக முன்னணியினர், ஊடக நண்பர்கள், மற்றும் படக்குழுவினரை வரவேற்கிறேன். இந்த படம் நல்லபடியாக நிறைவடைந்ததற்கும் இன்றைய நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் உதயா தான் முக்கிய காரணம். திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி," என்றார்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பேசுகையில், "உதயாவின் தந்தை ஏ.எல். அழகப்பன் அவர்களும் நானும் நீண்டகால நண்பர்கள். எனவே உதயாவை எனக்கு சிறுவயது முதலே தெரியும். திரையுலகில் நீண்ட காலமாக போராடி வருகிறார். 'அக்யூஸ்ட்' காட்சிகள் பார்த்தேன், உதயாவின் திறமை பளிச்சிடுகிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இப்படம் உதயாவின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக திகழும். படக்குழிவினருக்கு வாழ்த்துகள்," என்றார்.
'அக்யூஸ்ட்' படத்தில் நடித்துள்ள பவன், பிரபாகர், ஓ மரியா புகழ் டானி, சுபத்ரா, தீபா பாஸ்கர் ஆகியோர் பேசுகையில் இப்படத்தில் பங்காற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, அனைவரின் ஒத்துழைப்போடு 'அக்யூஸ்ட்' மிகவும் சிறப்பாக உருவாகியிருப்பதாக கூறினர். படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல பழகியதாக அவர்கள் தெரிவித்தனர்.
'அக்யூஸ்ட்' படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பேசுகையில், "திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கு இருக்கிறீர்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காக தள்ளி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தனர்.
படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களை கவரும், நன்றி," என்றார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ மற்றும் கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசுகையில் படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், "என் குழுவில் பணியாற்றிய அனைத்து இசை மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்துள்ள அனைவரும் பாடலை பாராட்டினார்கள். அதற்கு முக்கிய காரணம் எனது குழுவினர் தான். 'அக்யூஸ்ட்' படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம். எனவே உங்கள் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் மிகவும் எளிமையானவர்கள், இயக்குநர் நட்பானவர், உதயா மிகவும் இனியவர். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி, வணக்கம்," என்றார்.
வீடியோ அழைப்பில் பேசிய நடிகர் யோகி பாபு, "வேறொரு இடத்தில் இரவு படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நான் பணியாற்றியது சிறப்பான அனுபவம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்," என்றார்.
பாடலாசிரியர் பத்மஜா ஸ்ரீராம் பேசுகையில், "இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் மிகுந்த சுதந்திரம் அளிப்பார். இப்படத்தில் பணியாற்றியது ஒரு மிக நல்ல அனுபவம். குழுவினர் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள், கடவுளுக்கு நன்றி," என்றார்.
பாடலாசிரியர் ஹைட் கார்த்தி பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். நரேன் பாலகுமாரும் நானும் நீண்ட நாளாக ஒன்றாக பணியாற்றி வருகிறோம். இப்படத்தில் சுடச்சுட பிரியாணி என்ற பாடலை நான் எழுதியுள்ளேன், அதற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி. இந்த பாடலுக்கு நான் நடனமும் ஆடியுள்ளேன். டிரெய்லர் பார்க்கும் போதே 'அக்யூஸ்ட்' பெரிய ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்," என்றார்.
அடுத்ததாக, தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் அழகன் தமிழ்மணி, செந்தாமரை கண்ணன், ஜெயசீலன், ஜி.எஸ். முரளி, ராமச்சந்திரன், அன்பு, சுரேஷ், சாலை சகாதேவன், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், "உதயா அவர்களின் குடும்பத்தில் ஒருவன் நான். அவர், அவரது தந்தை ஏ.எல். அழகப்பன் சார், சகோதரர் விஜய் ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கம். உதயா சாரின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது. எனவே, 'அக்யூஸ்ட்' மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை," என்றார்.
நடிகை ஜான்விகா பேசுகையில், "என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் உதயா சாருக்கு நன்றி. சிறப்பான பாடல்களை தந்துள்ள இசையமைப்பாளருக்கு நன்றி. திறமைகளுக்கு தவறாமல் ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் எனக்கும் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன். 'அக்யூஸ்ட்' படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன், விரைவில் முழுவதும் தமிழில் பேசுவேன்," என்றார்.
நடிகர் அஜ்மல் பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பிரபுவுக்கு நன்றி. நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும்," என்றார்.
இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் பேசுகையில், "கஷ்டப்பட்ட அனைவரும் வெற்றி பெற்றதில்லை, ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தவர்களே. உண்மையாக, நேர்மையாக கஷ்டப்பட்டால் நிச்சயம் வெல்லலாம், அப்படிப்பட்ட குழு இது, அனைவரும் மிகவும் திறமையானவர்கள். இவர்கள் வெற்றியடைந்தால் சினிமா மேலும் வெற்றி பெறும். 'அக்யூஸ்ட்' வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.
நடிகர் ஆனந்த்பாபு பேசுகையில், "எல்லோருக்கும் வணக்கம். உதயா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஏ.எல். அழகப்பன் எனது தந்தையை போன்றவர். உதயாவின் 25வது ஆண்டு படமான 'அக்யூஸ்ட்' வெற்றி விழா கொண்டாடும், நன்றி," என்றார்.
பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், "அக்யூஸ்ட் படவிழாவின் அழைப்பிதழே அருமை, உதயாவின் உழைப்பு அதிலேயே தெரிகிறது. அவருக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் உதயா மீதும் அவரது தந்தையார் மீதும் நாம் வைத்துள்ள அன்பு தான். உதயாவை எந்த அவமானமும் பாதிக்காது, சிரித்த முகத்துடன் இருப்பார். விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பேசுகையில், "இந்தப் படம் எப்படி தொடங்கியது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கஷ்டப்பட்டு இதை கட்டமைத்த சகோதரர் உதயாவுக்கு பாராட்டுகள். செல்வமணி சார் சொன்னது போல உதயாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது, இதை அவர் பிடித்துக்கொள்ள வேண்டும். திறமையான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது, டிரெய்லரும் பாடல்களும் அருமை. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.
தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசுகையில், "எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக நின்றாலும், அவர்களின் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். உதயா அவரது உழைப்பு மூலம் சொக்கத்தங்கமாக ஜொலிக்கிறார். அவரது தாயார் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், அதே மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி," என்றார்.
நடிகர் உதயா பேசுகையில், "எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
'அக்யூஸ்ட்' படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக 'அக்யூஸ்ட்' படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தையும், ஆதரவையும் கோருகிறேன்," என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா