சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!
Updated on : 14 August 2025

VERUS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சை-ஃபை கிரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.



 



சூரியபிரதாப் இயக்கும் இந்த படத்தில், கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட் நட்சத்திரம் அபர்ஷக்தி குரானா தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ஹிந்தி சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர், இப்போது தமிழ் ரசிகர்களையும் கவர்வார் என்ற நம்பிக்கை குழுவினருக்கு உள்ளது.



 



முக்கிய காட்சிகள் இடம்பெற்ற இந்த முதல் கட்டப் படப்பிடிப்பில், இரு முன்னணி நடிகர்களின் பங்களிப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் உணர்ச்சி நிறைந்த கதையையும்,நேரத்துடன் போட்டியிடும் சை-ஃபை த்ரில்லர்கான விறுவிறுப்பையும் ஒருங்கே தரவுள்ளது.



 



இந்த படத்தில் பாவ்யா திரிகா நாயகியாகவும், மூத்த நடிகர் வை.ஜி. மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.



 



தயாரிப்பாளர்கள்: தனிஷ்டன் பெர்னாண்டோ, ராஜராஜன் கனனசம்பந்தம், சஞ்சய் சங்கர், ஷைக் முஜீப் – VERUS புரொடக்ஷன்ஸ்.



 



இயக்குனர் சூரியபிரதாப் எஸ் கூறுகையில்:



"முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழுவிற்கு உற்சாகமான அனுபவமாக இருந்தது. கௌதம் – அபர்ஷக்தி இணைந்து தோன்றும் காட்சிகள் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். சென்னை நகரின் பரபரப்பான பின்னணி இந்த படத்துக்கு கூடுதல் விறுவிறுப்பை சேர்த்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்றார்.



 



அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் மேலும் அதிரடி காட்சிகளும், ரசிகர்களுக்கான பல அசத்தலான ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா