சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு
Updated on : 20 January 2026

இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் கிராமியப் பின்னணியிலான கமர்சியல் திரைப்படமான ‘அறுவடை’ படத்தின் படப்பிடிப்பு, அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் நாளில் கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.



 



இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக இயக்குநர் எம். கார்த்திகேசன் நடித்துள்ளதுடன், அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



 



படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ரகு ஸ்ரவண் குமார், இசையமைப்பாளராக ஆனந்த், படத்தொகுப்பாளராக கே. கே. விக்னேஷ் பணியாற்றியுள்ளனர். பாடல்களை கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன் மற்றும் கானா சக்தி எழுதியுள்ளனர்.



 



கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை, எம். கே. ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரித்து வருகிறார்.



 



‘அறுவடை’ திரைப்படத்தின் சார்பில் கோயம்புத்தூரில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறையில் உற்சாகமாகக் கொண்டாடியதுடன், அதே நாளில் படப்பிடிப்பையும் முழுமையாக நிறைவு செய்துள்ளனர். அறுவடைத் திருநாளில் படப்பிடிப்பு முடிவடைந்தது, படக்குழுவினருக்கு ஒரு நல்ல தொடக்கத்தின் அடையாளமாகவும், படத்தின் வெற்றிக்கான நல்ல முன்னறிவிப்பாகவும் கருதப்படுகிறது.



 



கிராமிய மணம் கமழும் கதை, வணிக அம்சங்கள் மற்றும் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் இணைந்து உருவாகும் ‘அறுவடை’ திரைப்படம், ரசிகர்களிடையே தற்போதே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.



 



படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 



'' ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை,  மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம்.  விரைவில் படத்தை வெளியிட உள்ளோம் " என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா