சற்று முன்

'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |   

சினிமா செய்திகள்

‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்
Updated on : 01 February 2026

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள “வித் லவ் (With Love)” திரைப்படம், 2026 பிப்ரவரி 6-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக மற்றும் பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.



 



இந்நிகழ்வினில்.., 



உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது..,  



இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பம் போல இருந்த குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



 



எடிட்டர் சுரேஷ் பேசியதாவது..,



வித் லவ் படத்தில் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது மதன், வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. படம் அருமையாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி



 



ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா பேசியதாவது…,  



இப்படத்தின் கதையை மிக அழகாக ஸொன மதனுக்கு நன்றி. கதை சொன்னபோது மறுக்கவே தோணவில்லை. திரையிலும் மிக அழகாக வந்துள்ளது. தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம், மகேஷ் இருவருக்கும் நன்றிகள். அபிஷந்த், அனஸ்வரா, மற்றும் நடிகர் குழுவிற்கு நன்றி. படத்தை எடுக்கும் போது ஸ்கூல் நினைவுகள் எல்லாம் வந்தது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.



 



நடிகர் ஹரீஷ் பேசியதாவது…,  



எனக்கு மதன் ரொம்ப நாளா தெரியும். அபிஷந்தும் நானும் முன்னாடியே ஒன்றாக வேலை செய்துள்ளோம்.  மதன் எனக்கு கால் பண்ணி இந்த கதை சொல்லிட்டு, *“அபிஷந்த் இதில் நடிக்கிறார்”*னு சொன்னதுமே…எனக்கு சொல்ல வார்த்தையே கிடைக்கல. ரொம்ப சந்தோஷமா இருந்தது. மதன் எனக்கு கொடுத்த ரோல் உண்மையிலேயே சூப்பராக  இருந்தது. இந்த படத்தில் நான் நடித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படக்குழுவிற்கும், மதனுக்கு, மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேம் – எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நீங்க எங்களுக்கு கொடுத்த சப்போர்ட்  எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. அனைவருக்கும் நன்றி. 



 



நடிகர் சச்சின் பேசியதாவது..



ஹரி சொன்ன மாதிரி, இந்த படம் ஒரு குடும்ப படம்  மாதிரி தான். ஷூட்டிங்க்கு போற மாதிரி இல்லாம, தினமும் காலைல சுற்றுலாவுக்கு போற மாதிரி ஃபீல் இருந்தது. மதன் உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டே வேலை செய்வார்.மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேடம்  எல்லா சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெரிய ஆதரவாக இருந்ததற்கு நன்றி.  ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் கொண்டாடியதை,  திரையரங்கில் நீங்களும் கொண்டாடுவீர்கள் எண நம்புகிறேன். என் உடன் நடித்த நடிகர்கள், பிரியா உட்பட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.  இந்த படத்தை பார்க்கும்போது ஒரு பாஸிடிவ் எனர்ஜி  உங்களுக்கும் வந்து சேரும். நன்றி



 



நடிகை காவ்யா பேசியதாவது..,



இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள், மிக முக்கியமான தருணம். இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி.  இந்த வாய்ப்பை வழங்கிய மதன், தயாரிப்பாளர்கள் மகேஷ் அண்ணா,  சௌந்தர்யா மேடம் ஆகியோருக்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த அபிஷந்த், அனஸ்வரா, சச்சின், ஹரிஅனைவருக்கும் என் நன்றிகள். கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.



 



பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது



மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சௌந்தர்யா மேடம் பாடல் எல்லாம் நன்றாக வந்துள்ளது என சொன்னார்கள். நன்றி. அபி முதன் முதலில் டூரிஸ்ட் ஃபேமிலி படக்கதை சொன்ன போதே வியந்தேன் அவர் சீக்கிரமே ஹீரோவாக மாறுவார் என நினைத்தேன் ஆனல் அடுத்த படத்திலேயே ஆகிவிட்டார். மதனை டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும். அவர் ரசனையும் என் ரசனையும் ஒன்றாக இருக்கும். இப்படத்தில் உமா தேவி ஒரு பாடல் எழுதியுள்ளார் அதுவும் நன்றாக வந்திருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் எனக்கு ஷான் ரோல்டன் இசையில் அற்புதமான பாடல்கள் அமைந்துள்ளது அவருடன் மீண்டும் மீண்டும் வேலை பார்க்க ஆசைப்படுகிறேன். அனஸ்வரா படம் பார்க்கும் எல்லோரும் எனக்கும் இப்படி பெண் கிடைத்தாள் எப்படி இருக்கும் என நினைப்பார்கள். அற்புதமாக நடித்திருக்கிறீர்கள். இப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி. 



 



இயக்குநர் தேசிங் பெரியசாமி  பேசியதாவது..,  



சிவாஜி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்தான் தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அப்போது இவர் இப்படியொரு திறமையான, முன்னணி தயாரிப்பாளராக வளர்வார் என்று நான் நினைக்கவே இல்லை”  இப்போது அற்புதமான படங்கள் செய்கிறார். சௌந்தர்யா மேடம் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டுமென, ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். அவரின் அந்த நேர்மை காரணமாகவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்”. இயக்குநர் மதன் அவர்களின் முதல் படம்  போலவே தெரியவில்லை. மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அபிஷந்த் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய ஹீரோவாக வருவார். அனஸ்வரா ராஜன்  மிக அருமையாக நடித்துள்ளார் . ஷான் ரோல்டன் மிக அழகான இசையைத் தந்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 



 



இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது..,  



வித் லவ் ஒரு பக்காவன ஹிட் திரைப்படம். அபிஷந்த் அனஸ்வரா ஜோடி, மிகவும் க்யூட்டாக இருக்கிறது. காவ்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தப் படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. அவரது முதல் படம் போலவே தெரியவில்லை. எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த திரைப்படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



 



இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாவது..,



படம் பார்த்துவிட்டேன் மிக அருமையாக உள்ளது. சௌந்தர்யா மேடம் பெரிய ஹீரோவை வைத்து இப்படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்த புது டீமை நம்பி தயாரித்துள்ளார்.   தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் என்னிடம் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் அவரிடம், “படம் அருமையாக இருக்கிறது; பணம் மழையாகப் பொழியப் போகிறது” என்று சொன்னேன். அதை கேட்ட உடனே தயாரிப்பாளர் கனவு காண ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் மதன் மிகவும் நம்பிக்கை தரும் இயக்குநராக இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையிலான படமாக இது இருக்கும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள். 



 



தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,



ஒரு உண்மையான சினிமா ரசிகனுக்கு, படம் மூலம் கிடைக்கும் பணத்தை விட, ஒரு நல்ல படத்தை பார்த்த பிறகு மனதில் உருவாகும் திருப்திதான் பெரியது. அந்த படத்தை பார்த்து, அதை மனதில் அசைபோட்டு யோசிக்கும் ஒரு நிறைவு கிடைக்கும். அந்த உணர்வை நான் சிறை படத்தை பார்த்த பிறகு அனுபவித்தேன். அதே உணர்வு வித் லவ் படத்தை பார்த்த பிறகும் மீண்டும் கிடைத்தது. தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். மகேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் வெற்றி பெறும்போதுதான், மேலும் மேலும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே, இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். தயாரிப்பாளர் சௌந்தர்யா மேடமுக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 



 



நடிகர் மணிகண்டன் பேசியதாவது..,



நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்ன சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங்—எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டை கெடுக்காமல் மிக அழகாக இணைந்திருந்தது இந்தப் படத்தோட பெரிய பலம். அபிஷந்த் நடிப்பு , அனஸ்வராவின் நடிப்பு, ஜாஃபர் பண்ணிய கேரக்டர், அனிஷா ரோல்—எல்லாமே ரொம்ப பிரமாதம். குறிப்பா ஒரு சீன், இரண்டு நாள் கழிச்சும் மனசை விட்டு போக வில்லை. இயக்குநர் மதன், மோகன் ராஜ் ஐயா, ஷான் ஐயா, புரொட்யூசர்ஸ்—எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிகள் தொடர்ந்து வரட்டும் வரணும். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.



 



இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,



இந்தப் படத்தில் பணியாற்றிய ஒருவராகச் சொல்கிறேன், இந்த படம் பல காரணங்களுக்காக எனக்கு மிகவும் நெருக்கமானது. டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் கதையை முதலில் அபிஷன் சொல்ல வந்த போது, கொஞ்சம் தயக்கமாக இருந்தார். ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும், அவர் ஒரு புதிய ஆளாக மாறிவிட்டார். ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார். கண்டிப்பாக ஒரு நடிகராக அவர் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார். ஒரு பெண் கதாபாத்திரத்திற்காக நான் விசில் அடிப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் அனஸ்வராவின் நடிப்பு என்னை அவரின் ரசிகனாக மாற்றிவிட்டது. எனக்கு ரொம்-காம் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் இவ்வளவு ஆழமான விஷயத்தை பேசிக்கொண்டே, அதே நேரத்தில் லேசான, ரசிக்கத்தக்க எண்டர்டெய்னராக உருவான ஒரு ரோம்-காம் படமாக இப்படம்  இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் மிக அருமையாக வந்துள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், ரஜினி சார்க்கு மகளாக  இருப்பது அத்தனை எளிதல்ல. அவருக்கு எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. சினிமா துறையில் எனக்கு கிடைத்த ஒரு உண்மையான நண்பர் அவர். அவருக்கு என் நன்றி. இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.



 



இயக்குநர் மதன் பேசியதாவது..,



இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற முழு உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி  படத்தில் பணியாற்றினேன். அப்போது அவர் அந்தப் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக் கதையை வாசித்தார். கதையைப் படித்த பிறகு, ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார். நான் அவரிடம் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு… ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம்… ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட்ஃபேமிலி   படம் வெளியானது, அதன்பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. .ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவை சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்த கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே’ என்று கூறினேன். அதற்கு பாலா, ‘நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன்’ என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார். ஆனால், ‘முதலில் மதனுக்கு  ஓகேவா  கேளுங்க’ என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவை சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்க கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், ‘இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன்’ என்று கூறினார்.அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘இந்தப் படத்தை நாம பண்ணலாம்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பரபரப்பாக ஆரம்பித்தோம், ஒரே வேகத்தில் படம் முடிந்துவிட்டது. எல்லோரது உழைப்பு தான் காரணம். மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை உடனே படம் செய்யுங்கள் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். அனஸ்வரா மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.



 



நடிகை அனஸ்வரா ராஜன் பேசியதாவது..,  



“என் முழு குழுவிற்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மதன் என்னிடம் கதை சொல்ல வரும் போது, ஒரு காட்சியை படமாக்கி காட்டினார் அது எனக்கு மிகவும் பிடித்தது உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர். காவ்யா உங்களை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மனதார காதலிப்பார்கள்.இந்த குழு என்னை நிறைய சிரிக்க வைத்தது. இந்த சினிமா துறையும், இந்த நகரமும் எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கக் காரணமாக இருந்தது இந்த அனுபவம் தான். சௌந்தர்யா மேடம் எனக்கு ஒரு பெரிய அக்கா போல அன்பும் ஆதரவையும் வழங்கினார்.



 



மதன் நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் க்யூட்டானவர். அதே சமயம், அவர் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவர், எனக்கு அவர் தந்த மோனிஷா பாத்திரம் ரொம்பவே பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. மோனிஷா, சத்யா  இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் வேலை செய்ததற்குக் காரணம், திரைக்கு வெளியே  நடிகர் அபிஷந்த் உடன் எனக்கு இருந்த நட்பு தான். மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்த அபிஷந்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. வித் லவ் பிப்ரவரி 6 ஆம் தேதி வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் பேசியதாவது..,  



“8 மாதங்களுக்கு பிறகு மீடியாவை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதை பிப்ரவரி 6-ஆம் தேதி மக்களிடம் கொண்டு செல்கிறோம். மக்கள் இந்தப் படத்தை ஆதரித்து, பாதுகாப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கி<

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா