சற்று முன்

மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |   

சினிமா செய்திகள்

இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!
Updated on : 09 February 2026

இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரில்லர் திரைப்படமான "கென்னடி" யின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து, விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இந்த திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்திய பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.



 



மும்பையை பின்னணியாகக் கொண்டு, அனுராக் காஷ்யப்பின் முத்திரை பதிந்த நாயர் (Neo-Noir) பாணியில் உருவாகியுள்ள இந்த படம், முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறும் கென்னடி உதய் ஷெட்டியின் இரட்டை வாழ்க்கையை மையமாகக் கொண்டது. பகலில் டாக்சி ஓட்டுநராக எளிய வாழ்க்கை நடத்தும் கென்னடி, மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கான்க்காக ஆபத்தான கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுகிறார்.



 



தனது மகன் இழப்பால் உண்டான மனவேதனை, சிதைந்த குடும்பத்தின் நினைவுகள், கடந்த காலத்தின் நிழல்கள் ஆகியவை கென்னடியை இடையறாது துரத்துகின்றன. வன்முறையும், ஊழலும் நிரம்பிய நகரத்தில், தன்னையே தேடும் ஒரு மனிதனின் உள் பயணமே இப்படத்தின் முக்கிய கருவாக அமைந்துள்ளது.



 



படத்தில் ராகுல் பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திரங்கள் கென்னடியின் இருண்ட உலகத்திற்கு பல்வேறு அடுக்குகளை சேர்க்கின்றன.



 



கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்பும் போராட்டம் ஆகிய உணர்வுகளை தீவிரமாக வெளிப்படுத்துகிறது. வெடிப்புகள், சதி வலையங்கள், அதிகார அரசியல் என அபாயகரமான சூழலில் சிக்கிக் கொள்ளும் கென்னடி, உண்மை, பழிவாங்கல் மற்றும் இறுதிக்கட்ட மீட்பை நோக்கி வன்முறையுடன் பயணிக்கிறார்.



 



ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள் மற்றும் அனுராக் காஷ்யப்பின் தனித்துவமான கதை சொல்லும் பாணி ஆகியவை இணைந்து, தனிமை, நீதி மற்றும் சமரசமற்ற முடிவுகளின் விலையை ஆராயும் ஒரு தீவிரமான திரையனுபவமாக ‘கென்னடி’ உருவாகியுள்ளது.



 



படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,



“கென்னடி" நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை   உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”



 



நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,



“கென்னடி பாத்திரத்தில்  நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும்  நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”



 



சன்னி லியோன் கூறியதாவது..,



“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”



 



20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா