சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!
Updated on : 09 February 2026

இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரில்லர் திரைப்படமான "கென்னடி" யின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து, விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இந்த திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்திய பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.



 



மும்பையை பின்னணியாகக் கொண்டு, அனுராக் காஷ்யப்பின் முத்திரை பதிந்த நாயர் (Neo-Noir) பாணியில் உருவாகியுள்ள இந்த படம், முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறும் கென்னடி உதய் ஷெட்டியின் இரட்டை வாழ்க்கையை மையமாகக் கொண்டது. பகலில் டாக்சி ஓட்டுநராக எளிய வாழ்க்கை நடத்தும் கென்னடி, மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கான்க்காக ஆபத்தான கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுகிறார்.



 



தனது மகன் இழப்பால் உண்டான மனவேதனை, சிதைந்த குடும்பத்தின் நினைவுகள், கடந்த காலத்தின் நிழல்கள் ஆகியவை கென்னடியை இடையறாது துரத்துகின்றன. வன்முறையும், ஊழலும் நிரம்பிய நகரத்தில், தன்னையே தேடும் ஒரு மனிதனின் உள் பயணமே இப்படத்தின் முக்கிய கருவாக அமைந்துள்ளது.



 



படத்தில் ராகுல் பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திரங்கள் கென்னடியின் இருண்ட உலகத்திற்கு பல்வேறு அடுக்குகளை சேர்க்கின்றன.



 



கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்பும் போராட்டம் ஆகிய உணர்வுகளை தீவிரமாக வெளிப்படுத்துகிறது. வெடிப்புகள், சதி வலையங்கள், அதிகார அரசியல் என அபாயகரமான சூழலில் சிக்கிக் கொள்ளும் கென்னடி, உண்மை, பழிவாங்கல் மற்றும் இறுதிக்கட்ட மீட்பை நோக்கி வன்முறையுடன் பயணிக்கிறார்.



 



ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள் மற்றும் அனுராக் காஷ்யப்பின் தனித்துவமான கதை சொல்லும் பாணி ஆகியவை இணைந்து, தனிமை, நீதி மற்றும் சமரசமற்ற முடிவுகளின் விலையை ஆராயும் ஒரு தீவிரமான திரையனுபவமாக ‘கென்னடி’ உருவாகியுள்ளது.



 



படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,



“கென்னடி" நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை   உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”



 



நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,



“கென்னடி பாத்திரத்தில்  நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும்  நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”



 



சன்னி லியோன் கூறியதாவது..,



“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”



 



20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா