சற்று முன்
சினிமா செய்திகள்
கோப்பெருந்தேவி பேய் வருது
Updated on : 12 May 2015
பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா! ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு போ… மனசு நிறைய சந்தோஷத்தோடு வா’ என்கிற அளவுக்கு காமெடி பேய்களை மட்டும் விழுந்துவிழுந்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். காஞ்சனா 2 ன் கலெக்ஷனை கேட்டால், ஆவியுலகமே ஸ்தம்பிக்கிற அளவுக்கு இருக்கிறது! ஒரு கோடி பணம் போட்டவர்களுக்கெல்லாம் நாலு மடங்கு ரிட்டர்ன் என்கிறார்கள் புள்ளிவிபர புலிகள்.
இந்த நேரத்தில்தான் காஞ்சனா 1 ல் நடித்தவர்களையும், காஞ்சனா 2 ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற அரண்மனை படத்தில் நடித்தவர்களையும் தேடி தேடி பிடித்துப் போட்டு ‘கோப்பெருந்தேவி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் பழனிச்சாமி. கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிறாடை மூர்த்தி, வடிவுக்கரசி என்று நீண்டு கொண்டே போகிறது நட்சத்திர கூட்டம்.
காமெடி, த்ரில், ஹிஸ்டாரிக்கல், என்று சிரிக்கவும் அதிரவும் காதலிக்கவும் கவலைப்படவும் வைப்பது மாதிரி ஏகப்பட்ட வர்ணங்களை குழைத்திருக்கிறாராம் சங்கர் பழனிச்சாமி. தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய புண்ணியவானும் இவர்தான். கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கு. அதுக்காகவே இந்த படத் தயாரிப்புக்கு ரெண்டு வருஷம் எடுத்துகிட்டேன் என்கிறார். ஆராத்யா என்றொரு அட்டகாசமான லெக் பீஸ்சை கேரளாவிலிருந்து இறக்கியிருக்கிறார்கள். ஆரம்பகால நயன்தாராவை பார்த்த மாதிரியே இருக்கிறார் இவரும். படத்தில் இவர்தான் பேய்.
காஞ்சனா2 ன் வெற்றி ஆந்திராவிலும் தொடர்வதால், கோப்பெருந்தேவிக்கு தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் செம கிராக்கி. துட்டோடு கிளம்பி வரும் விநியோகஸ்தர்கள் துண்டு போட்டு இடம் பிடிக்கிற அளவுக்கு ஆர்வம் காட்டுவதால், படம் மே இறுதியில் வெளிவரலாம் என்கிறது கோடம்பாக்கத்து ஆவி.
தியேட்டர்ல ஒரு டிக்கெட்டோட ஒரு மந்திரிச்ச முடிகயிறையும் கொடுத்துட்டாங்கன்னா, ரசிகர்களுக்கு இன்னும் சவுரியமா இருக்கும்!
சமீபத்திய செய்திகள்
“ரங்கஸ்தலத்தை மிஞ்சும் ராம்சரண் நடிப்பு” – ‘பெத்தி’ குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு
மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.
படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.
மேலும், படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டும் இயல்பான கிராமத்து தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்து இளைஞன் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தானாகவே உருவாக்கிய பேட் போல அதனை வடிவமைத்துள்ளார்களாம். அந்த கதாபாத்திரத்தின் நடை, உடல் மொழி உள்ளிட்ட பல நுணுக்கங்களும் அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரே எண்ணத்தில் பணிபுரிந்தால் மட்டுமே திரைப்படம் முழுமையான வடிவம் பெறும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ராம்சரண் குறித்து பேசுகையில், தான் உருவாக்கிய ஒவ்வொரு செட்டையும் ராம்சரண் மிகவும் பாராட்டியதாக அவினாஷ் கூறியுள்ளார். மல்யுத்த அரங்கம், ரயில் அமைப்பு, சிறப்பு பாடல் செட் என அனைத்தையும் அவர் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக “பெத்தி” குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. “இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் சுகுமார் கூட சமீபத்தில், இந்தப் படத்தில் ராம்சரண் நடிப்பு ரங்கஸ்தலம் படத்தை விட அதிகமாக பேசப்படும் என்று கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
துல்கர் சல்மான் நடிக்கும் “ஐ அம் கேம்” – 2026 ஆகஸ்டில் உலகம் முழுவதும் வெளியீடு
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம், தற்போது மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். “RDX” திரைப்பட வெற்றிக்குப் பிறகு அவர் இயக்கும் அடுத்த படமாக இது உருவாகி வருகிறது. மேலும், துல்கர் சல்மான் தனது திரை வாழ்க்கையில் நடித்திருக்கும் 40வது படமாகவும் “ஐ அம் கேம்” அமைகிறது.
இந்த திரைப்படம் குறித்து பேசிய துல்கர் சல்மான், “என் திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படம் இதுதான். கதாபாத்திரமும், படத்தின் உலகமும் மிகவும் நவீனமாகவும், வித்தியாசமான தோற்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படத்தை வடிவமைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Wayfarer Films தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். “லோகா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த முக்கிய படைப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.
பான்-இந்திய அளவில் உருவாகும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ள நிலையில், அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ZEE5-இன் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடர் “வாரண்ட்” டிரெய்லர் வெளியீடு
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ZEE5-இன் புதிய கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” வரும் 22 ஆம் தேதி முதல் OTT தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த தொடரை Sivan Pictures மற்றும் S Studios நிறுவனங்களின் சார்பில், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், P. விஷால், P.M. ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய “விலங்கு” வெப் சீரிஸ் மற்றும் “மாமன்” திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர். இம்முறை அவர் “வாரண்ட்” தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் இணைந்து எழுதியுள்ளனர். மேலும், இந்த தொடரை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், “வாரண்ட்” வெப் தொடரின் டிரெய்லர் அறிமுக விழா சென்னை நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர். டிரெய்லர் வெளியீட்டின் பின்னர், தொடரின் கதை மற்றும் திரைக்காட்சி அமைப்பு குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிகழ்வினில்…
கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..,
புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..,
நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ZEE5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…
“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023-இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’-இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…,
பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகர் கவின் பேசியதாவது…,
பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…,
பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…,
விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…,
தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகை கௌசல்யா பேசியதாவது..,
இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.
நடிகை மீனா பேசியதாவது,
“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.
நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,
“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.
நடிகை சாயாதேவி பேசியதாவது,
“முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார்.
நடிகர் வையாபுரி பேசியதாவது,
“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5-ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி.
நடிகர் அருள்தாஸ் பேசியதாவது ,
“‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது” என்றார். “பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார். “இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது.
“ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.
தயாரிப்பாளர் குமார் பேசியதாவது…
நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்.
நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது..,
ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் ராம்குமார் பேசியதாவது..,
பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது..,
பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.
இந்த தொடரில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ள நிலையில், ஒளிப்பதிவை அசோக் குமார் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் பணிகளை R. ராமர் கவனித்துள்ளார்.
கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக சித்தரிக்கும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“வாரண்ட்” வெப் தொடர் வரும் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா
இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் OTT தளங்களில் ஒன்றான Prime Video India-வில் மே 15 முதல் வெளியாகவுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான ‘EXAM’ வெப் தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து தயாரித்துள்ள இந்த தொடரை, தேசிய விருது பெற்ற இயக்குநர் ஏ சற்குணம் இயக்கியுள்ளார்.
ஏழு அத்தியாயங்களாக உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மர்மம், பதட்டம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘EXAM’ தொடர், ரசிகர்களுக்கு வித்தியாசமான OTT அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி, இயக்குநர் ஏ. சற்குணம், நடிகைகள் துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு தொடரின் உருவாக்க அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், '' நாங்கள் 'வா குவாட்டர் கட்டிங் 'எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான 'களவாணி' திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார். இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, 'பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்' என எடுத்துச் சொன்னோம்
சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம். ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும். 'எக்ஸாம்' தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம் ... ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.
சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது. கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான். 'வதந்தி' தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.
நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.
நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான் என்று சொன்னார்.
இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும். அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார். அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். '' என்றார்.
இயக்குநர் காயத்ரி பேசுகையில், '' அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்... ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்... சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும். நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்... குறிப்புகள் வழங்கினாலும்... மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.
ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம். திறமையான நடிகர்களாக- கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.
இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.
பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், '' சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.
நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்... அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு... ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.
நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து... பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர். இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்... உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.
அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ...ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும். இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்'' என்றார்.
நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், ' இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.
எக்ஸாம் இந்த தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட். புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.
ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால் கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்....ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம்.
நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள். அதுபோன்ற கதை தான் எக்ஸாம்.
இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.
இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி'' என்றார்.
நடிகை அதிதி பாலன் பேசுகையில், '' மரமல்லி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி. மரமல்லி கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்) அடித்துக் கொண்டோம்.
இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின் மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது'' என்றார்.
சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!
Zee Studios மற்றும் Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், திரில்லர் மற்றும் கோர்ட் ரூம் டிராமா கலந்த ஜனரஞ்சக படைப்பாக உருவாகியுள்ளது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், வக்கீல்கள் நிறைந்த நீதிமன்ற சூழலில் சிவப்பு உடையில் தீர்க்கமான பார்வையுடன் திரும்பிப் பார்க்கும் கீர்த்தி சுரேஷின் தோற்றம் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கதையின் மையக்கருவையும், அவரது கதாப்பாத்திரத்தின் தீவிரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை, மகிழ்ச்சியான சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு நகர்கிறது. தனது சீனியர் வழக்கறிஞர் ஒரு வழக்கில் தவறான தரப்புக்கு வாதாடுவதை உணரும் அவர், அதை சுட்டிக்காட்ட முயற்சிக்கிறார். ஆனால் அதன்பிறகு வெளிப்படும் உண்மைகள், அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகின்றன. அந்த சிக்கலிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே படத்தின் பரபரப்பான திரைக்கதை.
திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை வடிவமைத்துள்ளதாக இயக்குநர் பிரவீன் S விஜய் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு எதிரான சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பாலசரவணன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
வித்தியாசமான கோர்ட் ரூம் திரில்லராக உருவாகி வரும் “சத்தியவான் சாவித்திரி”, கீர்த்தி சுரேஷின் மற்றொரு சக்திவாய்ந்த கதாப்பாத்திரமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!
தமிழ் OTT தளங்களில் தரமான மற்றும் வேரூன்றிய கதைகளை தொடர்ந்து வழங்கி வரும் ZEE5 Tamil, தனது புதிய ஒரிஜினல் தொடரான ‘வாரண்ட்’ மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடர், அதிகாரம், சட்டம் மற்றும் மனித மனத்தின் இருண்ட பரிமாணங்களை ஆராயும் விறுவிறுப்பான காவல் துறை நாடகமாக உருவாகியுள்ளது.
இந்த தொடரின் முக்கிய அம்சமாக, ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ், இத்தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகராக அவரது முதல் முயற்சி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடரை புதுமுக இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். இசையை சாம் C.S. அமைத்துள்ள நிலையில், தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வாளராகவும் பிரசாந்த் பாண்டியராஜ் பணியாற்றியுள்ளார்.
மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், அருள் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு கதைக்கு மேலும் நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான அடுக்குகளையும் சேர்க்கும் என கூறப்படுகிறது.
‘வாரண்ட்’ தொடர், சாதாரணமாக தோன்றும் காவல் துறை வழக்குகள் எவ்வாறு ஆபத்தான சூழ்நிலைகளாக மாறுகின்றன என்பதை மையமாகக் கொண்டு நகர்கிறது. இதில், “கோட்டை கருப்புசாமி” என்ற இரண்டாம் நிலை காவலரின் வாழ்க்கை மற்றும் மனநிலையே கதையின் மையமாக அமைகிறது. அவரது பயம், அவமானம் மற்றும் அதிகாரத்தை கையாளும் விதம், சட்டமும் நீதியும் இடையே உள்ள மங்கலான கோட்டை கேள்விக்குறியாக்குகிறது.
இந்த தொடரில் நடித்த அனுபவம் குறித்து பிரசாந்த் பாண்டியராஜ் கூறுகையில், “கோட்டை கருப்புசாமி என்பது வழக்கமான ஹீரோ அல்ல. அவர் மிகவும் மனிதத் தன்மை கொண்டவர். அந்த உண்மைத்தன்மை என்னை இந்த கதாப்பாத்திரத்தை தேர்வு செய்ய வைத்தது. ஒரு படைப்பாளியாக நான் எப்போதும் வெளிப்படையான காட்சிகளை விட உணர்வுகளின் நேர்மையை விரும்புவேன். ‘வாரண்ட்’ தொடரில் நடித்தது, நான் கேமராவின் பின்னால் ஆராயும் உணர்வுகளை நேரடியாக அனுபவிக்க வைத்தது,” என்றார்.
சமரசமற்ற கதை சொல்லல், உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான காவல் துறை பின்னணியுடன் உருவாகியுள்ள ‘வாரண்ட்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான OTT அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 22 முதல் ZEE5 Tamil தளத்தில் ‘வாரண்ட்’ தொடரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தமிழ் திரையுலகில் குடும்பங்களோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
“தலைவன் தலைவி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதிய களத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். குடும்ப உணர்வுகளையும், நகைச்சுவையையும் தனக்கே உரிய பாணியில் கையாளும் அவர், இந்த முறை திரில்லர் மற்றும் காமெடியை இணைத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. அந்த குடும்ப உறுப்பினர்களின் தனித்துவமான குணாதிசயங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் அபூர்வமான சம்பவங்களும் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. சென்னை முதல் கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த திரைக்கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றங்களும், அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வடிவமைப்பும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதுடன், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி மற்றும் அனந்திகா சனில்குமார் இணைந்துள்ளனர்.
மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு, “தலைவன் தலைவி” பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் பாண்டிராஜுடன் இணைந்து இப்படத்தில் முழுநீள முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் தோன்றுகிறார். அதேபோல் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
“பரிமளா & கோ” திரைப்படத்தை Lyca Productions நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகிறார்.
திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!
இசை உலகில் தனது தனித்துவமான குரலும் பாணியும் மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் Dr சாருலதா மணி, தனது புதிய சுயாதீன பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் இசை ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ளார்.
A. R. Rahman இசையில் உருவான "Thug Life" படத்தில் இடம்பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” பாடலின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த புதிய பாடல் வெளியாகியுள்ளது.
Divo Warner South வெளியீட்டில் வந்துள்ள “தென்றலில்” பாடலை, “மக்கள் செல்வன்” என அழைக்கப்படும் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். திறமையான கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அவர், இந்தப் பாடலின் வெளியீட்டில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களிலும் Dr சாருலதா மணி தன்னுடைய முத்திரையை பதித்துள்ள ஒரு முக்கியமான படைப்பாக உருவாகியுள்ளது. பாரம்பரிய இசை மற்றும் நவீன மெலடிகளை இணைக்கும் அவரது திறமை, “தென்றலில்” பாடலில் தெளிவாக பிரதிபலிக்கிறது.
“என் உச்சி மண்டைல”, “Chillax”, “தீயே தீயே”, “கண்ணுக்குள் பொத்திவெப்பேன்”, “Sada Nannu”, “அஞ்சு வண்ணப் பூவே” போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ள அவர், இசை ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் Griffith University-யில் இசையில் PhD மற்றும் Postdoctoral Fellowship முடித்துள்ளதும் அவரது சிறப்பாகும்.
“தென்றலில்” பாடல் தற்போது அனைத்து டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது. இதன் இசை வீடியோவும் YouTube-ல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
புது முகங்கள் மாளவிகா மற்றும் தவன் நடித்துள்ள இந்த இசை வீடியோவை தரேன் கார்த்திக் இயக்கியுள்ளார்.
மென்மையான மெலடியுடன், மனதை வருடும் உணர்வுகளைக் கொண்டு உருவாகியுள்ள “தென்றலில்”, இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Toxic: A Fairy Tale for Grownups’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2026 ஜூன் 4 அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக CinemaCon நிகழ்வில் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு கூறப்படுகிறது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகள், இப்படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிடும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.
படம் தற்போது முழுமையாக தயாராகி இருக்கும் நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:
“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் எங்கள் படத்தை வெளியிட்ட பிறகு, உலகளாவிய அளவில் கிடைத்த வரவேற்பு இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
டாக்ஸிக் படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். இதனால், ஜூன் 4 அன்று படத்தை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.
இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. அதற்காகவே இந்த முடிவு. உங்கள் ஆதரவை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன். சில கதைகள் பொறுமையை கேட்கும்… இந்தப் படம் அவற்றில் ஒன்று. நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”
இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள “Toxic” திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கரா’ திரைப்படத்தின் டிக்கெட் ப்ரீ-புக்கிங் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படத்திற்கான முன்பதிவு, ரசிகர்கள் மத்தியில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் தளங்களில், குறிப்பாக BookMyShow போன்ற சேவைகள் மூலம் டிக்கெட்டுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் திரையரங்கு ஷோக்கள் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த திரையரங்குகளில் முன்பதிவு செய்ய முடிகிறது.
மேலும், சமூக வலைதளங்களிலும் “Bookings Open Now” என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி, ரசிகர்கள் உற்சாகமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த படம், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதால், வெளியீட்டிற்கு முன்பே நல்ல ஹைப் உருவாகியுள்ளது. பல இடங்களில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பும் சூழல் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கரா’, ஓப்பனிங் நாளிலேயே ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் தொடங்கும் வாய்ப்பு அதிகம் என திரையுலக வட்டாரங்கள் கணிக்கின்றன. ரசிகர்கள் இப்போது First Day First Show அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- உலக செய்திகள்
- |
- சினிமா













