சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

25வது படத்தை நெருங்கும் நடிகர் கருணாகரன்
Updated on : 12 May 2015

எனது முதல் படமான கலகலப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. முதல் படத்திலேயே பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சுந்தர்.சி சார் என்னை நடிக்க வைத்தார். என்னை நடிக்க வைத்தது மட்டும் அல்லாமல் திரைக்கதை எழுதவும் வைத்தவர். அவரது ஆசிகளுடன் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.


திரு.கார்த்திக் சுப்புராஜ் மற்றும் திரு.நலன் குமாரசாமி தனிப்பட்ட கதாபாத்திரத்திற்க்கு என்னை மனதில் வைத்தே திரைக்கதை எழுதினர். எனக்கும் ரசிகர்களுக்கும் மன நிறைவான கதாபாத்திரங்கள் அவை. என்னை செதுக்கிய இவர்களுக்கும், எனது சினிமா பாதையில் ஊன்றுகோலாக எனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் இத்தருணத்தில மனதார நான் நன்றி தெரிவிக்கிறேன்.

லிங்கா படத்தில் எனக்கு நடிக்க வாய்பளித்த திரு.கே.எஸ். ரவிகுமார் அவர்களுக்கும், திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் எதிர்பாராத மகிழ்ச்சியான வாய்ப்பு.


 இந்த மூன்று வருடங்களில் நான் நடித்த இருபது படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனித்தன்மையுடனும் வித்தியாசமாகவும் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.


இதற்கு முதன்மை காரணமான அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


எனது 25வது படத்தை நெருங்கும் இந்த நேரத்தில் எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளித்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது நிறைகளை பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் என்னை வளர்த்ததற்கு நன்றி.



படங்களில் எனது நடிப்பை பாராட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்.


 


 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா