சற்று முன்

மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

இந்த படத்தில் அரசியல் இல்லாமல் வேறென்ன இருக்கும்? ராஜு முருகன் கேள்வி
Updated on : 25 August 2016

ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பாவா செல்லதுரை, மு.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் "ஜோக்கர்".



 



படம் வெளியானது முதல் பொதுவெளியில் பல்வேறு விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



 



நேற்றும்கூட ஜோக்கர் படம் குறித்த உரையாடல் ஒன்று சென்னையில் நடைபெற்றது. படப்பெட்டி சினிமா இதழ் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உரையாடல் நிகழ்வில் இயக்குனர் ராஜுமுருகன், ஜீ.ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் - யுகபாரதி, திரைக் கலைஞர் - மு. ராமசாமி, இயக்குனர் - நவீன், மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார், பத்திரிகையாளர் கவின்மலர், கலை இயக்குனர் சதீஷ் குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



இதில் பேசிய ராஜுமுருகன், "ஜோக்கர் படம் வெளியான இந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து இதுகுறித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்கள் தான் இந்த படத்திற்கான வெற்றி.



 



ஒரு படைப்பானது மக்களிடையே ஒரு பொது விவாதத்தை ஏற்படுத்தவேண்டும். அந்த வகையில், ஜோக்கர் திரைப்படம் சமூகத்தில் இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.



 



இந்த படம் மக்களின் பிரச்சனையை பேசுகிறதே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் சட்டகத்திலும் இல்லை. இது என்னுடைய தன்னியல்புடன் உருவாக்கப்பட்டுள்ள படைப்பு. எந்த ஒரு வழக்கமான திரைப்பட பார்முலாவையும் நான் பின்பற்றவில்லை.



 



முழுக்க முழுக்க அரசியல் பேசுவதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த படத்தில், அரசியல் இல்லாமல் வேறென்ன இருக்கும்? என்று பேசினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா