சற்று முன்

16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும்!   |    பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா!   |    ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது!   |    2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |    கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது - ஆர்.கே. செல்வமணி   |    முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE ) பட முன்னோட்டம்!   |    சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்த!   |    பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்த சூர்யா!   |    கோலாகலமாக நடைபெற்ற டாகடர்.ஐசரி கே கணேஷ் மகள் சிறப்பு திருமண வரவேற்பு!   |    கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் 'மாண்புமிகு பறை'!   |    முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'   |    இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' முன்னோட்டம் வெளியீடு!   |    பரபரப்பான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் இப்பொழுது டெண்ட்கோட்டா OTT இல்!   |    'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

இந்த படத்தில் அரசியல் இல்லாமல் வேறென்ன இருக்கும்? ராஜு முருகன் கேள்வி
Updated on : 25 August 2016

ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பாவா செல்லதுரை, மு.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் "ஜோக்கர்".



 



படம் வெளியானது முதல் பொதுவெளியில் பல்வேறு விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



 



நேற்றும்கூட ஜோக்கர் படம் குறித்த உரையாடல் ஒன்று சென்னையில் நடைபெற்றது. படப்பெட்டி சினிமா இதழ் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உரையாடல் நிகழ்வில் இயக்குனர் ராஜுமுருகன், ஜீ.ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் - யுகபாரதி, திரைக் கலைஞர் - மு. ராமசாமி, இயக்குனர் - நவீன், மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார், பத்திரிகையாளர் கவின்மலர், கலை இயக்குனர் சதீஷ் குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



இதில் பேசிய ராஜுமுருகன், "ஜோக்கர் படம் வெளியான இந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து இதுகுறித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்கள் தான் இந்த படத்திற்கான வெற்றி.



 



ஒரு படைப்பானது மக்களிடையே ஒரு பொது விவாதத்தை ஏற்படுத்தவேண்டும். அந்த வகையில், ஜோக்கர் திரைப்படம் சமூகத்தில் இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.



 



இந்த படம் மக்களின் பிரச்சனையை பேசுகிறதே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் சட்டகத்திலும் இல்லை. இது என்னுடைய தன்னியல்புடன் உருவாக்கப்பட்டுள்ள படைப்பு. எந்த ஒரு வழக்கமான திரைப்பட பார்முலாவையும் நான் பின்பற்றவில்லை.



 



முழுக்க முழுக்க அரசியல் பேசுவதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த படத்தில், அரசியல் இல்லாமல் வேறென்ன இருக்கும்? என்று பேசினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா