சற்று முன்

ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |   

சினிமா செய்திகள்

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்து ஒலிக்கின்ற ஒரு படம் 'மாவீரன் கிட்டு'
Updated on : 05 December 2016

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி உட்பட பலர் நடித்துள்ள 'மாவீரன் கிட்டு' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



 



அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு சமூக அரசியல் பார்வைகொண்டவர்களின் மிகப்பெரிய ஆதரவும் கிடைத்துள்ளது.



 



இந்நிலையில், மாவீரன் கிட்டு திரைப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்து ஒலிக்கின்ற ஒரு படமாக 'மாவீரன் கிட்டு' உள்ளது என பாராட்டு தெரிவித்துள்ளார்.



 



படம் பார்த்து பின்னர் தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட தொல்.திருமாவளவன், "அதிகாரம் எந்தளவிற்கு எளியவர்களை ஒடுக்குகின்றது எனவும் கூறும் விதத்தில் சாட்சியம்மாக அமைந்துள்ளது இப்படம். காவல் அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் எந்தளவிற்கு சாதிக்கு துணை நிற்கின்றது. என்பதனை இப்படம் குறிப்பிடுகிறது.



 



மேலும் சாதி வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்தில் உள்ளது .அதற்கும் மேலாக காதல் என்பது மேலானது உயர்வானது அதை கட்டுப்படுத்த இயலாது என்பதனையும். மேலும் ஒடுக்கபட்டவர்களில் சிலர் விலைபோகிறவர்கள் இருப்பதால்.அந்த புரட்சிகரமான போராட்டம் தோல்வியாக அமைகிறது.



 



இருக்கமான சாதி அமைப்பினுள் மிக சிறந்த ஜனநாயகவாதிகள் இருக்கின்றார்கள் என்பதனை உணர்த்தும் விதமாக மிக சிறந்த ஜனநாயகவாதியாக கதாநாயகனின் தந்தை மிக சிறந்த முறையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் போராடினால் ஒரு போராட்டம் வெல்லாது. அதனோடு சில ஜனநாயக மனிதர்கள் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு போராட்டம் வெல்லும். என்பதனை இப்படம் விவரிக்கிறது.



 



தியாகத்தினால் கிட்டு மாவீரனாக இருக்கின்றார். மக்களுடைய போராட்டம் என்பது ஒருவனை மாவீரனாகிறது. ஒரு மாவீரன் மக்கள் போராட்டத்தை கட்டமைக்கிறான் என்பதனை உணர்த்தும் விதமாக இப்படம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா