சற்று முன்

ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |   

சினிமா செய்திகள்

சோ மறைவு - திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
Updated on : 07 December 2016



 



வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சோ ராமசாமி. இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது.



 



மறைந்த சோ ராமசாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



 



அக்டோபர் 5, 1934-ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் ராஜதானி சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் சோ.ராமசாமி . இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள்.



 



கல்வியில் சட்டம் பயின்ற சோ ராமசாமி, நாடக நடிகராக தனது கலை உலக வாழ்க்கையை தொடங்கினர். அதன்மூலம் திரையுலகிலும், பின்பு துக்ளக் இதழ் மூலம் பத்திரிக்கை துறையிலும் அவர் முதன்மையாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.



 



சோ ராமசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "ஜெயலலிதா மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தவர் சோ ராமசாமி. ஜெயலலிதா தன் 60-வது பிறந்த தினத்தின் போது சோ ராமசாமியின் வீட்டிற்கே சென்று ஆசி பெற்றார்.



 



மேலும் 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற போது சோ ராமசாமியின் இல்லம் சென்று அவரது நல்வாழ்த்துகளைப் பெற்றார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா