சற்று முன்

ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |   

சினிமா செய்திகள்

அம்மாவின் மரணத்தில் சந்தேகம் - பிரதமருக்கு கடிதம் எழுதினார் கெளதமி
Updated on : 09 December 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பில் நடிகை கெளதமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



“ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, பல நேரங்களில் அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது, பின்னர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது என அனைத்திலும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவே இல்லை.



 



ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவரை யாரும் நெருங்கமுடியாதவாறு உத்தரவுகளை பிறப்பித்தது யார்? அவரின் உயிர் காக்க அளிக்கப்பட சிகிச்சைகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுத்து யார் என்ற கேள்வியும் இங்கு எழுப்பப்படுகிறது.



 



ஜனநாயக முறையில் அவரை தேர்தெடுத்த மக்களுக்கு இதுதொடர்பான கேள்விகளுக்கு விடை அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது. எனவே அந்த கேள்விகளையெல்லாம் உங்களிடம் முன்வைக்கிறேன், மக்களின் கேள்விகளுக்கான பதிலை அளிக்க நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்” என நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கெளதமி குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா