சற்று முன்

மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |   

சினிமா செய்திகள்

பிரபாஸ் படத்தின் ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ.35 கோடி
Updated on : 03 March 2017

தெலுங்கு நடிகர்  பிரபாஸ் அடுத்த நடிக்கவிருக்கும் படத்தின் ஒரு சண்டைக்காட்சிக்காக ரூ.35 கோடி வரை செலவிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 



 



எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார் அப்படத்தின் ஹீரோ பிரபாஸ். 



 



பிரபாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படத்திலேயே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்கவுள்ளார். படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என்று முன்பே செய்திகள் வெளியிட்டிருந்தார்கள்.



 



இந்நிலையில், இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் ரூ.35 கோடி செலவிடப்போவதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ் சினிமாவில் ஒரு சண்டைக் காட்சிக்கு செலவழிக்கப்படும் அதிகபட்ச தொகை இது என்று கூறப்படுகிறது. 



 



இப்படத்திற்கு சங்கர்-எசான்-லாய் இசையமைக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் ஆர்ட் பணியை மேற்கொள்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா