சற்று முன்

அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |   

சினிமா செய்திகள்

என் பாடல்களை அனுமதியின்றி பாடக்கூடாது - எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ்
Updated on : 19 March 2017

மூத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையுலகில் 50 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில் 'எஸ்பிபி 50' என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவலாக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.



 



இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் பல இடங்களில் எஸ்.பி.பி யின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆனால், இந்த இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடக்கூடாது என இளையராஜா தரப்பிலிருந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை குழுவினருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.



 



எனவே, இளையராஜா இசையில் பாடிய பாடல்களை தவிர்த்து, பிற இசையமைப்பாளர்களின் பாடல்களை எஸ்பிபி பாடினார்.



 



இதனால் இரண்டு இசை ஜாம்பவான்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பியும் இனி எந்த இசை நிகழ்ச்சிகளிலும் இளையராஜாவின் பாடல்களை பாடமாட்டேன் என அறிவித்துள்ளார்.



 



சமூக வலைத்தளங்களில் இருவரில் யார் பக்கம் ஞாயம் இருக்கிறது என்ற விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா