சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

சினிமாவால் கிடைத்ததை சினிமாவுக்கே அளிக்கிறேன் - அசத்திய விஜய் சேதுபதி
Updated on : 02 May 2017

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், திரைத்துறையின் வளர்ச்சிக்கு பங்களித்த 100 தொழிலாளர்களுக்கு 100 பவுன் தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது.



 



இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, அமீர், சேரன், கரு.பழனியப்பன், எடிட்டர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். 100 பவுன் தங்கப்பதக்கம் வழங்கும் செலவை விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார்.



 



எனவே, நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் விஜய் சேதுபதியை வெகுவாக பாராட்டினார். ஆனால், இதனை தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதியோ, சினிமாவால் கிடைத்ததை சினிமாவுக்கே அளிக்கிறேன், நான் பெரியதாக எதுவும் செய்யவில்லை என கூறி தனது பெருந்தன்மையை நிலைநாட்டினார்.



 



மேலும் அவர் உரையாற்றுகையில், "சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் எனக்கு தனிப்பட்ட மரியாதையோ, அடையாளமோ இருந்ததில்லை. இன்று எனக்கு கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய அடையாளம் சினிமாவால் வந்ததுதான். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தோழர் எஸ்.பி.ஜனநாதன் அளித்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்" என கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா