சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

நாகா வெங்கடேஷ் இயக்கும் “நாரதன்”
Updated on : 09 April 2015

கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன் விஷ்ணு (நகுல்), சில ரவுடிகளால் துரத்தப்படும் நாயகியை காப்பாற்றுகையில், எதிர்பாராவிதமாக பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்கிறான்.


நாரதன் என்ற கதாபாத்திரமாக படத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி, விஷ்ணுவின் தாய்மாமன் குடும்பத்துக்குள் புகுந்து, பல கலகங்களை ஏற்படுத்தி, இறுதியில் “நாரதன் கலகம் நன்மையில் முடியும்” என்னும் வாக்கியத்தை நினைவுகூறும் வகையில், அனைத்து பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்த்து வைக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் ஆக்சன் கலந்து கூறும் படமே “நாரதன்”.


இப்படத்தில் நகுல், நிகிஷா பட்டேல், ஸ்ருதிராமகிருஷ்ணா, நாயகன் – நாயகியராக நடிக்க, கலகலப்பான பாத்திரங்களில் பிரேம்ஜி, ராதாரவி, MS பாஸ்கர், மயில்சாமி, வையாபுரி, “பவர்ஸ்டார்” சீனிவாசன், பாண்டு, “கும்கி” அஸ்வின் என்ற ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளனர்.


மேலும், பஞ்சு சுப்பு, நிழல்கள் ரவி, கவிதா, மீரா கிருஷ்ணன், சீஸர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில், “எப்படி மனுசுக்குள் வந்தாய்” பட நாயகன் விஷ்வா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


படத்தின் ஆரம்பத்தில், ரயிலில் நகுல் ஆடிப்பாடும் ஒரு குத்துப்பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.


சலீம் படத்தில் “மஸ்காரா” பாட்டுக்கு நடனமாடிய அஸ்மிதா, மும்பை அழகியுடன் சேர்ந்து ஆடும் ஒரு பாடல், பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது.


படத்தின் இறுதியில், நகுல் ரவுடிகளுடன் மோதும் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி, பின்னி மில்லில் 10 நாட்களாக படமாக்கப்பட்டு பரபரப்பான முறையில் வந்திருக்கிறது.


இதுதவிர, நகுல் மற்றும் ஸ்ருதி பாடும் ஒரு டுயட் பாடல், அழகுக்கு அழகு சேர்க்கும் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:


இயக்கம்: நாகா வெங்கடேஷ்


ஒளிப்பதிவு: சஞ்சய் லோகநாத்


இசை: மணிசர்மா


கலை: லால்குடி N.இளையராஜா


வசனம்: திரைவண்ணன்


பாடல்கள்: விவேகா, திரைவண்ணன், சொற்கோ


படத்தொகுப்பு: ஷைஜித் குமரன்


சண்டைப்பயிற்சி: சுப்ரீம் சுந்தர்


நடனம்: அசோக்ராஜா


PRO: நிகல்


தயாரிப்பு: M செல்வகுமார் மற்றும் சஜித் V நம்பியார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா