சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

நானும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள் - சத்யன் சூரியன்
Updated on : 19 December 2018

தூசி படிந்த நிலப்பரப்போ அல்லது அழகிய நிலப்பரப்போ, ஆனால் இவருடைய காட்சி நேர்த்தியால் ஒரு புது சினிமா அனுபவத்தை எப்போதும் நமக்கு அளிக்கும். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் மிகச்சிறந்த ஒளிப்பதிவால் நல்ல அங்கீகாரத்தை பெற்றவர். டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் "அடங்க மறு" பற்றி சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். 



ஜெயம் ரவி பற்றி அவர் கூறும்போது, "நானும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள், நாங்கள் மிக நீண்ட காலம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறோம். ஒரு மென்மையான நபர், கேமரா ஆன் செய்த சில வினாடிகளுக்குள், மிகவும் கம்பீரமாக உருமாறுவதை கற்பனை செய்து பாருங்கள். உண்மையில், ஜெயம் ரவியின் மூர்க்கத்தனமான போலீஸ் நடிப்பில், அதன் வெப்பத்தை நான் உணர முடிந்தது. 



பல திரைப்படங்களில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார், இதில் சிறப்பான அம்சம் என்ன என வர் கூறும்போது, "ஆம், போகன் மற்றும் தனி ஓருவனில் அவரின் போலீஸ் நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஆனால் அடங்க மறுவில் அவரது நடிப்பு, முந்தைய திரைப்படங்களுடன்  ஒப்பிடுகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அவரது உடல் மொழி மற்றும் மேனரிஸம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான் இதற்கு காரணமாக இருக்கும். ராஷி கண்ணாவும் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பாக, மிகவும் ஈடுபாட்டோடு தயாராவார்" என்றார். 



தொழில்நுட்ப குழுவினர் பற்றி சத்யன் சூரியன் கூறும்போது, "இயக்குனர் கார்த்திக் தங்கவேலு கேப்டன் என்ற முறையில் மிகச்சரியான முன் தயாரிப்புடனும், திட்டமிடலுடனும் இருந்தார். இது சிறந்த முறையில் படமாக்க எனக்கு நிறைய உதவியது. சண்டைக்காட்சிகளை படம் பிடிப்பது மிகவும் சவாலானது, குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டை. இது வெறுமனே வழக்கமான அடிதடி மட்டுமல்லாமல், சில புத்திசாலித்தனமான விஷயங்களையும்  உள்ளடக்கியிருந்தது. ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன் கெவின் குமார் ஆகியோரும் கலை இயக்குனரும் மிகச்சிறப்பாக செயல்பட்டதால், நானும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. 



அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க, கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா