சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

ரத்தினா சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் பெயரிடப்படாத ஆக்‌ஷன் திரில்லர்
Updated on : 19 December 2018

றெக்க புகழ் ரத்தினா சிவா இயக்கத்தில்  ஜீவா நடிக்கும் பெயரிடப்படாத ஆக்‌ஷன்  திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது, விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் உறுதி செய்திருந்தனர். தற்போது நாயகியாக தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான மற்றும் அழகான ரியா சுமன் ஜீவாவுக்கு நாயகியாக நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 



தெலுங்கில் மஜ்னு மற்றும் பேப்பர் பாய் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நாயகி ரியா சுமன் பேசும்போது, "தமிழில் என் முதல் படம் என்பதையும் தாண்டி, எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தெலுங்கு திரைப்படங்களில் நான் இதுவரை செய்த கதாபாத்திரங்கள் சற்றே தீவிரமான கதாபாத்திரங்கள். ஆனால் இந்த படத்தில் எனக்கு மிகவும் துடிப்பான கதாபாத்திரம்" என்றார்.



தமிழ் வசனங்களை எளிதாக பேசிவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும், ஆனால் படப்பிடிப்பில் நடந்ததே வேறு என்றும் அவரே ஒப்புக் கொள்கிறார். "ஆம், 100% உண்மை. இது போன்ற தவறான முன்முடிவுடன் இருந்தது பெரிய தவறு. இந்த அழகிய மொழியில் சரளமாக பேச நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். நான் ஆரம்பத்திலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதற்கு போதுமான நேரம் இல்லை. தமிழ் வசனங்களை எனக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி பெயர்த்து தந்து எனக்கு உறுதுணையாக இருக்கும் என் உதவியாளர்களுக்கு நன்றி. ஜீவாவும் அவ்வப்போது வசன உச்சரிப்பில் எனக்கு உதவியாக இருந்தார். என்னை பொறுத்துக் கொண்ட ஜீவா மற்றும் ரத்தின சிவா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.



மேலும், தனது கதாபாத்திரம் பற்றி அவர் கூறும்போது, "என்னுடைய கதாபாத்திரம் வெறுமனே நகைச்சுவையாக மட்டும் இருக்காது. படம் முழுக்க வரும் கதாபாத்திரம், நாயகன் நிறைய விஷயங்களை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் கதாபாத்திரம்" என்றார். 



படத்தின் தயாரிப்பாளரை பற்றி கூறும்போது, "தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு திருப்புமுனையை வழங்குவதற்காக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. அவரை போன்ற திறமையான தயாரிப்பாளரின் படத்தில் பணி புரிவது எனக்கு பெருமை அளிக்கிறது" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா