சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

சென்னையில் 5ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா துவக்கம்
Updated on : 07 January 2019

5ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத்தமிழ் வம்சாவளியினர் ஒன்றுகூடல் நிகழ்வு ஜனவரி மாதம் 5, 6 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது.



மேதகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் துவக்கி வைக்க இறுதி நாளில் மேதகு கேரள ஆளுநர் தலைமை நீதியரசர் .P.சதாசிவம் அவர்கள் நிறைவு செய்து பேருரை ஆற்றினார்.



திரு ஐசரி கணேஷ், வேந்தர்- வேல்ஸ் பல்கலைகழகம், வேந்தர் கோ. விஸ்வநாதன், வி.ஐ.டி பல்கலைக்கழகம், மரு குருஷங்கர் மீனாட்சி மிஷன் – மருத்துவமனை, முனைவர். பழனி .ஜி .பெரியசாமி, முனைவர் AC. சண்முகம் - டாக்டர் MGR பல்கலைக்கழகம், மற்றும் திரு பீட்டர் அல்போன்ஸ், நடிகர் பொன்வண்ணன் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



இம்மாநாட்டில் தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், தமிழர் ஆடை அலங்கார அணிவகுப்பு, பழந்தமிழர் வாழ்வியல் காட்சியரங்கு ஆகியவையும் நடைப்பெற்றது. சாதனை தமிழன் மற்றும் நல்லாசான் விருது வழங்கப்பட்டது.



அயலக அரசியலில் தமிழர்கள் என்ற தலைப்பில் திருமிகு வைகோ மற்றும் திருமிகு தொல்.திருமாவளவன் அயலக அரசியல் தமிழர்களுடன் கலந்துரையாடினர். உலக தமிழ் பல்கலைக்கழகம் -மின்னியல் லட்சிச்சினை துவக்கம் நடைப்பெற்றது.



மாநாட்டின் தீர்மானங்களாக, உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு செல்வகுமார் மாநில மத்திய அரசுகளிடம் வெளியிட்ட கோரிக்கையின் விவரம் வருமாறு:



1.தமிழக அரசு, அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் நலனுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும்.



2.மத்திய அரசு அயலக தமிழர்களின் நலனுக்காக அவர்களின் பிரச்சினைகளை களையும் பொருட்டு நியமன ராஜ்யசபா உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்



3. உலகமக்கள் தொகையில் 2சதவிகிதம் உள்ள தமிழர்களில் அயலகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு People of Indian Origin போல் People of Tamil origin என அடையாள அட்டை வழங்கவேண்டும்



4.நம் கலை கலாச்சார பண்பாடுகளை அயலக தமிழர்கள் அறியும் வகையில், அயலக தமிழர்களை ஆண்டு தோறும் அழைத்து உலகத்தமிழர் திருநாள் விழா நடத்த மத்திய மாநில  அரசு உதவவேண்டும்.



5. அயல் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்க மத்திய அரசு உதவ வேண்டும்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா