சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

கவனம் பெறும் களம் படத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய பாடல்!
Updated on : 08 April 2016

ராபர்ட் ராஜ் இயக்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் களம். அருள் மூவிஸ் தயாரித்து, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இப்படத்தை வெளியிடுகிறார்.



 



தயாரிப்பாளர் சுபீஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு, ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார்.



 



இந்த படத்தில் கவிஞர் கபிலன் வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதியிருந்தாலும், அதில் ஒரு பாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.



 



நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் பாடலைப் போல களம் படத்திலும் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார் கபிலன் வைரமுத்து. மாயம் காண வாராயோ என்று தொடங்கும் இப்பாடல்,  பாழடைந்த ஜமீன்தாரின் வீட்டை மையமாகக்கொண்டு அந்த வீடே பாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.



 



திரையில் பார்க்கும்போது புதிதாய் குடி வருகிறவர்களைப் பார்த்து அந்த ஜமீன் வீடு பாடுவது போலவும், அந்தக் காட்சிகளை மறந்துவிட்டு பாடலை மட்டும் கேட்டால் ஒரு பெண்ணுடைய காதல் ஏக்கம் போலவும் ஒரே பாட்டில் இரண்டு பொருள் வரும்படி மிகச் சிறப்பாக இந்த “மாயம் காண வாராயோ” பாடல் அமைக்கப்பட்டுள்ளது.



 



அந்த பாடலின் வரிகள்:

 



பல்லவி

 



மாயம் காண வாராயோ - உன் கண்கள் பொம்மையோ?

 



நிலா சாய்ந்த ஒரு நினைவு சுவராய்

என் மேனி ஆனதோ?

 



அறைகள் ஒவ்வொன்றாய் நான் திறந்திட

வெளிச்சம் வவ்வாலாய் சுருங்கிட

 



உள்ளே வருகவே

உன்னைத் தருகவே

 



சரணம்

 



ஜன்னல் மூடி மெளனம் கூட்டி

மெழுகைக் கொளுத்திடு மகிழ்ந்திடுவேன்

 



பிரயாணங்கள் அவை முடியும் முன்னே

பிறவி சாந்தியை பரிசளிப்பேன்

 



மன கூடத்தின் ஊடே கொலுவாய் நுழைந்தாயே

உனைக் கொண்டாடி ஓய்வேனே

 



அன்பாய்த் தொடும்

அந்நாள் வரும்…

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா