சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

சினிமா செய்திகள்

கவனம் பெறும் களம் படத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய பாடல்!
Updated on : 08 April 2016

ராபர்ட் ராஜ் இயக்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் களம். அருள் மூவிஸ் தயாரித்து, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இப்படத்தை வெளியிடுகிறார்.



 



தயாரிப்பாளர் சுபீஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு, ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார்.



 



இந்த படத்தில் கவிஞர் கபிலன் வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதியிருந்தாலும், அதில் ஒரு பாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.



 



நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் பாடலைப் போல களம் படத்திலும் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார் கபிலன் வைரமுத்து. மாயம் காண வாராயோ என்று தொடங்கும் இப்பாடல்,  பாழடைந்த ஜமீன்தாரின் வீட்டை மையமாகக்கொண்டு அந்த வீடே பாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.



 



திரையில் பார்க்கும்போது புதிதாய் குடி வருகிறவர்களைப் பார்த்து அந்த ஜமீன் வீடு பாடுவது போலவும், அந்தக் காட்சிகளை மறந்துவிட்டு பாடலை மட்டும் கேட்டால் ஒரு பெண்ணுடைய காதல் ஏக்கம் போலவும் ஒரே பாட்டில் இரண்டு பொருள் வரும்படி மிகச் சிறப்பாக இந்த “மாயம் காண வாராயோ” பாடல் அமைக்கப்பட்டுள்ளது.



 



அந்த பாடலின் வரிகள்:

 



பல்லவி

 



மாயம் காண வாராயோ - உன் கண்கள் பொம்மையோ?

 



நிலா சாய்ந்த ஒரு நினைவு சுவராய்

என் மேனி ஆனதோ?

 



அறைகள் ஒவ்வொன்றாய் நான் திறந்திட

வெளிச்சம் வவ்வாலாய் சுருங்கிட

 



உள்ளே வருகவே

உன்னைத் தருகவே

 



சரணம்

 



ஜன்னல் மூடி மெளனம் கூட்டி

மெழுகைக் கொளுத்திடு மகிழ்ந்திடுவேன்

 



பிரயாணங்கள் அவை முடியும் முன்னே

பிறவி சாந்தியை பரிசளிப்பேன்

 



மன கூடத்தின் ஊடே கொலுவாய் நுழைந்தாயே

உனைக் கொண்டாடி ஓய்வேனே

 



அன்பாய்த் தொடும்

அந்நாள் வரும்…

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா