சற்று முன்

இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |   

சினிமா செய்திகள்

கவனம் பெறும் களம் படத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய பாடல்!
Updated on : 08 April 2016

ராபர்ட் ராஜ் இயக்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் களம். அருள் மூவிஸ் தயாரித்து, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இப்படத்தை வெளியிடுகிறார்.



 



தயாரிப்பாளர் சுபீஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு, ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார்.



 



இந்த படத்தில் கவிஞர் கபிலன் வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதியிருந்தாலும், அதில் ஒரு பாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.



 



நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் பாடலைப் போல களம் படத்திலும் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார் கபிலன் வைரமுத்து. மாயம் காண வாராயோ என்று தொடங்கும் இப்பாடல்,  பாழடைந்த ஜமீன்தாரின் வீட்டை மையமாகக்கொண்டு அந்த வீடே பாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.



 



திரையில் பார்க்கும்போது புதிதாய் குடி வருகிறவர்களைப் பார்த்து அந்த ஜமீன் வீடு பாடுவது போலவும், அந்தக் காட்சிகளை மறந்துவிட்டு பாடலை மட்டும் கேட்டால் ஒரு பெண்ணுடைய காதல் ஏக்கம் போலவும் ஒரே பாட்டில் இரண்டு பொருள் வரும்படி மிகச் சிறப்பாக இந்த “மாயம் காண வாராயோ” பாடல் அமைக்கப்பட்டுள்ளது.



 



அந்த பாடலின் வரிகள்:

 



பல்லவி

 



மாயம் காண வாராயோ - உன் கண்கள் பொம்மையோ?

 



நிலா சாய்ந்த ஒரு நினைவு சுவராய்

என் மேனி ஆனதோ?

 



அறைகள் ஒவ்வொன்றாய் நான் திறந்திட

வெளிச்சம் வவ்வாலாய் சுருங்கிட

 



உள்ளே வருகவே

உன்னைத் தருகவே

 



சரணம்

 



ஜன்னல் மூடி மெளனம் கூட்டி

மெழுகைக் கொளுத்திடு மகிழ்ந்திடுவேன்

 



பிரயாணங்கள் அவை முடியும் முன்னே

பிறவி சாந்தியை பரிசளிப்பேன்

 



மன கூடத்தின் ஊடே கொலுவாய் நுழைந்தாயே

உனைக் கொண்டாடி ஓய்வேனே

 



அன்பாய்த் தொடும்

அந்நாள் வரும்…

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா