சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

அஜித் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர் - ஜெகபதி பாபு
Updated on : 08 January 2019

மிகவும் ஸ்டைலான மற்றும் மக்களை கவரும் தோற்றத்துடன் கூடிய ஒரு சிறந்த நடிகரை கண்டுபிடிப்பது மிகவும் அபூர்வமானது. ஜெகபதி பாபு இந்த குணங்களை கணிசமாக வைத்திருப்பதால் தான், மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு நடிகராக இருக்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சென்னையுடன் ஒரு பிரிக்க முடியாத பந்தத்தை கொண்டிருக்கும் அவர் "விஸ்வாசம்" படம் அவரை தமிழ்நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்கும் என நம்புகிறார். இது குறித்து அவர் கூறும்போது, "வெளிப்படையாக சொல்வதென்றால் குழந்தை பருவத்தில் இருந்தே இந்த மண்ணில் ஒரு ஹிட் திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன். நிச்சயமாக, இந்த படம் என் நீண்ட கால கனவை நிறைவேறற போகிறது" என்றார்.



"விஸ்வாசம்" குழுவில் பணிபுரிந்த அவரது அழகான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது, "அஜித் சார் போன்ற ஒரு நபர் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர். மக்களுக்கு பல நல்ல விஷயங்களை நிறைய செய்திருக்கிறார். மற்ற நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் அஜித் சார் போன்ற ஒரு நடிகர், அவர் ரசிகர்களிடம் இருந்து பெறும் மரியாதை மற்றும் ஆராதனைக்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.



தொடர்ந்து அவர் கூறும்போது, "விஸ்வாஸம்" படத்தில் ஹீரோ, வில்லன் என இருவருமே "சால்ட் 'என்' பெப்பர்" தோற்றத்தில் தோன்றுவதால், ஆரம்பத்தில் இருந்து நேர்மறையாக அதை உணர்ந்தேன். அஜித்தை ரசிகர்கள் அத்தகைய நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் மாஸ் மற்றும் கிளாஸ் என ஒரு கலவையை கொண்டிருக்கும். குறிப்பாக மாஸ் காட்சிகளை, அவரது அலப்பறையை, அப்பாவிதனத்தை அவருடைய ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் நன்றாக அனுபவிப்பார்கள். உண்மையில், என்னுடைய சிந்தனையுடன் அந்த கதாப்பாத்திரம் ஒத்துப் போனதால், அவரது கதாபாத்திரத்தை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினேன்.



குறிப்பாக இந்த படத்தில் ஹீரோ, வில்லன் மோதல் மிக முக்கியமாக, அவர்களின் வித்தியாசமான, வேறுபட்ட  சிந்தனைகளால் நடப்பது தான். நான் என்ன நினைக்கிறேனோ, என்ன செய்கிறேனோ அது தான் சரி என  நம்புகிறவன் நான். அதனால் தான் "என் கதையில நான் ஹீரோ டா" என்று வசனம் பேசுகிறேன்.



இயக்குனர் சிவா பற்றி அவர் கூறும்போது, "சிவா மிகவும் இனிமையானவர், அவரது புன்னகை எப்போதும் உண்மையானது. சில சமயங்களில், அவர் உணர்வுகளை தனக்குள்ளே மறைத்துவிட்டு வெளியில்  பாஸிட்டிவாக நடந்துகொள்கிறாரா என நான் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறேன். இருப்பினும், அவரது மனது மிகவும் தூய்மையானது. அது தான் அவர் செய்யும் படங்களில் பிரதிபலிக்கிறது. நயன்தாரா ஒரு அழகிய பெண்,  எப்போதும் எளிமையாக இருப்பவர். எனக்கு 'விஸ்வாசம்' அணியுடன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வேலை செய்யும் வாய்ப்பு வந்தால் நான்  ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்வேன். இந்த குழுவில் உள்ள எல்லோரும், நேர்மறையான, தூய்மையான, நல்ல இயல்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.



சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் பற்றி அவர் கூறும்போது, "அவர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கின்ற,  தொழில்முறை தயாரிப்பாளர்கள். என் தந்தை தயாரிப்பாளராக இருந்த  நாட்களிலிருந்தே அவர்கள் புகழ்பெற்ற பிராண்ட் என்று நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் என்னை அன்போடும், பாசத்தோடும் நடத்தியது அவர்கள் மீதான மரியாதையை மேலும்  அதிகரித்தது" என்றார்.



ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்திருக்கிறார்கள். டி.இமானின் பட்டையை கிளப்பும் பாடல்களும், வெற்றியின் வணணமயமான ஒளிப்பதிவும், ட்ரைலரில் பார்த்த ரூபனின் வேகமான எடிட்டிங்கும், தமிழகத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் முழுவதும் திருவிழாவை துவக்கி வைத்திருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா