சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

ஹரிஷ்கல்யாண் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தின் ஏய் கடவுளே என்ற பாடலின் மூலம் பாடகராகிறா
Updated on : 28 January 2019

ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுவதால் மட்டுமே ஒருவரின் பன்முகத்தன்மை மேம்படும் என்று கூறமுடியாது. மிகச்சரியான உழைப்பும், ஆற்றலுமே அத்தகைய தரத்தை தரும்.  அதற்கேற்றாற்போல பல பன்முகத்திறமையாளர்களை தன் வாழ்நாளில் தமிழ் சினிமா அடையாளம் கண்டுள்ளது.அத்தகைய திறமையை உள்ளடக்கிய நடிகர் ஹரிஷ்கல்யாண் , தனது அடுத்த வரவான "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் " படத்தின் , "ஏய் கடவுளே" என்ற பாடலின் மூலம் பாடகராகிறார்.



 சமகாலத்தின் காதலில் சிக்கிய இளைஞனின் மனநிலையை பற்றி விவரிக்கும்  இப்பாடலை , சாம்.c.s. இசையில், இயக்குனர் ரஞ்சித் ஜெயகோடி எழுதிருக்கிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் கர்ஜிக்கும் குரலும் இப்பபாடலுக்கு மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.



தான் தடம் பதிக்கும் அனைத்திலும் வெற்றியை ஈட்டும் நடிகர் ஹரிஷ்கல்யாண் " ஏய் கடவுளே" பாடலின் வரிகளுக்கு பங்களித்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.



"இப்பாடலின் ரேகார்டிங் ஒரு புதுமையான அனுபவம்.முதலில் நாங்கள் தனி வார்த்தைகளில் அமைத்த பாடல், பின்னர் முழுவடிவத்தை பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். "ஏய் கடவுளே" எனது முதல் முழுநீள பாடலாக இருக்கும். எதிர்பார்பையும் மீறி ரசிகர்கள் அளித்திருக்கும் இந்த வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி யளிக்கிறது" என்றார் கதையின் நாயகன் ஹரிஷ்கல்யாண்.



ரொமாண்டிக் ட்ரீட் ஆக உருவாகும் "இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும்" திரைப்படத்தை  இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க , மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா