சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

ஹரிஷ்கல்யாண் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தின் ஏய் கடவுளே என்ற பாடலின் மூலம் பாடகராகிறா
Updated on : 28 January 2019

ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுவதால் மட்டுமே ஒருவரின் பன்முகத்தன்மை மேம்படும் என்று கூறமுடியாது. மிகச்சரியான உழைப்பும், ஆற்றலுமே அத்தகைய தரத்தை தரும்.  அதற்கேற்றாற்போல பல பன்முகத்திறமையாளர்களை தன் வாழ்நாளில் தமிழ் சினிமா அடையாளம் கண்டுள்ளது.அத்தகைய திறமையை உள்ளடக்கிய நடிகர் ஹரிஷ்கல்யாண் , தனது அடுத்த வரவான "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் " படத்தின் , "ஏய் கடவுளே" என்ற பாடலின் மூலம் பாடகராகிறார்.



 சமகாலத்தின் காதலில் சிக்கிய இளைஞனின் மனநிலையை பற்றி விவரிக்கும்  இப்பாடலை , சாம்.c.s. இசையில், இயக்குனர் ரஞ்சித் ஜெயகோடி எழுதிருக்கிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் கர்ஜிக்கும் குரலும் இப்பபாடலுக்கு மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.



தான் தடம் பதிக்கும் அனைத்திலும் வெற்றியை ஈட்டும் நடிகர் ஹரிஷ்கல்யாண் " ஏய் கடவுளே" பாடலின் வரிகளுக்கு பங்களித்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.



"இப்பாடலின் ரேகார்டிங் ஒரு புதுமையான அனுபவம்.முதலில் நாங்கள் தனி வார்த்தைகளில் அமைத்த பாடல், பின்னர் முழுவடிவத்தை பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். "ஏய் கடவுளே" எனது முதல் முழுநீள பாடலாக இருக்கும். எதிர்பார்பையும் மீறி ரசிகர்கள் அளித்திருக்கும் இந்த வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி யளிக்கிறது" என்றார் கதையின் நாயகன் ஹரிஷ்கல்யாண்.



ரொமாண்டிக் ட்ரீட் ஆக உருவாகும் "இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும்" திரைப்படத்தை  இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க , மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா