சற்று முன்
சினிமா செய்திகள்
கோடையில் ரிலீசாக இருக்கும் ஜாம்பி
Updated on : 27 February 2019

வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் ஜாம்பி. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் 15 நாட்களில் படப்பிடிப்பு நிறைவுபெறும்.
யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் படத்தின் காட்சிகள் இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல எடுக்கப்படுகிறது. இதற்காக பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.
சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈசியார் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள் , ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது.
புவன் நல்லன் இயக்கியிருக்கும் இந்தப்படத்துக்கு இசை பிரேம்ஜி.
ஜாம்பி படம் கோடையில் வெளியாகவுள்ளது.
சமீபத்திய செய்திகள்
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!
சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதைக்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் என 3 பிரிவுகளில் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதை ’பார்க்கிங்’ திரைப்படம் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ். சினிஷ் & பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருந்த ‘பார்க்கிங்’ படம் அதன் வெளியீட்டிற்கு பின்பு விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. தற்போது 71ஆவது தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்தது. அதில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை (தெலுங்கு படம் ‘பேபி’யுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது) மற்றும் சிறந்த துணை நடிகர் விருது எம்.எஸ். பாஸ்கர் அவர்களுக்கும் என மூன்று தேசிய விருதுகளை அள்ளியுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம்.
சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ். சினிஷ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தனர். அன்றாடம் வாழ்க்கையில் பலரும் எதிர்கொள்ளும் பார்க்கிங் சவாலையும் அதனால் ஏற்படும் உளவியல் மாற்றங்களையும் இந்தப் படம் நுட்பமாக அணுகியதாக ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் பாராட்டினர். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தயாரிப்பாளர்கள் கே.எஸ். சினிஷ் மற்றும் சுதன் சுந்தரம் தெரிவித்திருப்பதாவது, “சிறந்த தமிழ் படத்திற்கான விருதை ‘பார்க்கிங்’ பெறுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்கள் ‘பார்க்கிங்’ படக்குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த சரியான அங்கீகாரம். நகர வாழ்க்கை, அங்கு ஏற்படும் பிரச்சினையால் வரும் ஈகோ, அவை எப்படி மனித உணர்வுகளையும் உறவுகளையும் மாற்றுகிறது என உலகளாவிய பார்வையாளர்களுக்கான கதையாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இதை திரையில் கொண்டு வந்தார். ராம்குமார் கதை சொல்லும்போதே இது சிறந்த திரைக்கதை மற்றும் இதற்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்பினோம். அதன்படி தற்போது ‘சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது’ கிடைத்திருக்கிறது.
இந்தக் கதையை எந்தவிதமான தயக்கமும் இன்றி ஒத்துக்கொண்டு படத்திற்கு முழு ஆதரவு கொடுத்த என்னுடைய பார்ட்னர் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரத்திற்கும் நன்றி. பல லேயர் கொண்ட இந்த கதாபாத்திரங்களை உண்மையான உணர்வோடு திரையில் பிரதிபலித்த நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கருக்கும் ஸ்பெஷல் நன்றி. ’பார்க்கிங்’ படத்தின் அனைத்து திறமையான நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் எங்களுடன் பயணித்த அனைவருக்குமே இந்த விருது உரியது.
சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களுள் எம்.எஸ். பாஸ்கர் சாரும் ஒருவர். ‘பார்க்கிங்’ படம் மூலம் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றிருப்பது தயாரிப்பாளர்களாக எங்களுக்கும் மகிழ்ச்சி. ‘பார்க்கிங்’ டீம் சார்பாக தேசிய விருது பெற்ற மற்ற வெற்றியாளர்களுக்கும் குறிப்பாக ‘வாத்தி’ பட பாடலுக்காக ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது வென்றிருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றனர்.
ஐடி ஊழியரான ஈஸ்வர், கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியுடன் புது வீட்டிற்கு குடி போகிறார். அவர்கள் குடிபோகும் வீட்டிற்கு கீழ் இருக்கும் இளம்பரிதியுடன் வண்டி பார்க்கிங் தொடர்பாக மோதல் உருவாகிறது. மோதல் வளர்ந்து ஒருக்கட்டத்தில் வெடிக்க இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ‘பார்க்கிங்’ திரைப்படம். நகர வாழ்க்கை, மனித மனங்களின் உணர்வுகள், ஈகோ, பாசம் என அனைத்தையும் வலுவான திரைக்கதை மூலம் நுட்பமாக காட்டியிருந்தது ’பார்க்கிங்’ திரைப்படம்.
டிசம்பர் 1, 2023 அன்று வெளியான இந்தப் படம் பின்பு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆனது.
இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!
நடிகை வரலட்சுமி சரத்குமார், இலங்கையின் பிரமாண்டமான Cinnamon Life – City of Dreams இடத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் தனக்கே உரிய சீரான அழகையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். புகைப்படக் கலைஞர் கேசரா எடுத்த இந்த போட்டோக்கள், 'கருப்பு வெள்ளை' மற்றும் 'பேஸ்டல்' நிறங்களில் வரலட்சுமியின் இயல்பான பிம்பத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாகப் பதிவு செய்கின்றன.
மெல்லிய நிறங்களில் கட்டமைக்கப்பட்ட ஆடைகளில் தோன்றும் அவர், சினிமாவின் ஆழத்தையும், எக்காலத்திலும் மரையாத ஃபேஷனையும் கலந்து சுமந்திருக்கிறார். “கம்பீரமாக இரு , ஒவ்வொரு புகைப்படமும் ” எனும் அவரது விளக்கம், வெறும் வார்த்தையல்ல – திரைத்துறையிலும், வாழ்க்கையிலும் அவர் கட்டியெடுத்த தனி அடையாளத்தின் பிரதிபலிப்பாகும்.
‘The Verdict’ போன்ற படங்களில் அவரின் அடக்கமும் ஆழமும் கலந்த நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு, தன்னிச்சையான தேர்வுகளால் இன்று வரலட்சுமி, தனது தலைமுறையின் மிகவும் தைரியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
தற்போது பல்வேறு பருவங்களில் உள்ள திரைப்படங்கள் மூலம், இன்னும் பல உயரங்களை அடையத் தயாராக இருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கதைகளாக இருந்தாலும், உள்ளடக்கம் சார்ந்த படைப்பாக இருந்தாலும் – அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் வகையில் இருக்கும்.
இந்த போட்டோஷூட் வெறும் ஃபேஷனுக்காக மட்டுமல்ல , இது தனது திறமையையும், தன்மையையும் முழுமையாக புரிந்து கொண்ட ஒரு பெண்ணின் ஆளுமையை பதிவு செய்திருக்கும் அழகிய படம்.
'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!
சென்னை, 1 ஆகஸ்ட் 2025: எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான மீஷாவின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது கேரளா மற்றும் தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
'பரியேறும் பெருமாள்', 'சுழல்: தி வோர்டெக்ஸ்' மற்றும் 'விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்ததற்காக கதிரின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது மலையாளத்திலும் 'மீஷா' படம் மூலம் அறிமுகமாகிறார். இது தமிழ் ரசிகர்களுக்காக தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது.
டிரெய்லரின் ஆரம்ப காட்சிகளில் கதிரின் நடிப்பு பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளதால், தமிழ் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்புகள் உயர்ந்துள்ளன.
யூனிகார்ன் மூவீஸ் பேனரின் கீழ் சஜீர் கஃபூர் தயாரித்த 'மீஷா' திரைப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ (குட் பேட் அக்லி, பீஸ்ட்), ஹக்கிம் ஷா, ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் முரளி, சுதி கோபா, உன்னி லாலு மற்றும் ஹஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அடர்ந்த காட்டின் நடுங்கும் அமைதியில் அமைக்கப்பட்ட 'மீஷா' திரைப்படம், நண்பர்கள் குழுவைச் சுற்றி நடக்கும் தொடர்ச்சியான நிகழ்வுகளைப் பின்தொடர்கிறது. ஆபத்து, சிலிர்ப்பு மற்றும் உளவியல் சவால்கள் ஆகியவற்றை டிரெய்லர் உணர்த்துகிறது.
சமீபத்தில் வெளியான தமிழ் டிரெய்லர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. தமிழில் டப் செய்துள்ளது ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமானதாக மாற்றியுள்ளது.
'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்
வீனஸ் பிக்சர்ஸ் திரு டி. கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜனின் வழிகாட்டுதலோடு நான்காவது தலைமுறையாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜனும் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்து வருகின்றனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பான குடும்ப திரைப்படம் 'தலைவன் தலைவி' உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில், முன்னணி நட்சத்திரங்களுடன் சத்யஜோதி குடும்பம் இணைந்தாலே பிளாக்பஸ்டர் வெற்றியில் தான் முடியும் என்பது தசாப்தங்கள் மற்றும் தலைமுறைகள் தாண்டி மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது.
மக்கள் திலகம்' எம்ஜிஆர் நடித்த 'ரிக்ஷாக்காரன்' மற்றும் 'காவல்காரன்', நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'உத்தம புத்திரன்', ஜெமினி கணேசன் நடித்த 'கல்யாண பரிசு', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மூன்று முகம்', 'பணக்காரன்' மற்றும் 'பாட்ஷா', உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'மூன்றாம் பிறை' மற்றும் 'காக்கி சட்டை', கேப்டன் விஜயகாந்த் நடித்த 'ஹானஸ்ட் ராஜ்', கே. பாக்யராஜ் நடித்த 'அந்த ஏழு நாட்கள்', முரளி நடித்த 'இதயம்', கார்த்திக் நடித்த 'கிழக்கு வாசல்', அஜித் குமார் நடித்த 'விஸ்வாசம்', தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய மெகா ஹிட் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவன் தலைவி'யும் ரசிகர்களிடமிருந்து உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.
குதூகலமான மற்றும் உணர்ச்சிமயமான குடும்ப திரைப்படமான 'தலைவன் தலைவி' வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்து திரைப்படத்தை கண்டு களித்து வருகின்றனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் படக்குழுவினருக்கு பாராட்டுதல்களையும் ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !
இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான 'மகாஅவதார் நரசிம்மா' முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.
க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய 'மகாஅவதார் நரசிம்மா' இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இது வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமல்ல.. நாடு முழுவதும் ஆழமாக எதிரொலிக்கும் பிரத்யேக கலாச்சார அலையையும் குறிப்பிடுகிறது.
இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துவது அதன் மன்னிப்பு கேட்காத சனாதனி எனும் மையமாகும். இந்து தத்துவம் - இந்து தர்மம் மற்றும் பண்டைய மதிப்பீடுகள் மீது ஒளியை போல் பிரகாசிக்கும் ஒரு கதை.. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தலைமுறைகள் முழுவதும் உரையாடல்களையும் ,விவாதங்களையும் தூண்டும் ஒரு ஆழமான கலாச்சார அனுபவம். மேலும் இது ஒரு திரைப்படத்தை விட அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பார்வையாளர்களும், விமர்சகர்களும் இந்த மகாஅவதார் நரசிம்மாவை ' குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவரும் பார்க்க வேண்டிய படம் ' என்று குறிப்பிடுகிறார்கள். இது பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கும் அதே தருணத்தில் கல்வி கற்பிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் குடும்பங்கள் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றன. மகாஅவதார் நரசிம்மா பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், நம் மதிப்புகள், வரலாறு மற்றும் ஆன்மீக பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்திய சினிமாவை அடித்தளமாகவும், பிரமாண்டமாகவும் கதை சொல்லல் மூலம் மறு வரையறை செய்வதில் புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தில் மகாஅவதார் நரசிம்மா மற்றொரு மைல்கல். 'காந்தாரா', 'கே ஜி எஃப் 'மற்றும் ' சலார் 'ஆகிய படைப்புகளின் மகத்தான வெற்றியை தொடர்ந்து.. இந்த நிறுவனத்தின் அண்மைய வெளியீடான 'மகாஅவதார் நரசிம்மா' எனும் படைப்பும் இந்திய அடையாளத்தில் வேரூன்றிய மற்றும் சினிமா பார்வையில் பலமான கதைகளை வடிவமைக்கும் அவர்களின் பாரம்பரியத்தை தொடர்கிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!
டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான "மதராஸி" படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது.
துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
"மதராஸி" படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில்,
நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு "சலம்பல” பாடலை, மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் SK உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்தப்பாடல் கண்டிப்பாக அனைவரையும் கவரும்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்…,
“மதராஸி உணர்ச்சிப்பூர்வமான கதையுடன், பரபர ஆக்சனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. “சலம்பல” அந்த பரபரப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று விரும்பினோம். நாங்கள் ஒரு வழக்கமான பிரேக்அப் பாடலை உருவாக்க விரும்பவில்லை. மனதை ஆழமாகத் தாக்கும் மற்றும் உங்களை நெகிழ வைக்கும் ஒன்றை உருவாக்க விரும்பினோம். அனிருத் அந்த நெருப்பைக் கொண்டு வந்தார், சிவகார்த்திகேயன் அதற்கு வலு சேர்த்தார். இந்தப் பாடல் வரவிருக்கும் அதிரடிகளுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும்.
டைம்ஸ்/ஜங்லீ மியூசிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மந்தர் தாக்கூர் கூறுகையில்..,
“அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சக்திவாய்ந்த மிகப்பெரிய கூட்டணி. "சலம்பல" என்பது மீண்டும் மீண்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடல். இது முதல் நொடியிலேயே உங்களை ஈர்க்கும். இந்த அற்புதமான பாடலுடன் "மதராஸி" படத்தின் இசையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.”
மேலும் ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோரும் இணைந்து நடித்திருக்கும் “மதராஸி” திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. "சலம்பல" இப்போது அனைத்து தளங்களிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. முழு வீடியோவையும் YouTube ல் பாருங்கள்.
'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமாட்டிக் உலகின் கிளிம்ப்ஸை இந்த டிரெய்லரில் கண்டு ரசிக்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.
'அவதார்: ஃபயர் & ஆஷ்' படத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் புதிய சாகசங்களுக்காக மீண்டும் பண்டோரா உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார்.
மரைன் நாவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நாவி வாரியர் நெய்திரி (ஸோ சால்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகசத்தை பார்வையாளர்கள் பெற இருக்கிறார்கள். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா மற்றும் அமண்டா சில்வர் ஆகியோர் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ஃப்ரீட்மேன் மற்றும் ஷேன் சலெர்னோவின் கதையையும் கொண்ட இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.
'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தை 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா, டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடுகிறது.
ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!
சென்னை, ஜூலை 30, 2025 — ஹார்ட்பீட், ஆஃபிஸ், உப்பு புளி காரம் போன்ற மெகா ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து, ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது — போலீஸ் போலீஸ். இது ஒரு அதிரடியான போலீஸ் டிராமா ஆகும், விரைவில் ஜியோஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்மில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
RJ செந்தில் (சரவணன் மீனாட்சி புகழ்) மற்றும் அறிமுக நடிகர் ஜெயசீலன் முன்னணி வேடங்களில் நடிக்கும் இந்த தொடரில், ஷபானா ஷாஜஹான் (குக் வித் கோமாளி), சுஜிதா தனுஷ் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), சத்யா (பிக் பாஸ்), வின்சென்ட் ராய், மற்றும் பல முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.“முரட்டு ராஜாவும் திருட்டு முரளியும்” எனும் கவர்ச்சிகரமான டேக்லைனுடன், செந்தில் மற்றும் ஜெயசீலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, ஒரு கண்டிப்பான போலீஸ் இடையிலான மோதலை குறிக்கிறது.
போலீஸ் போலீஸ் தொடரில், உணர்ச்சி பூர்வமான மோதல்கள், தீவிர விசாரணைகள் மற்றும் அதிகமான பதற்றம் நிறைந்த காட்சிகள் இடம்பெற உள்ளன. இது ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ், பார்வையாளர்களை முன்னிறுத்தும் தமிழ் மக்களுக்கே உரித்த பாணியில் மேலும் விரிவாக்குகிறது.
ப்ரொமோக்கள், ரிலீஸ் தேதிகள் மற்றும் பிற அறிவிப்புகளுக்காக ஜியோஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா பக்கங்களை தொடர்ந்து பார்வையிடுங்கள்.
இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்
புல்லாங்குழல் இசையில் Male Solo பாடல்கள் எப்போதும் நம் ஆன்மாவில் ஊடுருவி காலத்திற்கும் மறக்க முடியாத பாடலாக அமையும். அந்த வரிசையில் ஹரிசரண்- சச்சின் சுந்தரின் ரொமாண்டிக் சிங்கிள் 'ரதியே ரதியே...' பாடல் விரைவில் வெளியாகவுள்ள 'அந்த 7 நாட்கள்' படத்தில் இருந்து வெளியாகி இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ளது.
சச்சின் சுந்தர் திரைத்துறைக்கு புதியவராக இருந்தாலும் இசைக்கு மெருகூட்டியுள்ளார். 'ரதியே ரதியே...' பாடல் மெல்லிசையாக மட்டுமல்லாது ஆழமான உணர்வையும் கொடுத்துள்ளார். ஹரிசரண் குரல் மனதை வருடும் விதமாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் கதை ஆழமானது. இன்றைய சமூகத்தில் அந்நியப்பட்ட மனதுடன் இருப்பவர் தான் கதாநாயகன். அவருக்கு இணையான, தர்க்கரீதியான வழக்கறிஞர் உண்மைகள் மற்றும் பகுத்தறிவு மூலம் உலகைப் பார்க்கிறார். 'ரதியே ரதியே...' பாடல் இந்த மாறுபட்ட உலகங்களுக்கு இடையே ஒலி பாலமாக மாறி, அவர்களின் காதலை எதிரொலிக்கிறது.
பாடலாசிரியர் மோகன் ராஜா உணர்ச்சிகரமான கவிதையாக பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். லலித் தல்லூரியின் புல்லாங்குழல், பாடலை தெய்வீகமாக மாற்றியுள்ளது. பெண்மையைக் குறிக்கும் புல்லாங்குழலும், இதயத் துடிப்பைக் குறிக்கும் மிருதங்கமும் இணைந்து இந்தப் பாடலை அன்பின் கொண்டாட்டமாக மாற்றியுள்ளன. விஜய் கணேசன் ஒலிக்காட்சிக்கு மேலும் ஆழத்தைச் சேர்க்கும் வகையில் ஒலி, எலெக்ட்ரிக், நைலான் கித்தார் மற்றும் மாண்டலின் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இதற்கு துணையாக டெரெக் மெக்ஆர்தரின் பாஸ் கிதார், பாடல் இசையமைப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது.
இசை அடுக்குகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லலால் 'ரதியே ரதியே...' பாடல் இசை ஆர்வலர்கள் மற்றும் காதலர்களுக்கு பிடித்த பாடலாக மாறியுள்ளது. இந்தப் பாடல் பாரம்பரியம், உணர்வு மற்றும் புதுமை ஆகியவற்றின் சரியான கலவையாகும்.
எம். சுந்தர் இயக்கத்தில் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தை பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார்.
நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா
விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "கிங்டம்" திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது.
விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது:
“என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.
இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.
இந்தப் படம் உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று , அது ரஜினிகாந்த் சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான பிரமோஷன்கள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து பிரமோட் செய்வதென்றால், அது சென்னை மட்டுமே! எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் .
சூர்யா அண்ணா செய்த உதவிக்கு நன்றி. "நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும்… இல்லன்னா பரவாயில்லை" என்று தயங்கி கேட்டேன். ஆனால் அவர் எந்த தயக்கமுமின்றி டீசருக்காக தனது சக்திவாய்ந்த குரலை கொடுத்து உதவினார். அதனால் கிங்டத்தின் தாக்கம் வெளியே வருவதற்கே முன்பே உருவானது.
அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும் மனதையும் ஊற்றியுள்ளார். நேற்று ப்ரீ-ரிலீஸ் இவெண்டில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், இன்று சென்னை வந்து படம் ஓவர்சீஸ் காப்பிக்காக இறுதி பணிகளை பார்வையிடுகிறார்.நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்!
அனிருத் படத்தின் 40 நிமிஷத்தையே பாராட்ட, ரசிகர்கள் படம் மீது நம்பிக்கையுடன் நின்றார்கள். என் வார்த்தைகளை எல்லோரும் நம்ப மாட்டாங்க, ஆனா அனிருத் சொன்னா நம்புவாங்க. அந்த அளவுக்கு அவருக்கு விசுவாசம் இருக்கு.
படம் முழுவதும் வித்தியாசமான சினிமாட்டோகிராபி இருக்கு – கிரீஷ் கங்காதரன் படம் முழுவதிலிருந்தும் 40% வேலை செய்தார், பின் அவர் 'கூலி' படத்துக்காக சென்றுவிட்டார். மீதியை ஜோமோன் சுட்டுள்ளார்.
இந்த கதாபாத்திரத்துக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் பெரிய மாற்றம்.
விரைவில் ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரம் செய்வதற்கும் நிச்சயமாக ஆர்வமிருக்கிறது.
நான் ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது, ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்கள் என்னை ஒரு குடும்ப உறவினராகவே பார்க்கிறீர்கள். இது எனக்கு மிகுந்த நெகுழ்ச்சியை தருகிறது.”
விழா முடிந்ததும், விஜய் தேவராகொண்டா ஊடக நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்து, அன்பும் நன்றியும் தெரிவித்து, அனைவரோடும் நெருக்கமாக பழகினார்.
ஜூலை 31, 2025, அன்று வெளியாகவுள்ள “கிங்டம்”, அதிரடி மற்றும் உணர்வுகளின் மாபெரும் கலவை. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும். இப்படம், சிறந்த தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்டு, திரையரங்கில் விருந்தாக அமையும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா