சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் ரஞ்சித் இயக்கும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'
Updated on : 13 March 2019

தமிழ்த்திரைப்பட உலகில் சோபிக்கும் இயக்குநர்கள் பெரும்பாலும் காதல் படங்களை இயக்குவதன் மூலமே பிரபலமானவர்கள். பிரபல இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன்  மற்றும்  செல்வராகவன்  இந்த வகையைச் சேர்ந்தவர்கள். 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படத்தின் முன்னோட்டம் வழியாக எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, மேற்சொன்ன  இயக்குநர்கள்  வரிசையில் நிச்சயம் சேருவார் என திரையுலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 



 



வருகின்ற 15-ந் தேதி வெளிவர இருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களிடம் கூட மிகுந்த எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி உள்ளது. 



 



“ஒரு இயக்குநராக நான், இந்த படத்தின்  கதை மூலமும், என் படத்தின் பிரதான கதாபாத்திரம் மூலமும் ரசிகர்களை சென்றடைவேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  கௌதம் மற்றும் தாராவாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் வியக்கதக்க முறையில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இவர்களை தவிர மா கா பா ஆனந்த், பாலசரவணன் ஆகியோர் பிரதானப் பாத்திரங்களில் நடித்து படத்தின் நகைச்சுவை பகுதிக்கு மட்டுமின்றி, படத்தின் கதை ஒட்டத்திற்கும் பெரிதும் உதவுகின்றனர்.  நாயகனின் தந்தையாக நடிக்கும் பொன்வண்ணன் சார் அவர்களும் மற்றும் ஒருமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ் அவர்களின் கதாபாத்திரங்களும் மிக முக்கியத்துவம் பெற்றது.  ஒளிப்பதிவாளர் கவன்ராஜ் மற்றும் சாம் சி. எஸ். ஆகியோரின் ஒருங்கிணைந்த பணிமூலம் இந்தப் படம் ரசிகர்களை பெருமளவில் கவரும்.  இது மற்றுமொரு காதல் கதையல்ல,  காதலை பற்றிய கதை” என உற்சாகமாக கூறினார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா