சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

இசை ரசிகர்களிடத்தில் ஒரு எனர்ஜியை தூண்டும் இசையமைப்பாளர்
Updated on : 14 March 2019

ஒரு பெயர் இசை ரசிகர்களிடத்தில் ஒரு எனர்ஜியை தூண்டும் என்றால் அது இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பெயராக இருக்கும். தமிழ் சினிமா வட்டாரத்தில் மிக வேகமாக ஒரு பிராண்டாக வளர்ந்து வருகிறார். அது மார்ச் 15ஆம் தேதி வெளியாகும் "இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்" படத்தில் இன்னும் பெரியதாக தயாராக உள்ளது. அவரது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தின் இசை மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்திருப்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார் சாம் சிஎஸ்.



 



மெல்லிசை படத்துக்கு பிறகு 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி உடன் எனது இரண்டாவது படம். முழுக்க முழுக்க ஒரு காதல் படத்தில் நான் பணிபுரிவது இதுவே முதல் முறை. என் முந்தைய படங்களில், காதல் என்பது கதையின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்திருகிறது, ஒரே நேரத்தில் கதை பல விஷயங்களை சுற்றி சுழலும். ஒரு ஸ்கிரிப்ட்டின் ஆதாரமாக காதல் என்பது வரும்போது இசையமைக்க அதிக வாய்ப்பு உண்டு.



 



காதல் கதைகள் பொதுவாக பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். பொதுமக்களிடமிருந்து இந்த ஆல்பத்துக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளேன். அனிருத் பாடிய கண்ணம்மா பாடல் தான் தற்போது ரேடியோ தரவரிசை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. நான் ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் வரும் யாஞ்சி பாடலில் அனிருத் உடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர் பாடிய பிறகு பாடலின் முழு வடிவமும் வேறு விதத்தில் உருமாறியது. அதேபோல் இந்த கண்ணம்மா பாடலும், அவரது குரலில் முற்றிலும் புதிய ஒரு தோற்றத்தை கொடுத்துள்ளது. மேற்கத்திய பாடல்களுக்கு நாம் செவி சாய்த்தாலும், எப்போதும் நமது லோக்கல் குத்துப் பாடல்கள் மீது நீங்காத காதல் உண்டு. அதை இந்த பாடலிலும் சேர்த்து முயற்சி செய்தோம், அது நன்றாக பொருந்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 



 



நான் இளையராஜாவின் அதிதீவிரமான ஒரு ரசிகன். இந்த படத்திலும் மௌனராகம் படத்தின் ரெஃபரன்ஸ் இடம்பெறும். காதல் படங்களில் எங்கு, எப்போது பாடல் வைக்கப்பட வேண்டும் என்ற ஒரு விதி உண்டு. ஆனால் "இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்" படத்தில் கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகளுக்கு ஏற்றவாறு இசை இருக்கும். கதாபாத்திரங்கள் வாய்மொழியாக வெளிப்படுத்த முடியாத விஷயங்களை இசையால் சொல்ல முயற்சித்திருக்கிறோம், இது மிகவும் சவாலான பணியாக இருந்தது. இளையராஜா சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, ஒரு பாடலையோ அல்லது பின்னணி இசையையோ எங்கு வைக்கக்கூடாது என்பது தான். 



 



படத்தை ஆத்மார்த்தமாக உணர, நான் அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு இசைக்கருவிகளையே பயன்படுத்தி இருக்கிறேன். இந்த படம் என் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நான் நம்புகிறேன். ரஞ்சித் ஜெயக்கொடிக்கும் எனக்கும் ஒத்த சிந்தனை இருக்கிறது. அவர் முதலில் இசையை கேட்பார், அதன்படி காட்சிகளை எழுதுவார். அவருடன் இணைந்து எதிர்காலத்தில் நிறைய திரைப்படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன், ஏனெனில் ஒருவருக்கொருவர் என்ன தேவை என்பதை இருவரும் எளிதாக புரிந்து கொண்டிருக்கிறோம். 



 



ஒளிப்பதிவாளர் இந்த படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார். நான் முதன்முதலில் அவரை சந்தித்தபோது, அவர் ஒரு உதவி இயக்குனர் என்று நினைத்தேன். 22 வயதே ஆன இளைஞர் என்றாலும் அவரது ஒளிப்பதிவு பெரிய அளவில் பேசும். எதிர்காலத்தில் அவர் பெரிய உயரங்களை தொட வேண்டும் என ஆசைப்படுகிறேன். வாழ்க்கையில் எல்லோருமே காதலை கடந்து வந்திருப்பார்கள், அவர்கள் அனைவருமே இந்த படத்துடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா